Monday, 12 December 2011

ஜெ., கருணாநிதிக்கு நெருக்கடி தரும் உம்மன் சாண்டியின் 'டிரிக்'?


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டியுடன் இணைந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கத் தயார் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உம்மன் சாண்டி தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுள்ளார்.

இதுகுறித்து திருச்சூரில் அவர் கூறுகையில், பிரதமர் நேரம் ஒதுக்கிக் கொடுத்தால், முதல்வர் சாண்டியுடன் இணைந்து அவரை சந்திக்க நான் தயார்.

முதல்வருடன், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து சென்று பிரதமரைச் சந்தித்தால் சுமூக தீர்வு காண முடியும், அதற்கு இந்தப் பயணம் உதவும் என நம்புகிறேன் என்றார் அச்சுதானந்தன்.

ஜெ., கருணாநிதிக்கு நெருக்கடி தர 'டிரிக்'?

இருப்பினும் இந்த சந்திப்புத் திட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. பிரச்சினையைத் தீர்ப்பதை விடவும், தமிழக அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி தரும் விஷயங்களில்தான் கேரள அரசியல்வாதிகள் தீவிரம் காட்டி வருவதாக கருதப்படுகிறது.

உம்மன் சாண்டியும், அச்சுதானந்தனும் சேர்ந்து போய் பிரதமரைச் சந்தித்தால், இதேபோன்ற கோரிக்கை தமிழகத்திலும் எழும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக தெரிகிறது. அப்படி கோரிக்கை எழுந்தால், நிச்சயம் அது ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் தர்மசங்கடத்தில் ஆழ்ததும், நிச்சயம் இருவரும் இணைந்து பிரதமரைச் சந்திக்க மாட்டார்கள். இதை வைத்து பாலிடிக்ஸ் செய்யலாம் என்பது கேரளத் தரப்பின் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதேசமயம், கேரளாவில் அத்தனை கட்சிகளும் ஒருமித்த கருத்தில், ஒரே மாதிரியான முடிவில் இருப்பதை பிரதமரிடம் தெரிவித்து அவருக்கு நெருக்கடி தரும் வகையிலும் சாண்டி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

வில்லன் ஆனது ஏன்?


வில்லன் வேடத்தில் நடிக்கும் விவேக் கூறியதாவது: தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் வழிப்போக்கன்படத்தில் வில்லனாக நடிக்கிறேன். இதை நடிகர் மிதுன் தேஜஸ்வி தயாரிக்கிறார். படத்தின் ஹீரோவும் அவர்தான். திடீரென்று வில்லனாக நடிப்பது ஏன் என்கிறார்கள். என் கேரக்டர் வித்தியாசமாகவும், இதுவரை நான் நடிக்காத கோணத்திலும் அமைந்திருந்ததால் ஏற்றேன். பெங்களூரில் அடுத்த வாரம் ஷூட்டிங் தொடங்குகிறது. கன்னடத்தில் வசனம் பேச வேண்டியிருப்பதால், அதற்கான பயிற்சி பெறுகிறேன்.

விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்: நாளை மறுநாள் தேனியில் நடைபெறுகிறது


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு நீர்த்தேக்க பிரச்சினையில் கேரள அரசின் தான்தோன்றித்தனமான போக்கின் காரணமாக முல்லைப் பெரியாறு பகுதியில் கலவரம் ஏற்படும் அபாயச் சூழ்நிலை உருவாகி வருகிறது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையும் கேரள அரசு மறுத்து வருகிறது.

மேலும் அணை பலவீனமானது என்றும், புதிய அணை கட்டப்போவதாகவும் தன்னிச்சையாக கூறிவருகிறது. தமிழ்நாட்டில் இருந்து சென்ற அய்யப்ப பக்தர்களை தாக்கியும், பேருந்துகளில் சென்ற பொதுமக்களை தாக்கியும், பேருந்துகளை சேதப்படுத்தியும் அங்குள்ள சமூகவிரோதிகள் எத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டாலும், அவற்றை கேரள போலீஸ் கண்டுகொள்ளாமல் இருப்பதும் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றன.

