Tuesday, 28 June 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி நடிகர், நடிகைகள் பேரணி


Photo

இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி நடிகர், நடிகைகள் பேரணி[ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 12:47.57 PM GMT ]
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, ராதாரவி, நடிகைகள் மனோரமா, குயிலி உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர்.
இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார்,
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம்.
இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்தோம்.
இலங்கை அரசு மீது மத்திய அரசு உடனே பொருளாதார தடையை விதிக்க வேண்டும். கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை முதல்வரிடம் கேட்டோம்.
மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தருமாறு முதல்வரிடம் வலியுறுத்தினோம்.
இப்போது பல்வேறு பணிகள் இருப்பதால், பாராட்டு விழாவை பிறகு நடத்தலாம் என்று அவர் கூறினார்.

முத்தம் கொடுத்த யுவதி சீன மக்களின் ஹீரோயின் ஆகி விட்டார். (வீடியோ இணைப்பு)

குடும்பப் பிரச்சினைகளால் மனம் உடைந்து போய் இருந்த 16 வயது பையன் ஒருவர் உயரிய பாலம் ஒன்றில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வார் என்று மிரட்டிய சம்பவம் சீனாவில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றது.


எவரும் நெருங்கி வந்து விடாதபடி கத்தியை உடைமையில் வைத்துக் கொண்டு மிரட்டினார் பையன். பொலிஸார் என்ன செய்யலாம் ? என்று அறியாமல் திகைத்து நின்றனர். பொதுமக்கள் குவிந்து நின்று வேடிக்கை பார்த்தனர்.

அப்போது வந்து சேர்ந்தார் 19 வயது இளம் யுவதி ஒருவர். பையனின் காதலி என்று சொல்லிக் கொண்டார். பையன் நின்ற இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். பையனுடன் பேச்சுக்கள் நடத்தினார். திடீரென்று பையனை கட்டி அணைத்து முத்தங்கள் கொடுத்தார்.

இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று உணர்ந்து வேகமாக செயல்பட்ட பொலிஸார் பையனை அலக்காக தூக்கிச் சென்றனர். பையன் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுப்பட்டார். முத்தம் கொடுத்த யுவதியோ சீன மக்களின் ஹீரோயின் ஆகி விட்டார். சம்பவங்களுடன் கூடிய காட்சிகள் இணைய உலகில் மிகுந்த பிரபலம் அடைந்து உள்ளன.