Tuesday, 30 October 2012

இணையத்தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் எப்படி

மன்னிக்கவும் இந்தப் பதிவுகள் என் நண்பர்
ப்ளாக்கர் வலைப்பூவில் எடுக்கப்பட்ட பதிவுகள்     (  நன்றி  GOWSHIKAN   )           
  ஆம், நான் மாதம் 128,300 சம்பாதித்து கொண்டு இருக்கிறேன். இந்த நிலையை அடைய எனக்கு ஒரு வருடம் ஆனது
`


 என்னைப் போலவே எனது நண்பர்களும் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

எனக்கும் முதலில் அந்த இணையத்தில் சேர்ந்து மூன்றாவது மாதம் தான் $4.00 டாலர் கிடைத்தது. அப்பொழுது நான் மனம் சோர்ந்து விட்டேன். என்னை இணைத்துவிட்ட நண்பர் (அவர் மாதம் $5000 டாலர் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்) கூறினார் மனம் தளர்ந்து விடாதே நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல் அவர் கூறிய டிப்ஸ் மூலம் நான் இப்பொழுது இந்த நிலையை அடைந்துள்ளேன்.
இணையத்தில் பலர் ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில்லை. உலகில் வாழும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை பணம் ஏனெனில் பணத்தை கொண்டே நாம் வாழத் தேவையான உணவு, உடை, உறைவிடம் எல்லாவற்றயும் பெற்றுகொள்ள முடியும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.
அந்த வகையில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலர் இணையத்தில் பணம் சம்பாதிக்க முயன்று சரியான பாதை தெரியாததால் தோற்றுப் போயிருக்கலாம். இன்னும் பலர் இதனைப்பற்றி அறியாமலே இருக்கலாம். கவலை விடுங்கள். உங்களுக்காகவே இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பணம் சம்பாதிப்பது உங்கள் எண்ணமா ? உங்கள் பதில் ஆம் எனில் நீங்கள் வரவேண்டிய சரியான இடத்திற்குத் தான் வந்து உள்ளீர்கள்.
இங்கே நான் குறிப்பிடப்போகும் வழிமுறைகள் வெறும் கட்டுக்கதைகளோ, கற்பனைக்கதைகளோ இல்லை இவை யாவும் எம்மால் பரீட்சிக்கப்பட்டு நடைமுறையில் வெற்றியாக்கப்பட்ட வழிகளே ஆகும். இதற்கான ஆதாரங்களையும் நான் உங்கள் பார்வைக்கு சம்ர்ப்பித்துள்ளேன். எனவே அனைவரும் நம்பிக்கையாக முயலாம். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.
நம்பிக்கையோடு தொடங்குங்கள் வெற்றி உங்களுக்கே.
என் வாழ்க்கையே அடியோடு மாற்றிய இந்த தளம் பல வாடிக்கையாளரின் நன் மதிப்பை பெற்ற தளம் ஆகும்.
இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே.
உலகின் No. 1 தரத்தில் இருக்கும் இந்த தளம் 2008 முதல் இயங்கி வருகிறது. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 19,936,869, அதன் உறுப்பினர்களுக்கு செலுத்திய தொகை 83,461,129 $ ஆகும்.
நான் தளத்தின் பெயரை குறிப்பிட்ட உடன் இந்த தளம் தானா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நான் இந்த தளத்தில் தான் 10,000 $ டாலர் சம்பாதித்து கொண்டு இருக்கிறென். அதற்க்கான ஆதாரங்களை பதிவின் முடிவில் உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்து உள்ளேன்.
எனது வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த தளம் கீழுள்ள தளம் தான் அது.

Neobux-ல் இணைவதற்க்கான தகுதிகள்:
இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே. ஆனால் பின்வரும் தகுதிகள் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில் பணம் மீட்ட முடியும். எனவே பின்வரும் தகுதிகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இத்தளத்தில் இணையுங்கள்.
  • தினந்தோறும் 10 நிமிடம் நீங்கள் இதற்கு செலவிட வேண்டும். அப்பொழுதான் உங்கள் நண்பர்களின் வருவாயைப் பெறமுடியும்.
  • உங்களிடம் இணைய இணைப்புடன் கூடியா சொந்த கணினி இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு கணினியில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க வேண்டும்.
  • பொறுமை, தன்னம்பிக்கை: ஆரம்பத்தில் சிறிதளவு பணம் மட்டுமே சம்பாதிக்க முடிவதால் இடையில் மனம் தளராமல் தொடந்து லிங்கை பார்வையிடுவதுடன் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த பின் அப்கிறேடுகளை மேற்கொண்டு சம்பாதிக்கலாம்.
  • PAYPAL அலலது PAYZA அக்கவுண்ட் கண்டிப்பாக தேவை. நீங்கள் சம்பாதித்த பணம் இங்கு தான் அனுப்பிவைக்கபடும். இதிலுருந்து பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.





















Neobux -ல் சேருவது எப்படி ?
click here
Neobux -ல் சேருவது எப்படி என்று இப்போது பார்க்லாம்.
தேவையானவை:
  1. ஈ மெயில் முகவரி
  2. PAYPAL முகவரி
  3. alertpay( payza)














1. கீழுள்ள படத்தை கிளிக் செய்து Neobux தளத்திற்கு செல்லவும்.
2. வரும் திரையில் Register என்பதனை கிளிக் செய்யுங்கள்.