கேரள சட்டமன்றம் கூடி அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து புதிய அணையை கட்ட வேண்டும் என்றும், ஏற்கனவே இருக்கிற முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

இவற்றின் விளைவாக தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பகுதி வாழ் மக்கள் கேரளத்திற்கு செல்லும் போக்குவரத்தை நிறுத்தியும், தமிழ்நாட்டில் இருந்து விளை பொருட்கள் அங்கு செல்லக்கூடாது என்று தடுத்தும், ஆர்ப்பாட்டங்களிலும், பேரணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தமிழ்நாடு அரசு அந்த பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.   முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இவ்வாறு இரண்டு பக்கங்களிலும் கலவரச் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையும், இது இன்னும் அதிகரிப்பதற்கான அபாயகரமான சூழ்நிலை உருவாகி வருவதையும், இந்திய அரசு கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரம் அளிக்கப்பட்ட குழு, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆராய 23-ந் தேதி நிபுணர் குழுவை அனுப்பி வைக்க உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே பற்றி எரிகிற தீயை இந்திய அரசு மேலும் வளர்க்கிற போக்கைக் கண்டித்து தேனியில் 14-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி தொண்டர்கள் பெருவாரியாகக் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

குமுளியில்திரண்டு 50,000 தமிழர்கள் போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம் கார் மீது தாக்குதல்


வரலாறு காணாத வகையில் கேரளாவுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் உள்ள தேனி மாவட்ட மக்கள் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் பேரணியாக கேரளாவை நோக்கி படையெடுத்த நிலையில், இன்று மீண்டும் அதே அளவிலான மக்கள் பெரும் பேரணியாக கேரளாவை நோக்கி சென்று குமுளியில், தமிழகப் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குமுளிக்கு வந்தபோது அவரது காரை மறித்து கூட்டத்தினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் கல்வீசியவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கேரள அரசின் மீதும், கேரளாவில் தமிழர்களைத் தாக்கியவர்கள் மீதும் மக்கள் வரலாறு காணாத கோபத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர். இந்த கோபமும், கொந்தளிப்பும், தேனி மாவட்டத்தில்தான் அதிகம் உள்ளது.

முல்லைப் பெரியாறு பாசன மாவட்டம் என்பதோடு மட்டுமல்லாமல், இத்தனை காலமாக தங்களிடமிருந்து பால், காய்கறி, அரிசி, பருப்பு என அத்தனையையும் பெற்று விட்டு நமது பெண்கள் மீதே கை வைத்து விட்டார்களே என்ற கொந்தளிப்புதான் அது.

இதனால்தான் தமிழகத்தின் பிற பகுதிகளை விட தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேறரளாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை இப்பகுதி மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

ஒரு வாரமாக கடும் போராட்டம்

குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து ஒரு வாரமாக கடைகளை அடைத்தும், கேரளாவுக்கு ஒரு பொருளையும் அனுப்பாமலும், வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து வைத்தும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுயாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் அலைகடலென திரண்டு கேரளாவை நோக்கி பேரணி நடத்தியதால் கேரளாவிலும் பதட்டம் ஏற்பட்டது. இந்தப் பேரணிக்கு யாரும் ஏற்பாடு செய்யவலில்லை. மக்களே திரண்டு பேரணியாக உருமாறி கேரளாவை நோக்கி படையெடுத்து விட்டனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோர் கடும் சிரமப்பட்டு மக்களைத் தடுக்க முயன்றனர். இருப்பினும் குமுளி வரை மக்கள் முன்னேறிப் போய் விட்டனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டு விட்டது. பின்னர் கலெக்டரின் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மக்கள் அவருக்கு்க கட்டுப்பட்டு மீண்டும் திரும்பி வந்தனர்.

2வது நாளாக மக்கள் எழுச்சிப் பேரணி

இந்த நிலையில், இன்றும் மக்கள் பேரணியாக கிளம்பினர். ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம், கே.கே.பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மக்கள் பெரும் ஊர்வலமாக கிளம்பினர்.

விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 15,000 பேர் மோட்டார்சைக்கிள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கிளம்பியுள்ளதால் பெரும் பதட்டம் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் நடந்தே சென்றனர்.

அத்தனை பேரும் குமுளியை நோக்கிச் சென்றனர்.ஆனால் அவர்கள் கேரள எல்லைக்குள் நுழையக் கூடாது என்று போலீஸார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து குமுளிக்கு முன்பு உள்ள தமிழக அரசின் போக்குவரத்துக்க கழக டிப்போ முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தால் எல்லைப் பகுதியில் பெரும் பதட்டமான நிலை காணப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் கார் மீது தாக்குதல்

இந்த நிலையில் போராட்டம் நடத்தியவர்களை சந்தித்து சமரசம் பேசுவதற்காக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கார் மூலம் குமுளி புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவரது காரைப் பார்த்த போராட்டக்காரர்கள், இத்தனை நாட்களாக வராமல் இப்போது வருகிறாரா என்று கூறி கார் மீது கல்வீசித் தாக்கினர்.

