![]() |
| சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது' என்று ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். "ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேசச் சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று வெளியிலிருந்து பரிந்துரைப்பதும் அதை அமல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது. ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையையும் மதிக்கும் வகையிலும் காப்பாற்றும்வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். வளர்ச்சிக்கு உற்ற சூழலை மக்கள் உருவாக்க உதவ வேண்டிய கடமை ஒவ்வொரு அரசுக்கும் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் அடிநாதமாகவும் அடிப்படை மனித சுதந்திரத்தின் சாரமாகவும் இருக்கிறது. உலக நாடுகளின் பிரச்னைகளைத் தீர்க்க நம்மிடையே ஒத்துழைப்பு அவசியம்; முரண்பட்டு மோதலில் இறங்கினால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது. தெற்கு சூடானுக்கு வரவேற்பு: நம்மிடைய புதிய உறுப்பினராக பங்கேற்கும் தெற்கு சூடானுக்கு இந்தியாவின் சார்பில் வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமற்ற சூழல்: சர்வதேச அரங்கில் இப்போது பொருளாதார ரீதியாக நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. உலக மயமாக்கல், ஒன்றை மற்றொன்று சார்ந்திருத்தல் போன்ற தத்துவங்கள் காரணமாக எல்லா நாடுகளுக்கும் தானாகவே பலன் கிடைத்துவிடும் என்ற நிலைமை முன்னர் இருந்தது. இப்போதோ தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவற்றை அமல்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறைப் பயன்களைச் சமாளித்தே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். பொருளாதார நெருக்கடி: சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. 2008-ல் தோன்றிய நிதி நெருக்கடி நிலை இன்னமும் தீரவில்லை. பல துறைகளில் இந்த நெருக்கடி மேலும் தீவிரம் அடைந்திருக்கிறது. உலகப் பொருளாதாரத்துக்கே உந்து சக்தியாக விளங்கும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் இப்போது வெவ்வேறு காரணங்களால் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதனாலேயே சர்வதேச அளவில் மூலதனச் சந்தையிலும் பங்குச் சந்தைகளிலும் நிலையற்ற தன்மையே காணப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு பாதிப்பு: இதனால் வளரும் நாடுகளுக்கு பாதிப்பு அதிகம். அவை சர்வதேசச் சந்தைகளில் காணப்படும் நிலைமைகளால் உற்பத்தி இழப்பு, வேலை இழப்பு, வருமானம் இழப்பு ஆகியவற்றைத் தாங்கியாக வேண்டும், அத்துடன் உள்நாட்டில் நிலவும் பணவீக்க விகித அதிகரிப்பால் உயர்ந்துவரும் விலைவாசியையும் சமாளித்தாக வேண்டும். தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை உயர்வாலும் உலக நாடுகள் அனைத்துமே பாதிப்படைந்து வருகின்றன. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இப்போது எல்லா நாடுகளிலுமே அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலை உயர்வாலும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், பழங்கள், காய்கறிகளின் விலை உயர்வாலும் எல்லா நாடுகளிலுமே அரசுகள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அரசியல் கலகங்கள்: மேற்காசியா, வளைகுடா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள நாடுகளில் மக்கள் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகிறார்கள். தங்களுடைய வறுமை, வேலையில்லா திண்டாட்டத்துக்குக் காரணம் ஆட்சியாளர்களின் அக்கறை இன்மையே என்று கருதுகிறார்கள். பயங்கரவாத அச்சுறுத்தல்: இதனிடையே பயங்கரவாதம் வேறு உலகின் பல்வேறு நாடுகளில் தலைதூக்கி வருகிறது. ஏராளமான அப்பாவிகள் இந்த பயங்கரவாதத்துக்கு இரையாகி வருகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டிய கட்டாயம் சர்வதேச சமூகத்துக்குக் குறிப்பாக இந்த பொதுச் சபைக்கு இருக்கிறது. வறுமை, வேலையில்லா திண்டாட்டம்: வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் பல்வேறு துணைப் பிரச்னைகளைத் தூண்டிவிடுகின்றன. சமூகங்களுக்கு இடையே சமமற்ற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பில் ஒரு சில