3. வரும் பார்மில் உங்கள் விபரங்களினை கொடுத்து Continue பட்டனை அழுத்துங்கள்.

4. உங்கள் ஈ மெயிலுக்கு லாகின் செய்து Neobux இல் இருந்து வந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.

5. மீண்டும் Neobux தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள் Username, Password என்பவற்றை இட்டு Neobux தளத்தினுள் லாகின் செய்யுங்கள்.

6. விளம்பரத்தை க்ளிக் செய்க :
லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.

உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திர்கள் என இருக்கும். இப்பொழுது பணம் சம்பாதிக்க View Advertisement- ஐ க்ளிக் செய்யவும். கீழே உள்ள படத்தைப்போல் நீங்கள் காண்பீர்கள்.

இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன. முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஒரு சிவப்பு புள்ளி ஒன்றைக் காண்பீர்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.

அந்த சிவப்பு புள்ளியை க்ளிக் செய்யவும் இப்பொழுது விளம்பரமானது ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்
இப்பொழுது இடது மேல் மூலையில் இது மாதிரி காண்பீர்கள்
பிறகு இப்படி,
இறுதியாக இப்படி,
மேலே உள்ளது போல் வந்தவுடன் அதில் Close-ஐ க்ளிக் செய்யவும். இதே போல் அனைத்து விளம்பரத்தையும் க்ளிக் செய்யவும். அனைத்து விளம்பரங்களையும் க்ளிக் செய்த பிறகு உங்கள் அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்திருக்கும்.
தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.
Neobux இல் நிறைய சம்பாதிக்கும் வழிகள்:
1. Direct Referrals
2. Rented Referrals
3. Adprize
4. Upgrade Golden Membership
5. Mini Jobs
1. Direct Referrals என்றால் என்ன ?
Direct Referrals என்பது உங்களுடைய Referral Link மூலம் சேர்ந்த உங்களுடைய நண்பர்கள் ஆவர்கள். இவர்கள் க்ளிக் செய்யும் ஒவ்வோரு விளம்பரத்திற்கும் உங்களுக்கு 0.005 $ கிடைக்கும். உங்களுடைய Referral Link-கை நிங்கள் ரெஜிஸ்டர் செய்து லாகின் ஆன பிறகு வரும் முதல் பக்கத்தில் Banners என்பதை க்ளிக் செய்யவும்.

இந்த பக்கத்தில் Referral Link-கை எடுத்துக் கொள்ளலாம். நினைவிருக்கட்டும் நிங்கள் உங்கள் நண்பர்களை Refer பண்ணுவதற்கு நீங்கள் Neobux.com ல் ரெஜிஸ்டர் செய்து குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் மற்றும் 100 விளம்ப்ரங்களை க்ளிக் செய்திருக்க வேண்டும்.
2.Rented Referrals என்றால் என்ன ?
உங்களால் நண்பர்களை சேர்க்க இயலவில்லை என்றால் நீங்கள் Referral ல்களை வாடகைக்கு எடுக்கலாம். Referral ல்களை 3,5,10,15,20,25,30,40,50,60,70,80,90,100 என்ற எண்ணிக்கையில் எடுத்து கொள்ளாலாம்.
உதாரணமாக நீங்கள் மூன்று நபர்களை வாடகைக்கு எடுத்தால் மாதம் வாடகை $ 0.600 ஆகும். 5 – 1$, 10-2$, 15-3$, ஆகும். இதில் வரும் வருமானத்தை வைத்துதே இவர்களை எடுத்துகொள்ளலாம்..
3.Adprize என்றால் என்ன ?
நீங்கள் ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்த உடன் Adprize ல் மூன்று விளம்பரங்கள் Add ஆகும். அந்த மூன்று விளம்பரங்களை க்ளிக் செய்யும் போது முதலில் க்ளிக் செய்த விளம்பரம் அதில் வந்தால் உங்களுக்கு பரிசு கிடைக்கும்.



அவை என்னென்ன பரிசுகள் என்பதை பார்ப்போம்
0.25$, 0.50$, 1 $, 10 $, Upgrade Golden Membership ஆகும்.
4. Mini Jobs:
பல Data Entry வேலைகள் இதில் இருக்கும் அதில் உங்களுக்கு தெரிந்த வேலையை செய்து சம்பாதிக்கலாம். இதில் திறைமை உள்ளவர்கள் தினம் 20 $ வரை சம்பாதிக்கலாம். இணையதில் வீட்டிருந்தே வேலை செய்து சம்பாதிக்க நினைக்கும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமாக வீட்டில் இருக்கும் படித்த பெண்களுக்கு இந்த Mini Jobs மூலம் நிறைய சம்பாதிக்கலாம்.
5.Upgrade Golden Membership:
நீங்கள் உங்கள் அக்கவுண்டை ஒரு வருடத்திற்கு $ 90 செலுத்தி Upgrade செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும். முதலில் நீங்கள் சம்பாதித்த தொகை 90 $ வந்தவுடன் முதல் வேலையாக Upgrade செய்து கொள்ளுங்கள். அப்பெழுதான் மாதம் 10,000 $ டாலர் சம்பாதிக்க முடியும்.
ஆதாரங்கள்:
நான் 10,000 டாலர் (5,00,000) சம்பாதித்தற்க்கான ஆதாரங்கள் உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளேன்.
முதல் மூன்று மாதங்களுக்கு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு Rented Referrals வாடகைக்கு நிறையை நபர்களை எடுத்து கொள்ளுங்கள். அப்பொழுதான் சீக்கிரம் நிறைய சம்பாதிக்க முடியும்.
அவ்வளவுதான் தினமும் 5 நிமிடம் விளம்பரங்களை க்ளிக் செய்து ஒரு மாதம் முயற்ச்சி செய்து பாருங்கள் பிறகு நீங்களே “ நிறைய பணம் சம்பாதிப்பதற்கு இதை விட எளிமையான வழி இல்லை “ என்று சொல்வீர்கள். கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து இன்றே Neobux.com ல் இணையுங்கள்.

