Tuesday, 24 January 2012

பெண் உறுப்பினால் புல்லாங்குழல் வாசிக்கும் விசித்திர பெண்(வீடியோ இணைப்பு)

எத்தனையோ விதமான இசைக் கருவிகளினால் இசைக்கப்படும் இசையை கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள்.
ஏன் நீங்களும் பல இசைக்கருவிகளை இசைந்தும் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு ஒரு பெண்மணி வித்தியாசமாக இசை அமைக்கிறார் பாருங்கள்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் எப்படி புல்லாங்குழல் இசையை தனது பெண் உறுப்பில் இருந்து வர வைக்கிறார் என்று பாருங்கள்.
 இது சற்று ஆபாசமாக இருந்தாலும் நகைச்சுவைக்காக இங்கு இணைக்கப்படுகின்றது.
வீடியோ

13,000 மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ் ரத்து-உடனே பணியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களையும் உடனியாக பணியில் சேர்க்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த நீக்கத்தையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தின்போது ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் இதுபோல பணியாற்றி வந்தனர். பஞ்சாயத்தால் மேற்கொள்ளப்படும் பணிகளை இவர்கள் செய்து வந்தனர். இவர்கள் உள்ளாட்சித் துறையின் கீழ் வருவார்கள்.
தற்காலிகப் பணியாளர்களான இவர்களுக்கு கடந்த திமுக அரசு அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வரை பணி நீட்டிப்பு ஆணை வழங்கியிருந்தது. இந்த நிலையில் நவம்பர் 8ம் தேதி இரவோடு இரவாக அத்தனை பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் நலப் பணியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நீக்கத்தை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்களின் 2 சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பணி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில் மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கத்தை ரத்து செய்வதாகவும், உடனடியாக அனைத்து மக்கள் நலப் பணியாளர்களையும் தமிழக அரசு மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது.
ஏற்கெனவே அரசின் பணி நீக்க உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் மூன்று முறை இடைக்கால தடை விதித்தது. ஆனாலும் தமிழக அரசு மக்கள் நலப் பணியாளர்களை மறுபடியும் பணியமர்த்தாமல், வழக்கு மேல் வழக்கு தொடுத்து வந்தது. இப்போது தனது இறுதித் தீர்ப்பையும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு சாதகமாகவே நீதிமன்றம் வழங்கியுள்ளது. அடுத்து என்ன செய்யப் போகிறது தமிழக அரசு என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினி பெயரில் உலகின் முதல் ஆஃப் லைன் இணையதளம்

 


பொதுவாக ஒரு இணைய தளம் இயங்க வேண்டுமென்றால் இன்டர்நெட் இணைப்பு அவசியம். ஆனால் இப்போது 'ஆல்அபவுட் ரஜினி' புதிய இணையதளத்தை உருவாக்கி, அதை இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஆஃப் லைனிலேயே இயங்க வைத்துள்ளனர்.

இந்த இணையதளம் குறித்த தகவல் பரவியதுமே ஏக வரவேற்பு கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார், இதனை உருவாக்கியுள்ள தேசிமார்டினி.காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குருபக்ஷ் சிங்.

முடிவான சோதனைகளுக்குப் பிறகு இந்த தளத்தினை இயங்க வைத்து, அதன் குறியீடுகள் குறித்தும் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, இன்டர்நெட் இணைப்பில்லாமல் ஆஃப் லைனில் இயங்கும் உலகின் முதல் இணையதளம் 'ஆல்அபௌட்ரஜினி'தான் என்று கூறுகிறார்கள்!

ரஜினி என்றாலே அசாதாரணம் என்று அர்த்தம் என்ற பொருளில் வட இந்தியாவில் பிரபலமாகிவிட்ட கமெண்டுகள் ஏராளம்.

இப்போது 'ரஜினியின் பேரை வச்சா இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாமலே இணையதளம் இயங்கும்,' என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

அதே நேரம் இது பழைய டெக்னிக்தான் என்றும், சின்ன ஸ்கூல் பசங்களே இந்த வேலையைச் செய்துவிடுவார்கள் என்ற விமர்சனமும் இல்லாமல் இல்லை.

இன்டநெட்டே இல்லாமல் இந்த தளமும் உண்மையில் இயங்குவதில்லை. இந்தத் தளத்தை திரையில் காண இன்டர்நெட் கனெக்ஷன் அவசியம். தளம் தெரிந்த பிறகு, இணைப்பை துண்டித்துவிட்டு, அதில் உள்ள மூன்று பகுதிகளுக்குள் நுழைந்து பார்க்க முடியும். எனவே இது ஒரு ஏமாற்று வேலை என்பவர்களும் உண்டு.

எப்படியோ, அவரவர் வெப்சைட் ஆரம்பித்து, அதை பிரபலமாக்க படாத பாடுபட்டுக் கொண்டிருக்கும் சூழலில், ரஜினி என்ற பயன்படுத்தி வெப்சைட் ஆரம்பித்தவர்களுக்கு கிடைத்தது ஜஸ்ட் இரண்டே நாளில் அபார விளம்பரம்... பிரபலம்!


அந்த இணையத்தளத்திற்கு செல்ல