பிரிவினருக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுதல், அடிப்படை மனித உரிமைகளுக்குக்கூட வழியில்லாதிருத்தல் போன்றவற்றால் இளைஞர்கள் புரட்சிப் பாதைக்குச் செல்கின்றனர். இது பல நாடுகளுக்குப் பெருத்த தொல்லையாக உருவெடுத்து வருகிறது. புதிய ஆபத்துகள்: சர்வதேச அளவில் வணிபம் அதிகரிக்க வேண்டிய கட்டத்தில், சர்வதேச வணிகத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக இந்துமகா சமுத்திரத்தில் கடல் கொள்ளைக்காரர்களின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது. இந்தச் சவால்களையெல்லாம் நாம் சந்தித்தே தீர வேண்டும். பாலஸ்தீனப் பிரச்னை: பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்கு இன்னமும் தீர்வு காணப்படாமலேயே இருக்கிறது. இதனால் மத்திய ஆசியாவில் வன்முறையும் அரசியல் நிலையற்றப்போக்கும் தொடருகின்றன. பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகும் நாளை இந்தியா ஆவலோடு எதிர்நோக்குகிறது' என்றார் மன்மோகன் சிங். |
Sunday, 25 September 2011
உள்நாட்டு விவகாரங்களில் அன்னியத் தலையீடு கூடாது: ஐ.நா. சபையில் மன்மோகன் வலியுறுத்தல்
5 வாரத்தில் விழும்; பூமியை நோக்கி வரும் மற்றொரு செயற்கை கோள்
![]() |
| பூமியை நோக்கி வரும் மற்றொரு செயற்கை கோள் இன்னும் 5 வாரத்தில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1991-ம் ஆண்டு காற்று மண்டல ஆராய்ச்சிக்காகவும், புவியியல் ஆய்வுக்காகவும், அமெரிக்காவில் இருந்து 6 டன் செயற்கைகோள் அனுப்பப்பட்டது. அந்த செயற்கைகோள் 14 ஆண்டு பணி முடிந்ததும் கடந்த 2005-ம் ஆண்டு செயல் இழந்தது. விண்வெளியில் செயலற்ற நிலையில் இருந்த அந்த செயற்கைகோள் மெல்ல மெல்ல நகர்ந்து பூமியை நெருங்கியது. 200 துண்டுகளாக உடைந்து சிதறிய அதன் 500 கிலோ பகுதி சிதறல் நேற்று கனடாவில் ஓகோடோக்ஸ் என்ற இடத்தில் விழுந்தது. இது பூமியில் விழுந்த போது மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் செயலிழந்த மற்றொரு செயற்கை கோள் பூமியை நோக்கி வருகிறது. அது ஜெர்மனியால் விண்ணில் அனுப்பப்பட்டது. “ரொசாத்” என அழைக்கப் படும் இந்த செயற்கைகோள் கடந்த 1999-ம் ஆண்டிலேயே செயல் இழந்து விட்டது. கடந்த 12 ஆண்டுகளாக இது விண்ணில் இருந்து படிப்படியாக நகர்ந்து பூமியை நோக்கி வருகிறது. 2 முதல் 4 டன் எடையுள்ள அந்த செயற்கைகோள் பூமியை நெருங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே அது இன்னும் 5 வாரத்தில் பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியை நெருங்கும்போது தூள் தூளாக நொறுங்கி வெப்பத்தில் எரிந்து முழுவதும் சாம்பலாகிவிடும். ஆகவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். |
கடாபி நலமுடன் இருக்கிறார்” மகள் தகவல்
| ||
| லிபியாவில் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு போராட்டத்தின் மூலம் மக்கள் முடிவு கட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். அவரது மனைவி ஷபியா, மகள் ஆயிஷா மற்றும் 2 மகன்கள் குடும்பத்துடன் அல்ஜீரியா நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். அங்கு அவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது அங்கு புதிய அரசு அமைந்துள்ளது. ஆனால் கடாபி எங்கு இருக் கிறார் என்பது மர்மமாக உள்ளது. இந்த நிலையில் தனது தந்தை கடாபி நலமுடன் இருப்பதாக அவரது மகள் ஆயிஷா தெரிவித்துள்ளார். சிரியாவை சேர்ந்த அராஸ் என்ற டெலிவிஷனுக்கு டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவரது டெலிபோன் பேச்சு அந்த டி.வி.யில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. டெலிபோன் செய்தியில் ஆயிஷா கூறியிருப்பதாவது:- எனது தந்தை கடாபி மிக்க நலமுடன் உள்ளார். அவரை தலைவராக பெற லிபியா மக்கள் பெருமைப்பட வேண்டும். புரட்சியாளர்களுக்கு எதிராக அவர் போராடி வருகிறார். அவருக்கு எதிராக புரட்சி செய்த தலைவர்களை நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக பொங்கி எழுந்து நசுக்க வேண்டும். புதிதாக ஆட்சி அமைத்துள்ளவர்கள் தேச துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ளார். |
மகிந்தவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை அவசரமாக நாடு திரும்புவார்?
![]() |
| அமெரிக்காவில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நியுயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. கேணல் ரமேசின் மனைவி நியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ‘தேவி எதிர் ராஜபக்ச‘ வழக்கிலேயே சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக ஈஐஎன் செய்தி கூறுகிறது. இந்த வழக்கை சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22ம் நாள் தாக்கல் செய்திருந்தார். கேணல் ரமேசின் படுகொலை மற்றும் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அவர் அவசரமாக நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
அமெரிக்காவின் வாயை அடைக்க புதிய சட்டம் கொண்டு வருகிறது சிறிலங்கா
![]() |
| பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ளது போன்று உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக லக்பிம நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் 2012 மார்ச்சில் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் புதிய சட்டத்தை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான், மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அனைத்துலக சமூகம் கொழும்பு மீது கொடுத்து வரும் அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ளது போன்று தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஈவா வணசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார். |
வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
| தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்ட் நார்ட் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் கோஸ்டா ஒலிவரா (90). விவசாய பண்ணையில் வேலை பார்த்து வந்தவர். வயதாகிவிட்டதால் தற்போது ஓய்வில் இருக்கிறார். இவருக்கு 2 மனைவிகள், 50 பிள்ளைகள், 100-க்கும் அதிகமான பேரக் குழந்தைகள் இருக்கின்றனர். இவரது முதல் மனைவி பெயர் பிரான்சிஸ்கா. அவருக்கு 17 குழந்தைகள் பிறந்தன. உடல்நலம் பாதிக்கப்பட்டு பிரான்சிஸ்கா இறந்த பிறகு, மரியா சில்வா என்பவரை ஒலிவரா 2-வது திருமணம் செய்தார். அவர் மூலமாக 17 குழந்தைகள். இதற்கு நடுவே, அக்காவுக்கு ஒத்தாசையாக இருப்பதற்காக மரியாவின் தங்கை ஒசலிட்டா அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வந்துபோனார். குழந்தைகளை குளிப்பாட்டுவது, பத்துப் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற உதவிகளை செய்து வந்தார். மச்சினி செய்யும் பணிவிடைகள் ஒலிவராவுக்கு ரொம்ப பிடித்துப்போனது. அவரையும் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார். அவர் மூலம் 15 குழந்தைகள். 2 மகளும் வாழ்க்கை நடத்துவதை பார்க்க, அவர்களது அம்மா வந்தார். அவரையும் ஒலிவரா விடவில்லை. அவர் மூலமாகவும் ஒரு குழந்தை பிறந்துவிட்டது. 17+17+15+1 என்று மொத்தம் 50 குழந்தைகள். கூட்டம் அதிகமானதால் இரண்டு வீட்டில் ஜாம்ஜாம் என்று குடித்தனம் நடத்தி வருகிறார் ஒலிவரா. பெண்கள் பற்றிய பேச்சு எடுத்தாலே புல்லரிக்கிறார். ‘‘கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான். விவசாயம், வேலை என்று நான் கழித்த நாட்கள் வீண் என்று இப்போது புரிகிறது. இவர்கள் 4 பேர் தவிர மேலும் பலருடன் ஜாலியாக இருந்திருக்கிறேன். அனேகமாக என் குழந்தைகள் இந்த ஏரியாவில் மேலும் பலர் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகள் பலரது பெயர்கூட எனக்கு ஞாபகம் இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக தம் அடிப்பதில்லை. மது குடிக்கவில்லை. தலைவலி, முதுகுவலி என எந்த வலியும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். மனைவிகள்தான் என் சந்தோஷத்துக்கு காரணம்’’ என்கிறார் கில்லாடி தாத்தா ஒலிவரா. |
போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்! (வீடியோ இணைப்பு)
| மனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள். ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த்திருக்க மாட்டீர்கள்.. காட்டு விலங்குகள் எப்படி போதை ஏற்றும் என்றுதானே யோசிக்கிறீர்கள்? ஆம் காட்டில் வளரும் ஒரு வகை மரத்தின் பழங்களில் தான் போதை காணப்படுகிறது. இது தெரியாமல் விலங்குகளும் அவற்றை புசித்து உண்டு போதை தலைக்கேறி தள்ளாடி விழுத்து திரிகின்றமையை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. குறிப்பிட்ட இந்தப்பழம் மருளா பழம் என்று அழைக்குப்படுகிறது. இவ்வகை பழங்கள் ஆபிரிக்க காடுகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தப்பழங்களை பறித்து ஆபிரிக்கர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் மதுபானங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆபிரிக்க காடுகளை அண்டி வாழும் குடிவாசிகளும் இவ்வகை பழங்களை புசித்து வருகிறார்கள். இந்தப்பழங்களை புசித்த யானை முதல் குரங்கு வரை போதையில் போடும் ஆட்டங்களை நீங்களும் ரசியுங்கள் |
இரண்டு மைல் நீளமான ஆடையுடன் வித்தியாசமாக நடைபெற்ற திருமணம்
| திருமணத்திற்கு 3km நீளமான ஆடையுடன் ஊர் முழுவதும் வலம்வந்த இந்த ஜோடி கின்னஸ் சாதனைப்புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது. தேவாலயத்தில் இருந்து திருமண மண்டபம் வரை இவர்கள் வீதிவழியே ஊர்வலமாக சென்றனர். இதில் மணப்பெண்ணின் நண்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர், 6000m நீளமான பட்டு துணியில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடை முந்தைய சாதனையை விட 28 மடங்கு நீளமானது. ![]() ![]() ![]() ![]() |
திருகோணமலை வர்த்தகக் கண்காட்சியில் போராயுதங்கள் � பொதுமக்கள் அதிர்ச்சி (படங்கள் இணைப்பு)
| திருகோணமலையில் நடைபெற்று வரும் ஈஸ்ட் எக்ஸ்போ -2011 வர்த்தகக் கண்காட்சியில் சிறிலங்காப் படையினரின் போர்த்தளபாடங்களே பெருமளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, கிராமிய உற்பத்தி, கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் திருகோணமலையில் பிரமாண்டமான வர்த்தகக் கண்காட்சி நேற்று தொடக்கம் நடைபெற்று வருகிறது. சுமார் 500 வரையான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை நேற்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திறந்து வைத்தார். வர்த்தகக் கண்காட்சி என்று கூறப்பட்டுள்ள போதும் சிறிலங்காப் படைகள் அரங்குகளை அமைத்து தமது போர்த்தளபாடங்களை இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர். சிறிலங்கா விமானப்படை பெல் மற்றும் எம்.ஐ 24 தாக்குதல் உலங்குவானூர்திகளையும், பி.ரி-6 பயிற்சி விமானத்தையும் காட்சிப்படுத்தியுள்ளது. சிறிலங்கா கடற்படை படகுகள் மற்றும் போராயுதங்களைக் கொண்ட அரங்குகளை அமைத்துள்ளது. சிறிலங்கா இராணுவம், 85,மி.மீ, 122 மி.மீ,130 மி.மீ நீண்டதூர ஆட்டிலறிகள், பல்குழல் பீரங்கி, போர் டாங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான சுடுகலன்கள், படைத்தளபாடங்களையும் இந்தக் கண்காட்சியில் பார்வைக்கு வைத்துள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு மிரட்சியூட்டும் வகையில் படைத்தளம் போன்ற அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. வர்த்தக கண்காட்சியில் சிறிலங்காப் படையினர் அரங்குகளை அமைத்து ஆயுதங்களைக் காட்சிப்படுத்தியிருப்பது இதனைப் பார்வையிட்ட பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
நயினை நாகபூசணியின் புனிதத் தன்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் சிங்கள மக்கள்!!! (வீடியோ இணைப்பு)
| வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாளாந்தம் அலைகடல் என மக்கள் வருகை தருவது அதிகரித்து வருகின்றது. இதில் தென்பகுதியில் இருந்து வரும் சிங்கள மக்களின் அளவு மிக மிக அதிகமாகவே காணப்படுகின்றது. இப் பகுதியில் விகாரை இருப்பதுவே இதற்குக் காரணம் எனலாம். இவ்வாறு விகாரைக்கு விஜயம் செய்யும் சிங்கள மக்கள் நயினை நாகபூசணித் தாயையும் தரிசிக்கத் தவறுவதில்லை. அவ்வாறு தரிசிக்க வரும் சிங்கள மக்கள் தாங்கள் அணிந்திருக்கும் பாதணிகளை ஆலயத்திற்குள் போட்டுக் கொண்டு செல்வதும், அல்லது ஆலய முன்றலில் கழற்றி விட்டுச் செல்வதும் ஆலயத்தின் புனிதத் தன்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் ஒரு செயற்பாடாகவே அமைகின்றது. ஆனால் இவ்வாறு பாதணிகளைக் கழற்றி விட்டுச் செல்லும் மக்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என ஒரு வயதுபோன ஐயா வழமையாக கூறிக் கொண்டிருப்பார். இருந்தும் அவரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுச் சிலர் பாதணிகளை ஆலய முன்றலில் கழற்றி விட்டுச் செல்கின்றனர். அல்லது தாங்கள் கொண்டு வரும் பைக்குள் பாதணிகளைப் வைத்துக் கொண்டு அப்படியே ஆலயத்திற்குள்ளும் செல்கின்றனர். அவ்வாறு கழற்றி விட்டுச் செல்லும் பாதணிகளை இந்த ஐயா தான் வைத்திருக்கும் தடியால் தட்டி விடுவதும் வழமை. இவ்வாறு நாளாந்தம் நடைபெறுவது வழமையாகி விட்ட ஒன்று. இருந்தும் முழுக்க முழுக்க நாம் சிங்கள மக்கள் மீது குறைகூறுவது தவறான விடயம். ஏனென்றால் இந்து ஆலயங்களின் நடைமுறைகள் சிங்கள மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அதனை நாம் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் விளங்கப்படுத்திப் பதாகைகளைத் தொங்க விடுவது கட்டாய தேவையாகும். இதனை ஆலய பரிபாலன சபை முதன்மைப்படுத்தி செய்ய வேண்டிய ஒன்றாகும். |
சர்வதேச ரீதியான தீர்வு சாத்தியப்படாது!- ஐ.நா. கூட்டத்தில் ஜனாதிபதி உரை (வீடியோ இணைப்பு)
கடந்த கால கசப்பான அனுபவங்களை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 66ம் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முயற்சிக்கப்படும். மக்களின் மனதில் ஏற்பட்ட துன்பியல் உணர்வுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கு மாகாணத்தில் படையினர் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்றனர். வடக்கு மாகாணத்தில் மிகவும் சொற்ப அளவிலான படையினரே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். யங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து திடமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். உலகில் சிறிய நாடுகள் உதாசீனம் செய்யப்படக் கூடாது, அவ்வாறான நாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனித உரிமை என்னும் பெயரில் நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கியூபாவிற்கு பூரண ஆதரவினை தெரிவிப்பதாகவும், நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படும் போது ஒட்டுமொத்த சனத்தொகை மற்றும் எதிர்கால சந்ததியினர் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எமது நாட்டு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு சர்வதேச ரீதியான தீர்வுகளை வழங்க முடியாது, அது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ரீதியான தீர்வு சாத்தியப்படாது- மகிந்த ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ இலங்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கு சர்வதேச ரீதியில் தீர்வு தேடுவது என்பது சாத்தியமற்ற விடயம் என்று கூறியுள்ளார். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கிலிருந்து கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தை அணுகக்கூடாது என்றும் நியூயோர்க்கில் ஐநா பொதுச்சபையின் 66வது அமர்வில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தொலை தூரத்திலுள்ள நாடுகளிலிருக்கும் நண்பர்கள், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வரலாற்றின் புதிய தருணத்தில் தாங்கள் சந்தித்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் நட்புறவு மற்றும் நல்லெண்ண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் மகிந்த கூறினார். உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வு மூலமே இலங்கைச் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று தமது மக்கள் நம்புவதாக கூறிய மகிந்த, உலகளாவிய ரீதியில் தீர்வை தேட முனைவது யதார்த்தத்தில் சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டார். இது தவிர, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்றும் ஐநா பொதுச்சபையில் கூறிய இலங்கை ஜனாதிபதி சுற்றுச்சூழல் மாசடைதல், உலகமயமாதல், சர்வதேச நிதிக் கொள்கைகள் தொடர்பாகவும் இலங்கையின் நிலைப்பாட்டை தெரிவித்தார். |
இலங்கையின் அமைவிடத்தை தெரியாத அரச எம்.பி (வீடியோ இணைப்பு)
| இலங்கையின் அமைவிடம் குறித்து சரியாக தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கின்றார். இவ்ர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகர்களில் ஒருவர். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் கடந்த காலங்களில் முக்கியமான அமைச்சுப் பதவிகளையும் வகித்து இருந்தவர்,கவிஞரும்கூட. ஆம். இவர் சாட்சாட் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பிதான். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அமர்வு ஒன்றில் கலந்து கொண்டு இவர் உரையாற்றி இருந்தார். இலங்கை தென்மேற்கு ஆசியாவில் அமைந்து உள்ளது என பேச்சின் இடையில் சொன்னார். அஸ்வர் பேசி முடித்தவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஹர்ஷா டி சில்வா எழுந்து பேசினார். புவியியல் பாடத்தை அஸ்வர் எம்.பி சரியாக படித்து இருக்கவில்லை, ஏனெனில் இலங்கை தென்மேற்கு ஆசியாவில் அமைந்து இருக்கவில்லை, தெற்கு ஆசியாவில் அமைந்து உள்ளது, தரம் 02 இல் பயில்கின்ற மாணவர்களுக்குகூட இது தெரியும் என்றார். எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஸ்வரை கிண்டல் செய்து எக்காளமிட்டு சிரித்தனர். |
கொட்டும் மழையிலும் ஐ நா முன்றலில் பொங்கியெழுந்த பொங்கு தமிழர் (படங்கள் இணைப்பு)
| வெள்ளிக்கிழமை, செப்டெம்பர் 23, 2011 காலை 10 மணிக்கு ஆரம்பனான நாடு கடந்த தமிழீழ அரசால் ஒழுஙுகு செய்யப்பட்ட வடஅமெரிக்கத் தமிழரின் பொங்கு தமிழ்ப் பேரணி, கொட்டும் மழையிலும் பல சாதனைகள் படைத்து உலகத் தமிழினத்தைப் பெருமைப்பட வைத்துள்ளது. இதுவரை ஐநா சபை கண்டிராத அளவுக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் மானத் தமிழர்களின் உணர்ச்சிவசமான பேரொலியும், கோசங்களும், அதற்கும் மேலாக அவர்கள் தாங்கிநின்ற பதாதைகளும் அங்கு வ்ந்த உலகத் தலைவர்களையும் அவர்களின் உள்ளத்தையும் உறுத்தும் அளவிற்கு பொங்கு தமிழ்ப் பேரணி அமைந்தது கண்டு பெருமையடையாத தமிழர் எவருமே இருக்கமுடியாது. நாடுகடந்த தமிழீழ அரசால் ஒழுஙுகு செய்யப்பட்ட இந்தப் பேரணியின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ராம் சிவலிங்கத்தின் ஆரம்ப உரையுடன் இந்த நிகழ்வு ஆரம்பமானது. அவர் தனது உரையில் தமிழர் தேசத்துக்கும் சிங்கள் நாட்டுக்கும் நடந்த யுத்தத்தில் சில சக்தி வாய்ந்த நாடுகள் சிங்கள அரசு பக்கம் சார்ந்து செயற்பட்டதாலும், பல நாடுகள் பார்த்தும் பாராமுகம் காட்டியதாலுமே இன்று நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார். எம்மை