மேலும் சந்தேகங்கள், விளக்கங்கள் இருந்தால் gowshi2020@gmail.com க்கு தெரிவிக்கவும்

லண்டன் வந்துள்ள சிங்கள தூதுக்குழுவின் அட்டகாசம்: போர் குற்றம் பற்றி பேசாதே என்கிறார்கள் !

இலங்கையில் இருந்து, ஆழும் கட்சி , எதிர்கட்சி முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் லண்டன் வந்துள்ளார்கள். தாம் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தவே தாம் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை ஒரு மக்கள் சந்திப்பொன்றை அவர்கள் நிகழ்த்தியிருந்தார்கள். அதில் 25க்கும் குறைவான மக்களே கலந்துகொண்டனர். மக்கள் பலர் கலந்துகொள்ளவில்லை என்று பின்னர் ஞாயிற்றுக்கிழமையும் ஒரு கலந்துரையாடலை அவர்கள் மேற்கொண்டனர். இதில் கலந்துகொண்ட தமிழர்கள் சிலர் இடக்கு முடக்கான கேள்விகளைக் கேட்க்க ஆரம்பித்ததால் குழப்பம் ஆரம்பமானது. இலங்கையில் இருந்து வந்தவர்கள் ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் சென்றனர். ஆனால் புலம்பெயர் தமிழர்கள் அதற்கு அமைவாகச் செல்லவில்லை.

இலங்கையில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும், எனவே போர் குற்ற விசாரணை மற்றும் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று அவர்கள் கூறினார்கள். இதனை அடுத்து பெரும் சர்ச்சை கிளம்பியது. போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை தேவை என்று பிரிட்டனின் புலம்பெயர் தமிழர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இலங்கைத் தூதுக்குழுவினர் தங்களுக்குள், தாமே முரண்பட்டுக்கொண்டனர். அதாவது போனவருடம் இத் தூதுக்குழு லண்டன் வந்தவேளை சர்வதேச விசாரணை தேவை என்று தமிழர்கள் கூறினார்கள் இதனை இலங்கை சென்று பரிந்துரைக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுபோல இதனை தாம் இலங்கை சென்ற பின்னர் அரசுக்கு தாம் பரிந்துரைத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்ட பாலச்சந்திரன் தெரிவித்தார்.

ஆனால் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு தாங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று இதே தூதுக்குழுவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ கூறினார். இலங்கையில் நடந்த யுத்தத்தின்போது நடந்ததாகக்கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீதோ அல்லது இலங்கை இராணுவம் மீதோ விரல் நீட்டுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் என்று அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதாவது நீங்கள் ஒரு விடையத்தை இங்கே நன்கு கவனிக்கவேண்டும். அதாவது தமிழ் மக்களுக்கு தாம் உதவுகிறோம் என்று சொல்லிக்கொண்டு திரியும் எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்களவர்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதனை நாம் இதனை வைத்தே கணிப்பிட முடியும். இப்போது தமிழர்களுக்கு புரியவேண்டும் ஏன் இலங்கை அரசு யுத்தத்தில் வென்றது என்று. எவ்வாறு தமிழர்களே தமிழர்களைக் காட்டிக்கொடுத்து அழித்தார்கள் என்று புரியும். கருணா, கே.பி போன்றவர்கள் செயல்களை நாம் மறந்துவிடமுடியாது.

பென்காசி தூதரகம் தாக்கப்பட்ட அன்று நடந்த அதிரவைக்கும் நிகழ்வு !



லிபியா, பென்காசி நகரில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டு, அமெரிக்க தூதரும் கொல்லப்பட்ட தினத்தன்று அங்கு நடைபெற்ற சில மர்ம நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த விபரங்கள் இதுவரை மறைக்கப்பட்டிருந்தன. தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெறும் 1 கி.மீ. தொலைவில், சி.ஐ.ஏ.வின் ரகசிய இடம் (CIA safe house) ஒன்று இருந்திருக்கிறது. அந்த வீட்டில் இருந்தவர்கள் சி.ஐ.ஏ.வின் ஆட்கள் என்பது, ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானபோது, இரவு சுமார் 9.40க்கு, அந்த துப்பாக்கி சத்தங்கள், சி.ஐ.ஏ. ரகசிய இடத்தில் இருந்தவர்களுக்கு கேட்டிருக்கிறது. தூதரகத்தில் இருந்தவர்களை காப்பாற்ற செல்வதற்கு இவர்கள் அனுமதி கேட்டபோது, மேலதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்தும் தாக்குதல் நடக்கும் சத்தம் கேட்கவே, இவர்கள் ரேடியோ மூலம், மீண்டும் அனுமதி கோரியுள்ளனர். இரண்டாவது தடவையும் அனுமதி மறுக்கப்பட்டது. இவர்களை தலையிட வேண்டாம் என்று கூறியதிலும் ஒரு மர்மம் உண்டு.