இதையடுத்து கல்வீச்சில் இறங்கியவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்து விரட்டினர். பின்னர் பன்னீர்செல்வத்தை பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றது போலீஸ்.

சுடத் தயார் நிலையில் இருந்த கேரள போலீஸ்

முன்னதாக, கேரள எல்லைக்குள் யாரேனும் அத்துமீறி நுழைந்தால் சுடுமாறு இடுக்கி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழக எல்லைப் பகுதியில் குமுளிக்கு முன்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

மக்களின் இந்த எழுச்சிமிக்க போராட்டத்தால் தமிழக, கேரள எல்லையில் தொடர்ந்து இன்றும் பெரும் பரபரப்பு நிலவியது.

முல்லை பெரியாறு அணை பிரச்சினை: ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய், உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு


முல்லை பெரியாறு அணை பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி வழியாக போக்கு வரத்து முழுமையாக தடை செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் 50 ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 லட்சம் லிட்டர் பால் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நடந்து வரும் போராட்டம் காரணமாக காய்கறிகள், பால் சப்ளை கடந்த 6 நாட்களாக தடைபட்டு உள்ளது. இதனால் கேரளாவில் காய்கறிகளின் விலை 5 மடங்கு உயர்ந்து உள்ளது. கத்தரிக்காய், தக்காளி, சாம்பார் வெள்ளரி ஆகியவை கிலோ 120 முதல் 150 வரை விற்கப்படுகிறது. 10 ரூபாய்க்கு விற்ற பூசணிக்காய், புடலங்காய் கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை சில்லறையில் விற்கப்படுகிறது.

கேரளா, இடுக்கி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடக்கிறது. இதில் குறிப்பிட்ட அளவு எஸ்டேட்கள் தமிழகத்தை சேர்ந்தவர் களிடம் உள்ளன. முல்லை பெரியாறு பிரச்சினையால் தமிழக கூலி தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு செல்ல வில்லை. இதனால் செடி களில் பழுத்த பழங்கள் அழுகி வீணாவதால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து தடைப்பட்டு உள்ளதால் ஏல மையங்களில் 10 லட்சம் கிலோ ஏலக்காய் விற்பனை யாகாமல் தேங்கி உள்ளது. இதனால் 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து கேரளா வுக்கு அனுப்பப்படும் காய் கறிகளை அனுப்புவதை நிறுத்தி வைக்க தமிழக வியாபாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் சங்கம் சார்பாக செயற்குழு கூட்டம் கூடியது. கூட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் கடை விடுமுறை விட வேண்டும்.

இதனால் கேரளாவிற்கு அனுப்ப கூடிய சுமார் 1000 டன் காய்கறிகளை நிறுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதனால் அன்று ஒருநாள் மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டு உள்ளது

மகள் ஸ்ருதியை அழ வைத்த கமல்


உலக நாயகன் தனது மூத்த மகள் ஸ்ருதியை கண்ணீர் சிந்த வைத்துள்ளார். என்னடா கமல்ஹாசன் எதற்காக தனது செல்ல மகளை அழ வைத்தார் என்று தானே நினைக்கிறீர்கள். விஷயம் இருக்கு.

ஸ்ருதி இந்தியில் அறிமுகமானாலும் தமிழில் அவர் நடித்த ஏழாம் அறிவு தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியில் இருந்த ஸ்ருதிக்கு தற்போது கூடுதல் இல்லை பன்மடங்கு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ஒய் தி்ஸ் கொலவெறி, கொலவெறிடி.

உலகமெல்லாம் முணுமுணுக்கும் பாடல் கொலவெறிடி. இந்த பாடல் மூலம் தனுஷும், ஸ்ருதியும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

சரி ஸ்ருதியை கமல் எதற்காக அழ வைத்தார் என்ற மேட்டருக்கு வருவோம்.

கமல்ஹாசன் நடித்த மகாநதி, குணா ஆகிய படங்களை ஸ்ருதி 20 தடவைக்கும் மேல் பார்ததுள்ளாராம். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் தனது தந்தையின் சோகமான நடிப்பைப் பார்த்து அழ ஆரம்பித்துவிடுவாராம்.

அடடா என் அப்பா எவ்வளவு தத்ரூபமாக நடித்துள்ளார். அவரது சோகமான நடிப்பைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் கண்கள் கலங்கி கண்ணீர் வடிகிறதே என்று ஸ்ருதி தன் தந்தையைப் பற்றி பெருமைப்படுகிறார்.