இந்த நிலைக்குக் கொண்டுவரக் காரணமான சர்வதேச சமூகம் எமக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறது என்றும், இவர்கள் எமக்கு உதவி புரிவதற்கான தகுந்த தருணம் இதுவே எனவும் அவர் தன்து உரையில் மேலும் தெரிவித்தார். கனடா நாட்டின் மார்க்கம் நகர கவுன்சிலர் லோகன் கணபதி தனது சிறப்ப்புரையில், ஆப்ரகாம் லிங்கனின் துணிவுமிக்க செயலால் சட்டமூலமாக அடிமைத்தனத்தை அகற்றிய இந்தப் புனித நாட்டிற்கு நான் கூறும் செய்தி என்னவென்றால் தமிழ் ஈழத்தில் தற்போதும் எம்மக்கள் திற்ந்த வெளி மறியலில்தான், இராணுவத்தின் மத்தியில், அடிமைகளாக இருக்கிறார்கள் என்றும், ஒபாமா அரசு இன அழிப்பைச் செய்த, போர்குற்றங்கள் புரிந்த, மனித உரிமைகளை மீறின ராஜபக்ச'வையும் அவருக்கு உடந்தையாகச் செயற்பட்ட மற்றைய சில குற்றவாளிகளையும் அடிமைத்தனத்தை அகற்றிய புனித நாடான அமெரிக்காவுக்குள் அனுமதித்திருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார். பிரதமர் கௌரவ விசுவநாதன் உருத்திரகுமாரன் உரையாற்றுகையில், ஐ நா சபையின் அறிக்கையை மக்கள் மயப்படுத்தியதன் அவசியத்தையும், அதன் பிரகாரம் நாம் எடுத்த கையெழுத்து வேட்டையின் தேவையையும் எடுத்தியம்பினார். சர்வதேச ரீதியில் கையெழுத்துப் போட்ட பத்து இலட்சம் மக்க்களுக்கும், அதன் வெற்றிக்கு உதவிய பல்வேறு கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசும் உலகத் தமிழினமும் நன்றி கூறுவதில் பெருமையடைகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் தமிழ்த் தனிநாடு, அதாவது தனிநாடாம் தமிழீழம், மட்டுமே எமது தாகத்தைத் தணிக்கும் எனவும், அது கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் எனவும் பலத்த கரகோசத்தின் மத்தியில் திடமாகவும் திடகாத்திரமாகவும் கூறினார். அத்துடன் எமது நோக்கம் நிறைவுபெறும் வரை நாம் சட்ட ரீதியாகவும், அரசியல் அடிப்படயிலும் எமது எதிர்ப்பு நடவடிக்ககளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க் வேண்டியதன் அவசியத்தையும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார். ஐ நா அமைப்பும், சர்வதேச சமூகமும் தமிழினத்துக்கு நன்மைதரும் விதத்தில் விரைவில் ஓர் நல்ல தீர்வுக்கு வருவதற்கான வழிவகைகளுக்கான அத்தனை செயற்பாடுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்ந்தும் செய்துவரும் என்றும் உறுதியளித்தார். கலாநிதி ராம் சிவலிங்கம் தனது நன்றியுரையில், பொங்கு தமிழ் நிகழ்வைச் சிறப்பாக நடாத்த அங்கு வருகை தந்து சிறப்புரையாற்றிய கனடா நாட்டின் மார்க்கம் நகர கவுன்சிலர் லோகன் கணபதிக்கும், எமக்கு உறுதுணையாக இருந்து ஈடில்லா உதவி செய்த அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும், பொருளுதவி புரிந்த மருத்துவர்களுக்கும், வர்த்தகப் பெருமக்களுக்கும், நிகழ்வின் ஒழுங்குகளைக் கவனித்த நாடுகடந்த தமிழீழ அரசின் தொண்டர் படைக்கும், அதன் பிரதிநிதிகளுக்கும், கொட்டும் மழையிலும் வருகை தந்து சரித்திரம் படைத்த வட அமெரிக்க மறத்தமிழருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசு சார்பில் நன்றியைத் தெரிவித்து நிகழ்வை நிறைவுசெய்தார். இந்தப் பொங்கு தமிழ் தமிழ்ப் பேரணியின் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானம் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் அனுமதியுடன் நிறைவு செய்யப்பட்டமை இந்தப் பேரணியின் முக்கிய அம்சமாகும். இந்த நிகழ்வினை ஊடகத்துறை அமைச்சர் கௌரவ சாம் சங்கரசிவம் அவர்கள் தொகுத்து வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. கலாநிதி ராம் சிவலிங்கம் துணைப் பிரதமர் நா. க.த. அ sivalingham@sympatico.ca ![]() ![]() ![]() |
ஈழத்தமிழ் அகதிகளுக்கு சார்பாக இந்திய நீதிமன்றத்தில் தீர்ப்பு
![]() |
| அகதிகள் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக தனியான சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய நீதிமன்றம் ஒன்று வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்த அகதி ஒருவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்த இந்திய அரசுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே துவாரகா நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்த சந்திரகுமார் (வயது 39) என்பவர், போலிக் கடவுச்சீட்டு மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்ற போது புதுடெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஆறு மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது. சிறிலங்காவில் தனக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று அவர், இந்திய அரசின் நாடுகடத்தும் முயற்சிக்கு எதிராக துவாரகா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பை துவாரகா மெட்ரோ பொலிற்றன் மஜிஸ்ரேட் நீதிபதி அருள் வர்மா கடந்த 20ம் நாள் வெளியிட்டார். இந்தத் தீர்ப்பில் சந்திரகுமாரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்று நீதிபதி கூறியுள்ளார். அத்துடன், “ பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் சிறிலங்கா அகதிகளை வெளிநாட்டினர் என்று கருத முடியாது. அகதிகளை வரவேற்கும் இந்தியா, அவர்களுக்காக தனியான சட்டம் இயற்ற முன்வராதது வருந்தத்தக்கது. அகதிகளைக் கட்டாயப்படுத்தி தமது நாட்டுக்குத் திருப்பி அனுப்பவும் முடியாது. அகதிகளுக்கு தேசிய அளவில் சட்டம் இயற்றுவது அவசியம் என்று இந்திய சட்ட ஆணையமும், தேசிய மனிதஉரிமைகள் ஆணையமும் வலியுறுத்தியுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு அகதிகளுக்கு தனியான சட்டம் இயற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று நீதிபதி அருள் வர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வாதிட்ட சட்டவாளர் முத்துகிருஸ்ணன் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், “திகார் சிறையில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு சட்ட ஆலோசனை கிடைப்பதில்லை. இதனால் வேறு வழியில்லாமல் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக உள்ளது. அகதிகள் விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்ட ரீதியாகப் போராட உள்ளேன். நீண்டகாலமாக இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இந்தத் தீர்ப்பினால் சிறையில் வாடும் இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படமாட்டார்கள் என்று நம்புகிறேன்“ என்று தெரிவித்தார் |
200 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்தது :
| விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கடந்த 2005-ம் ஆண்டில் முடிவடைந்தது. இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கைகோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கைகோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் விழும் என “நாசா” விண்வெளி மையம் அறிவித்தது. நேற்று இரவு 10.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அது பூமியில் மோதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் அது பூமியில் விழவில்லை. இருந்தாலும் அது பூமியை நெருங்கி விட்டது. இன்றுக்குள் பூமியை மோதும் என “நாசா” விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் கனடாவின் ஓகோடோக்ஸ் மாகனத்தில் முற்பகலில் செயற்கைகோள் துண்டுகள் விழுந்துள்ளதாக ட்விட்டரில் “நாசா” விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் |
Subscribe to:
Comments (Atom)



