அந்த வீட்டில் சி.ஐ.ஏ. ஆட்கள் தங்கியிருந்தது பரம ரகசியம் என்பதால், அவர்களை “நீங்கள் இதில் தலையிட வேண்டாம்” என்று மேலதிகாரிகள் தடுத்து விட்டனர். அந்த வீட்டில் தங்கியிருந்தவர்களிடம் ஆயுதங்களும் இருந்தன. அதில் இருவர் Navy SEAL படைப்பிரிவில் (பின்லேடன் வேட்டைக்கு சென்ற அதிரடிப்படை) முன்பு பணிபுரிந்தவர்கள். அதிரடித் தாக்குதலில் அனுபவம் பெற்றவர்கள். தூதரகத்தில் இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்ட உடனேயே இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தால், கொல்லப்பட்ட அமெரிக்க தூதரின் உயிரையும், அங்கு கொல்லப்பட்ட மற்றையவர்களையும் இவர்கள் காப்பாற்றியிருக்கலாம். சரி. இவர்கள் அங்கே எதற்காக ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர் ? லிபியாவில் கடாபிக்கு எதிராக போராளி அமைப்புகள் யுத்தம் புரிந்த நாட்களில், கடாபியை ஒழித்துக் கட்டவேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பமாகவும் இருந்தது. அதற்காக அமெரிக்கா வெளிப்படையாக யுத்தத்தில் இறங்காமல், கடாபிக்கு எதிராக போராடிய குழுக்களுக்கு மறைமுகமாக ஆயுத உதவி செய்தது.

இந்த ஆயுதங்களை சி.ஐ.ஏ., லிபியா எல்லைவரை கொண்டுவந்து கொடுக்க, போராளிக்குழுக்கள் அவற்றை லிபியாவுக்கு உள்ளே கடத்திக்கொண்டு சென்றார்கள். போராளிக் குழுக்கள் லிபிய ராணுவத்தை ஜெயித்தது, இப்படியான ரகசிய ஆயுத சப்ளை கிடைத்ததால்தான்.யுத்தம் முடிந்தபின், தாம் கொடுத்த ஆயுதங்களில் எல்லளவு ஆயுதங்கள் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டன என சி.ஐ.ஏ. ஒரு உத்தேசக் கணக்கு எடுத்தது. அதில், இவர்கள் ரகசியமாக சப்ளை செய்த ஆயுதங்களில், யுத்தத்தில் பயன்படுத்தப்படாத ஆயுதங்கள் இன்னமும் ஆயுதக் குழுக்களின் கைகளில் இருப்பதை சி.ஐஏ. தெரிந்து கொண்டது. முக்கியமாக, சுமார் 20,000 எண்ணிக்கையில் MANPADS, (தோளில் வைத்து சுடும் சிறு ஏவுகணைகள். இவற்றால் தாழ்வாகப் பறக்கும் வர்த்தக விமானங்களை வீழ்த்தலாம்) லிபியாவில், ஆயுதக் குழுக்களின் கைகளில் தேங்கிவிட்டதை சி.ஐ.ஏ. தெரிந்து கொண்டது.

உளவு வட்டாரங்களில் கிடைக்கும் தகவல்களின்படி, இந்த ஆயுதங்களை திரும்ப வாங்கும் முயற்சியில் சி.ஐ.ஏ. சிலரை இறக்கி விட்டுள்ளது. யுத்தம் நடந்தபோது சும்மா கொடுத்த ஆயுதங்களை, இப்போது அவர்களிடம் இருந்து மார்க்கெட் விலைக்கு வாங்கிக் கொள்கிறது சி.ஐ.ஏ.பணம் கொடுக்காவிட்டால் ஆயுதக் குழுக்கள், இந்த ஆயுதங்களை எதற்காக சி.ஐ.ஏ.வுக்கு கொடுக்க வேண்டும்? தேவையென்றால் வெளியே விற்றுக் கொள்ளலாமே? இதனால், இலவசமாக கொடுத்தவர்களே மார்க்கெட் விலை கொடுத்து வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் சி.ஐ.ஏ. டீமுக்கு பாதுகாப்பு கொடுக்க ரகசியமான லிபியாவில் தங்கியிருக்கும் டீமே, நாம் குறிப்பிட்ட ரகசிய இருப்பிடத்தில் இருந்த ஆட்கள். சி.ஐ.ஏ.வின் GRS (Global Response Staff) பிரிவைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

இப்போது புரிகிறதா கதைச் சுருக்கம்? தூதரகத்தில் உள்ளவர்களை காப்பாற்ற இவர்கள் வெளிப்பட்டு, அதன்மூலம் இவர்கள் லிபியாவில் என்ன செய்கிறார்கள் என்ற விவகாரம் வெளியே தெரிய வந்தால் எவ்வளவு சிக்கல் வரும் என்று புரிகிறதா?அதுதான் இவர்கள் போய் உதவி செய்ய மேலதிகாரிகள் அனுமதிக்கவில்லை.ஒரு கட்டத்தில், தூதரகத்தில் இருந்து தொடர்ந்தும் துப்பாக்கிச் சத்தம் கேட்கவே, மேலதிகாரிகளின் சொல்லையும் மீறி, சி.ஐ.ஏ. ரகசிய இடத்தில் இருந்த இருவர், அமெரிக்க துதரகம் இருந்த இடத்துக்கு சென்றிருக்கிறார்கள்.

அதற்குள் அங்கு தாக்குதல்கள் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டிருந்தன. தூதரகம் எரிந்துகொண்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த தூதரக கட்டத்துக்குள் இருந்தவர்களை வெளியே கொண்டுவந்தது, இவர்கள்தான். இல்லாவிடில், உயிரிழப்புகள் இன்னமும் அதிகமாக போயிருக்கும். மேலதிகாரிகளின் உத்தரவை மீறி சென்ற இவர்கள், தூதரக கட்டடத்துக்குள் இருந்தவர்களை வெளியேற்றியபின் அங்கு நிற்காது, இரவு சுமார் 12 மணிக்கு, தமது ரகசிய இருப்பிடத்துக்கு திருப்பிவிட்டனர். இங்குள்ள மற்றொரு விஷயம், தாக்குதல் தொடங்கிய உடனேயே, தகவல் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவசர உதவி அனுப்பி வைக்கும்படி கோரிக்கையும் விடப்பட்டது.

லிபியா பென்காசி நகரில் இருந்து வெறும் 480 மைல்கள் தொலைவில், அமெரிக்க ராணுவத்தின் சிகொனெல்லா (இத்தாலி) ராணுவத் தளம் இருந்தது. அந்த தளத்தில், அதிரடிப்படை டீம்கள் இரண்டு இருந்தன. தகவல் கிடைத்ததும் அந்த முகாமில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அதிரடிப் படைகளை அனுப்பியிருந்தால், சுமார் 2 மணி நேரத்தில் அவர்கள் பென்காசிக்கு சென்றிருக்க முடியும். ஆனால், அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பென்காசியில் அமெரிக்க தரப்புக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த விபரங்கள் நேற்று வெளியாகியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கை இன்னமும் சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும்!- முல்லைத்தீவில் 4000 குடும்பங்கள் இடம்பெயரக் கூடிய அபாயம்!

வடக்கை இன்னமும் சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும்!- முல்லைத்தீவில் 4000 குடும்பங்கள் இடம்பெயரக் கூடிய அபாயம்!
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இன்னும் சில மணித்தியாலயங்களில் முல்லைத்தீவு முதல் யாழ்ப்பாணம் வரையிலான பகுதிகளை புயல் தாக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது முல்லைத்தீவுக்கு வெளியே 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இத் தாழமுக்கம் புயலாக மாறி தற்போது வடக்கு பகுதி நோக்கி நகர்ந்து வருவதாகவும், இது இன்று மாலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களை தாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இப்புயலானது மணிக்கு 60 முதல் 80 வரையான வேகத்தில் இப்பகுதிகளை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை ஏற்பட்ட கடும்காற்று காரணமாக கடற்றொழிலாளர்களின் படகுகள் சில சேதமடைந்தள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்.மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்களை கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள யாழ். அலுவலகமும் கடற்றொழிலாளர்களை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது.
அத்தோடு யாழ்ப்பாணம் முழுவதிலும் கடுமையான இருளில் மூழ்கியுள்ளதோடு வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் கடும் காற்றும் வீசி வருகின்றது.
இதேவேளை சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக வட பகுதியின் கரையோரங்களிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் 4 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயரக் கூடிய அபாயம்!
முல்லைத்தீவில் பெய்த கடும் மழைக் காரணமாக ஒட்டிச்சுட்டானைச் சேர்ந்த 4000 குடும்பங்கள் இடம்பெயரக் கூடிய அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு கடற்கரையின் கிழக்கு பகுதியில் சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் கடுமையான மழை பெய்து வருகிறது.
முல்லைத்தீவில் பெய்த மழையினால் ஒட்டிச்சுட்டான் முல்லைத்தீவு வீதி வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
ஒட்டிச்சுட்டானில் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நுவரெலியாவில் 48 வீடுகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறைந்தது 11 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால் மக்கள் விழிப்பாக இருக்கமாறும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மூன்றாம் இணைப்பு
யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு குச்சவெளி வரையான கரையோரப் பகுதிகளை இன்று நள்ளிரவு 2 மணியளவில் மினி சூறாவளி ஒன்று தாக்கும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் கடும் காற்றுவீசும் என அறிவித்துள்ள அனர்த்த காமைத்துவ நிலையம், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கரையிலிருந்து 500 மீற்றருக்கு அப்பால் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை மீட்பு பணிகளுக்காக முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளதோடு, சூறாவளியின் தாக்கம் ஏற்படலாம் என இனங்காணப்பட்ட பகுதிக்கு இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறிவித்துள்ளது.

பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடிக் கோரிய தமிழீழத்தை வழங்க கோத்தபாய விரும்புகிறாரா?

பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடிக் கோரிய தமிழீழத்தை வழங்க கோத்தபாய விரும்புகிறாரா?
பிரபாகரன் நிராகரித்த 13ஆவது அரசியல் திருத்தத்தை ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூக்கிப் பிடிக்கிறது என்று கேட்டிருக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.
அப்படியெனில் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடிக் கோரிய தமிழீழத்தை வழங்க கோத்தபாய விரும்புகிறாரா? என்பதுதான் பெரும் சந்தேகமாக இன்று தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
13ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை அழித்துவிடலாம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சொல்லியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
போரில் புலிகளை அழிக்கலாம் என்று எப்படி சொன்னாரோ, மக்களை அழிக்கலாம் என்று எப்படி ஆணையிட்டாரோ? அப்படியே 13ஆவது அரசியல் திருத்த சட்டத்தையும் அழித்துவிடலாம் என்று மகிந்த ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச சொல்லியுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான இனப்பிரச்சினையை மீண்டும் உச்சமானதொரு கட்டத்திற்குள் நகர்த்தும் ஒரு அபாயத்தின் அறிவிப்பாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு ஒரு துளியேனும் சாதகத்தைக் கொண்டதொரு சட்டம் இருக்கக்கூடாது என்பதையே சிங்களப் ஆட்சியாளர்களான ராஜபக்ஷேக்கள் விரும்புகிறார்கள்.
13ஆவது அரசியல் திருத்தச் சட்டம் என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம்.
இலங்கை சுகந்திரமடைந்த பின்னர் இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் வெடித்து. எழுபதுகளின் இறுதியில் அது ஆயுதப்போராட்டமாக மாறியது.
இந்நிலையில் ஈழப்போராளி இயக்கங்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது 1987இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் நடைபெற்று இனப்பிரச்சினையை தீர்க்கும் விதமாக இந்தியா ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்தது.
இந்தியாவில் உள்ள கூட்டாட்சி முறையை ஒத்த ஆட்சி முறையொன்றை வழங்கி தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்குவதாகச் சொல்லி இந்த அரசியல் திருத்தம் முன்வைக்கப்பட்டது.
தனிநாடு கோரிய போராட்டம் நடந்த அக்காலத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, காவல்துறை, காணி அதிகாரம் உட்பட்ட சில அதிகாரங்கள் உள்ளடங்கலாக இந்த திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
ஈழப்போராளி இயக்கங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்ட கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த அரசியல் தீர்வுத் திட்டத்தை நிராகரித்திருந்தார்கள்.
விடுதலைப் புலிகளின் எதிர்ப்பின் மத்தியிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமாக வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு தேர்தலும் நடைபெற்றது.
இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் யுத்தம் மூண்ட சூழலில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா வடக்கு கிழக்கு மாகாணசபை ஆட்சியை கலைத்தார்.
மகிந்தராஜபக்ச ஆட்சியில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் யுத்தம் மூளும் அபாயம் நிலவிய சூழலில் இனப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் விதமாக அரசியல் சட்டத்தில் இருந்த வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு நீதிமன்றம் மூலம் பிரிக்கப்பட்டது.
13ஆவது சரத்தை அழிக்க வேண்டும் என்று கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்ட வேளை அவ்வாறு அழிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று மகிந்த ராஜபக்சவின் இன்னொரு தம்பியான பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கை அரசின் உத்தியோகபூர்வமான கருத்தாகவே அமைந்திருந்தது. இலங்கை அமைச்சர்களுக்கும் தமிழ் பிரதிநிதிகளுக்குள்ளும் பெரும் பதற்றம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக்;கொள்ளும் நிலைமையை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலைமையை உருவாக்கி இனப்பிரச்சினையை திசைதிருப்பும் திட்டத்தைக் கொண்ட அறிவிப்பா? என்ற ஐயமும் எழுந்துள்ளது.
1310 பற்றிய அழுத்தங்கள் அரசாங்கத்திற்கு பிரயோகிக்கப்படும் சூழலில் போதிய அதிகாரமற்ற 13ஆவது திருத்தத்தை திணிக்கத் தான் இவ்வாறு அரசியற் புரளியை அரசு கிளபபுகிறதா? என்ற ஐயமும் நிலவுகிறது.
ஏனெனில் இலங்கை அரசு எதை? எதற்காக அறிவிக்கிறது? என்றும் அதற்கடுத்து என்ன செய்யும்? என்றும் எந்த வல்லுனர்களாலும் உணர முடியாது.
ஆனால் இந்த மாதிரியான அறிவிப்புக்களுக்குப் பின்னால் தமிழ் மக்களுக்கு பெரும் துயரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. அதிலும் ராஜபக்ச ஆட்சியில் எதிர்பாராத துயரம் தொடர்ந்து வந்து தமிழ் மக்களை தாக்கிக்கொண்டிருக்கிறது.
1310 பிரபாகரனுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வென்று சொல்லியுள்ள கோத்தபாய ராஜபக்ச இந்தியாவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இதைப்பற்றி பேச முடியாது என்றும் சொல்லியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்காக முன்வைக்கப்பட்ட தீர்வு என்பதன் மூலம் புலிகளை அழித்த பின்னர் அந்த தீர்வு தேவையில்லை என்றும் அதையும் அழிக்கலாம் என்றும் சொல்ல வருகிறார் கோத்தபாய.
1310 தமிழ் அரசியல்வாதிகள்தான் கோருகிறார்கள் என்று கோத்தபாய சொல்வதைப்போல காணி அதிகாரத்தை தமிழ் அரசியல்வாதிகள் கோருகிறார்கள் அதை தமிழ் மக்கள் கேட்கவில்லை என்று பசில்ராஜபக்ச ஒருமுறை குறிப்பிட்டார். அண்மையில் வடக்கில் இடம்பெயர் அகதிகள் என்று யாருமில்லை என்று கோத்தபாய குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு எங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வீடு திரும்பாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அவர் இப்படிச் சொன்னார். முள்ளிவாய்க்காலிலும் மாதகலிலும் அவர் இப்படிச் சொன்ன பின்னரே மீள்குடியேற்றம் நடந்தது.
அதைப்போல இப்பொழுது இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்று சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சினையால் வாழவும் மீளவும் முடியாமல் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடியிருக்கும் நிலையிலேயே கோத்தபாய இப்படிச் சொல்லியருக்கிறார். இன்னும் கொஞ்ச காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களென்று யாரும் இல்லை என்றும் கோத்தபாய கூறக்கூடும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் 13ஆவது திருத்த சட்டத்தையும் விடுதலைப் புலிகள் நிராகரித்தார்கள். இது விடுதலைப் புலிகள் செய்த வரலாற்று தவறு என்று சிலர் விமர்சனம் செய்தார்கள்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரிப்பு முதல் இப்பொழுது 13ஆவது அரசியல் திருத்த சட்டத்தை அழிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட யோசனை வரை இலங்கை அரசின் தொடர் நடைமுறைகளைப் பார்க்கையில் இவை எவ்வாறான பலமான அரசியல் சட்டம்? என்றும் அவற்றுக்கு என்ன சக்தி உள்ளன? என்றும் இப்பொழுது உணர முடிகிறது.
அன்று விடுதலைப் புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்த அரிசயல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் இன்று அதை அழித்து சிங்களப் பேரினவாத ஆட்சியை தமிழர்நிலத்தில் விரிக்க சட்ட திருத்தத்தை இலங்கை அரசு கொண்டு வந்திருக்கும்.
இவ்வாறான இலங்கை அரசின் நடவடிக்கைகள் புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்த தீர்வுத்திட்டத்தை நிராகரித்தது சரியானதே என்று நியாயப்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளன. இந்தப் படிப்பினையில் அடிப்படையில் பார்க்கையில் தனிநாடுதான் சரியான தீர்வு என்ற சூழலுக்கு தமிழர்கள் மீண்டும் நிர்பந்தமாகத் தள்ளப்படுகிறார்கள்.
இலங்கை அரசோடு இணைந்து கூட்டாட்சி அமைந்தால் என்ன நடக்கும்? என்பதையும் தமிழர்களுக்கு சாதகமான சின்ன சட்டங்கள்கூட இலங்கை அரசின் யாப்பில் இருந்தால் அவைகளுக்கு என்ன கதி ஏற்படும்? என்பதையும் இந்த சட்ட அழிப்பு எச்சரிக்கைகள் தெளிவாக்குகின்றன.
இலங்கை அரசுகளின் அராஜகங்களினாலும் இனப்படுகொலை நடவடிக்கைகளினாலும் தமிழர்கள் தனிநாடு கோரிப் போராடினார்கள். தனிநாடல்லாத ஒரு தீர்வுக்கு சென்றால் எது எப்படியான விளைவைத்தரும் என்பதை இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.
மீள்குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு, இராணுவமயம் என்று எல்லா வகையிலும் தமிழ் மக்களை தொடர்ந்து தாக்கும் சூழலில்தான் சிங்கள அரசு இந்த நடவடிக்கையை தொடக்கியிருக்கிறது.
யுத்தம் முடிந்த பின்னர் 13ஆவது அரசியல் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உலகநாடுகள் இலங்கையைப் பணித்தன.
விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போகிறோம் என்று சொல்லியே இலங்கை அரசு கொடும் இனப்படுகொலை யுத்தத்தை நடத்தியது.
ஐ.நாவும் இந்தியாவும்கூட 13ஐ நடைமுறைப்படுத்தும்படி இலங்கை அரசை தொடர்ந்து நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறன.
13ஐ நடைமுடுறைப்படுத்துவேன் என்று சொல்லிய இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அதற்கு அப்பாலான தீர்வை வழங்குவேன் என்றும் குறிப்பிட்டார்.
புலிகள் நிராகரித்த இவ் அரசியல் திருத்த சட்டத்தை வைத்து யுத்தம் நடத்திக் கொண்டு மறுமுனையில் ’13 பிளஸ் தருகிறோம்’ என்று ஒரு கதையைப் சொல்லியே சில தமிழ் அரசியல்வாதிகளை தனது யுத்த அரசியல் நலனுக்காக கையாண்டது.
13ஐ அழித்தால் மீண்டும் மேதாதல் வரும் என்று பிள்ளையான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். முக்கியமாக கிழக்கில் பிள்ளையான், வடக்கில் டக்கிளஸ் தேவானந்தா முதலியவர்களை 13 பிளஸ் என்ற தீர்வை காட்டி முழுமையாக தனக்குள் இழுத்தது அரசு.
யுத்தம் முடிந்த நிலையில் எந்த தீர்வுத் திட்டத்தையும் முன் வைக்காமல் காலத்தை கடத்திக் கொண்டு வந்தது இலங்கை அரசு. இந்த நிலையில்தான் இணைந்த மாகாண சபையுடன் காணி, காவல்துறை அதிகாரங்களுடன் அரசில் தீர்வை முன்வைக்குமாறு இனப்படுகொலையில் ஈடுபட்ட சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்வந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தை முதல் எல்லா சமிக்கைகளையும் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிக்கு இப்பொழுது எச்சரிக்கை விடுத்திருக்கிறது அரசு. பேச்சுவார்த்தை மூலம் எந்தத் தீர்வையும் எட்டுவது இலங்கை அரசுகளின் செயற்பாடாக ஒரு பொழுதும் இருந்ததில்லை.
ஒரு பிரதேசசபையைகூட தமிழர்கள் ஆளக்கூடாது என்று நினைக்கிறது ராஜபக்ச அரசு. அந்த அடிப்படையில்தான் வடக்கு மாகாண சபையை தமிழர் தரப்பு கைப்பற்றினால் அது இலங்கை அரசுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று கருதுகிறது.
வடக்கு மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய நிர்பந்தம் இலங்கை அரசுக்கு உள்ளது. இந்நிலையில் 13ஐ அழித்தல் என்பது தமிழ் மக்கள் தரப்பில் எந்த சிறு நிர்வாகமும் செல்லாது தடுக்கும் நடவடிக்கையாக அமையும் என்று ராஜபக்ச அரசு நம்புகிறது.
வடக்கில் இராணு ஆக்கிரமிப்பை நிலைநிறுத்தல், காணி அபகரிப்பில் ஈடுபடல், தமிழர்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தல் என்று எல்லா வகையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழர்களை ஒடுக்கி இல்லாமல் செய்யும் திட்டத்திற்கு 13உம், வடக்கு மாகாண சபைத் தேர்தலும் தடையாக உள்ளதாக அரசு நினைக்கிறது. எனவே அதை அழித்தால் வெற்றிகரமாக எஞ்சிய தமிழர்களை துடைத்தெறிந்து சிங்கள ஆக்கிரமிப்பை மேற்கொள்ளலாம் என்பதே அரசின் திட்டம்.
சமாதான யுத்தம் நடத்தி ஈழமக்களை படுகொலை செய்த பின்னரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு சென்ற சூழலில் 13ஆவது சரத்தையும் அழிக்கும் பொழுது இலங்கை அரசோடு பேசுவதற்கு உண்மையில் இனி என்ன இருக்கிறது? நாங்கள் எந்த தீர்வுக்கும் இணங்க மாட்டோம் என்பதை அது வெளிப்படையாகவே உணர்த்துகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த எச்சரிக்கை மூலம் இலங்கை அரசாங்கம் சொல்லுகிறது. ஈழத் தமிழ் மக்களுடன் நாம் எதையும் பகரிமாட்டோம் என்று உலக நாடுகளுக்கும் சொல்கிறது.
வாழ் நிலத்திற்காகவும் அதற்கான உரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஈழத் தமிழினம் போராடியது. அந்தப் போராட்டத்தையும் அழித்து மக்களை இனப்படுகொலை செய்தது இலங்கை அரசு.
எல்லா அராஜகங்களையும் செய்யும் பொழுது நிராகரிக்கப்பட்ட அரசியல் சரத்தை காட்டியது. இப்பொழுது அந்த சரத்தையும் அழிப்பேன் என்பதன் மூலம் ஈழத் தமிழ் மக்களை இனப்பிரச்சினையின் தொடக்க காலத்திற்குத் தள்ளுகிறது. இலங்கைத் தமிழர்களின்அரசியல் பிரச்சினைக்கு 13 சரியான தீர்வல்ல என்று தமிழர் தரப்பால் சொல்லப்பட்டது. ஆனால் அதையும் அழிக்க வேண்டும் என்று நிற்கிறது இனவாத அரசு.
இலங்கையில் மீண்டும் இரத்தம் பாயும் காலத்தை உருவாக்க முனைகிறது சிங்கள அரசு.
தமிழர்களை அவர்களின் தாயகத்திலிருந்து அழித்து எந்தவொரு சிறுநலனையும் தமிழர்களுக்கு பகிரக்கூடாது என்று இலங்கை அரசு திட்டமிட்டு செயலாற்றும் பொழுது நாம் என்ன செய்வது?
காலத்திற்கும் அநீதிக்கும் ஏற்ற வகையில் மீண்டும் போராட வேண்டிய சூழலை அரசாங்கங்கள் ஈழத் தமிழர்களுக்கு நிர்பந்திக்கிறது

தொப்புள் கொடியோடு கோழி ‘குட்டி’ போட்ட அதிசயம்

பொதுவாக கோழிகள் முட்டைதான் போடுவதைத் தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் கேரள மாநிலம் காசர்கோட்டில் கோழி குட்டி போட்ட அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த செருவந்தூர், சீமேனி பகுதியை சேர்ந்தவர் பத்ரன் என்பவரின் மனைவி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ளார். கேரள அரசு சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கிய ஒரு பெட்டைக்கோழி இவர்களது வீட்டில் உள்ளது.
இந்த கோழி தினமும் முட்டையிட்டு வந்தது. ஆனால் அடைகாப்பதே கிடையாது. நேற்று மாலை வீட்டு முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த அந்த கோழி தொப்புள் கொடியோடு ஒரு ‘கோழிக்குட்டியை’ பிரசவித்தது.
தொப்புள் கொடியோடு பிறந்த கோழிக்குட்டியை தாய்க்கோழி கவனிக்காது சென்று விட்டது. வீட்டில் இருந்தவர்கள் அந்த கோழிக்குட்டியை சுத்தம் செய்து வெதுவெதுப்புக்காக துணியில் வைத்து பாதுகாத்தனர்.
அது தற்போது நல்ல நிலையில் உள்ளது. கோழி ‘குட்டி’ போட்ட அதிசயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.