Thursday, 22 September 2011

உங்களிடம் ஒரு பொறுப்பை விட்டு செல்கிறேன்! எனக்கு என் மக்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது!- திலீபன்



நீங்கள் பரிபூரணமாக கிளர்ந்தெழ வேண்டும். ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அடுத்தவனிடம் மண்டியிட்டு வாழும் இனமாக இருக்காமல் நாம் எமது விடுதலையை அடைத்தே ஆக வேண்டும்.
 இந்த உலகத்தில் அகிம்சை போரரட்டத்தின் வழிகாடி என்று கூறும் மகாத்மா காந்தி வாழ்ந்த இந்திய அரசிடம் அகிம்சை போராட்டத்தின் உண்மை வடிவத்தை எடுத்து காட்ட, தமிழர்களை பாதுகாக்க என்று வந்த இந்திய இராணுவத்திடம், அவர்கள் தமது செயல்பாடுகளில் வழிதவறி செல்லும் போது, தமிழர்களின் விடுதலை போராட்டத்தை வலியுறுத்த திலீபன் 15 செப்டம்பர் 1987யில் சாகும் வரை உண்ணா விரதத்தில் இறங்கினான்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த திலீபன் அன்று நல்லூர் கோவில் முன்றலில் மக்கள் வெள்ளத்திற்கு முன்னின்று மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்றான்,
இருபத்தி நான்கு வருடத்திற்கு பின் இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பின் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக தமிழ் மக்கள் இருக்கும் போது, புலம் பேர் தமிழ் இனமே பொங்கி எழவேண்டிய நேரத்தில் பிரான்சு நாட்டில் தீலிபனை நினைவு கொண்டு பிரான்சில் உள்ள மாநகர சபைகளில் செப்டம்பர் 15 முதல் உண்ணா நோன்பு போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஆறாவது நாளாகிய இன்று கிளிச்சி நகரசபை தின்றலில் கிளிச்சி, நன்தார் தமிழ் சங்கங்கள் உண்ணா நோன்பு போராட்டத்தை நடத்தினார்கள். காலை ஒன்பது மணிக்கு கிளிச்சி மாநகர உதவி நகரபிதாக்கள் உண்ணா நோன்பை தீலீபன் உருவப்படத்திட்கு விளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
பல நூற்றுகணக்கான மக்கள் வந்து இந்த நினைவேந்தளில் கலந்து தமது ஆதரவையும் எமக்கு தந்தார்கள்.மாலை ஆறு மணிக்கு கிளிச்சி மாநகர சபை நகர பிதா திரு ஜில் கட்டுவார் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவும் உண்டு என்று கூறி இந்த உண்ணா நோன்பை முடித்து வைத்தார்.
செப்டம்பர் ௧௫ திகதி ஆரம்பித்த இந்த போராட்டம் ஆறாவது நாளை கடந்து தினமும் ஒரு மாநகர சபையாக தொடர்ந்து செப்டம்பர் 26ஆம் திகதி காலை ஒன்பது மணி முதல் பாரிசில் Ecole Militaire Metroக்கு அருகில் அமைதிக்கான சுவர் ( Mur de la Paix) முன்னாள் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.
- கிளிச்சி- நன்தாரர் தமிழ் சங்கம்

No comments: