Monday, 30 January 2012

காதலில் சொதப்புவது எப்படி? என்ற படத்தின் ட்ரெய்லர்

எனது நிஜ வாழ்க்கையில் ஏராளமான தடவைகள் காதலில் சொதப்பியுள்ளேன். அண்மையில் கூட ஒருவருடன் காதலில் சொதப்பிவிட்டேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 14இல் வெளியாகவுள்ள அமலா போல் மற்றும் சித்தார்த் நடித்துள்ள காதலில் சொதப்புவது எப்படி? என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் போதே இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படம் குறித்து சித்தார்த் பேசுகையில், யூடியூப்பில் வெளியான 10 நிமிட படம் எனக்கு பிடித்துப்போனதால் இயக்குனர் பாலாஜி மோகனிடம் இப்படத்தில் நாயகனாக நான்தான் நடிப்பேன் என உரிமையுடன் படம் குறித்து பேசினேன்.
10 நிமிட படத்தினை 2 மணித்தியாலமாக மாற்றி காதலில் இளைஞர்கள் எப்படியெல்லாம் சொதப்புகிறார்கள் என்பதைக் காட்டியுள்ளோம். படம் காதலர் தினமான பெப்ரவரி 14இல் வெளியாகும்.
நிஜ வாழ்க்கையில் என்னை விட யாரும் காதலில் சொதப்பியிருக்கமாட்டார்கள். எனது பள்ளிப்பருவம் முதல் இன்று வரை ஏராளமான முறை காதலில் சொதப்பியுள்ளேன். அண்மையில் ஒருவருடன் சொதப்பிவிட்டேன்.
கடந்த 4 மாதங்களில் தொடர் படப்பிடிப்புக்களால் சொதப்பலுக்கு இடைவெளி விட்டுள்ளேன். எனது சொதப்பல்களின் எண்ணிக்கை அளவில்லாதது.
மேலும் தமிழில் அதிகம் நடிப்பதில்லையே எனக் கேட்கிறார்கள். தமிழில் யாரும் எனக்கு வாய்ப்புக்கள் தருவதில்லை. தமிழில் வாய்ப்புக்கள் வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார்.
அது சரி அண்மையில் சொதப்பியது உலக நடிகரின் மகளிடம் தானே!!!

157ஆண்டுகள் பழமையான ரெயில் என்ஞ்சின் இயக்கம்

AGE NO BAR: The EIR 21 steam locomotive being cheered during the heritage run to mark the Republic Day, in Chennai on Thursday. Photo: S.R. Raghunathan

பாரம்பரிய தினத்தை நினைவு கூறவும் , நீராவி எஞ்சின் ரெயிலைப் பற்றிப் பொது மக்கள் அறிந்து கொள்ளவும் குடியரசு தினத்தை ஒட்டியும் சென்னை எழும்பூரிலிருந்து கிண்டி வரை 157 ஆண்டுகள் பழமை வாய்ந்த இ.ஐ.ஆர் 21 என்ற நீராவி எஞ்சின் ரெயிலை தெற்கு ரெயில்வே இயக்கியது.

கடந்த 1855ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரான இந்த ரயில் எஞ்சின், 130 குதிரைத்திறன் கொண்டது. 20 முதல் முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்திய ரெய்ல்வேக்கு 55 ஆண்டுகள சேவை செய்த பின்னர், கடந்த 1909 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று ஜமால்பூர் ரெய்ல்வே அருங்காட்சியகத்தில் இடம் பெற்றது. இந்த ரெயில் என்ஜின் மறு ஓட்டத்திற்காகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பூர் லோகோ பணிமனைக்குக் கொண்டு வரப்பட்டு அழகு படுத்தப் பட்டது.

ஒரே நேரத்தில் கமல் மற்றும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் கேத்ரீனா கைப்.

விஸ்வரூபம்’ படத்தினை அடுத்து கமல் நடிக்க இருக்கும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கமல் இயக்கி நடித்த ‘தசாவதாரம்’ படத்தினை தயாரித்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அடுத்து அவர் தயாரிக்க இருக்கும் படத்தில் கமல்  நடிக்க இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
இரு மொழிகளில் வெளியாக இருக்கும் அப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கேத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
ரஜினியின் ‘ கோச்சடையான் ‘ படத்திற்காக தனது கால்ஷீட் தேதிகளை ஒதுக்கிக் கொடுக்க திட்டிமிட்டு வருகிறார் இந்தி திரையுலகின் முன்னணி நடிகை கேத்ரினா  கைஃப்.
இந்நிலையில் கமல் – ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணையும் படத்தில் நாயகி வேடத்திற்கும் கத்ரீனாவிடம்  பேசி வருகிறார்கள்.  கேத்ரினா  மட்டுமன்றி படத்தில் இன்னொரு நாயகியும் இருக்கிறாராம்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் ” எல்லாம் ஆரம்ப நிலையில் தான் இருக்கின்றன.. கேத்ரினாவை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். எதுவும் இன்னும் முடிவாகவில்லை.” என்று தெரிவித்துள்ளார்

பஜாஜ் பள்சர் – 2012 (Pulsar 200 NS) சற்று முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (Pictures)

இந்தியாவின் முன்னனி மோட்டார் நிறுவனமான பஜாஜ் இன் இரு சக்கர வாகனங்களில் பள்சர் பிரசித்தமானது. இவ் பள்சர் 10 வருட கால பின்னனியை கொண்டது. 2012 ஆம் ஆண்டுக்குரிய பள்சர் மொடெலான Pulsar 200 NS ஆனது இன்று (30.01.2012) சற்று முன்னர் மும்பையில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திடகாத்திரமான வடிவமைப்பு, அதி சக்கிவாய்ந்த எஞ்சின் என்பவை Pulsar 200 NS  க்கு பெருவெற்றியை ஈட்டித் தரும் என பொறியியல் வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
Pulsar 200 NS  இன் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்:
200cc SOHC Engine
3 Spark Plugs 
Liquid Cooled Engine
23 BHP @ 9500 RPM
18.3 Nm Torque @ 8000 RPM
145 KG Kerb Weight
12 Litre Fuel Tank




கௌதமும், ஹா‌ரிஸும் இப்போதைக்கு இணையப் போவதில்லை.

கௌதமும், ஹா‌ரிஸும் மீண்டும் இணைகிறார்கள். சென்னை குடிசையை ஆக்கிரமிக்கும் தீ மாதி‌ரி இந்த‌ச் செய்தியை அடிக்கடி கொளுத்திப் போடுகிறார்கள். இந்த‌ச் சூடு ஹா‌ரிஸ் காதுவரைக்கும் சென்றிருக்கிறது. இதற்கு தனது பாணியில் சூசகமாக பதிலளித்திருக்கிறார்.

நண்பன் படத்தின் இசைக்கு கிடைத்த பாராட்டை பற்றி குறிப்பிடும் போது நடுவில் கௌதம் மேட்டரையும் சேர்த்திருக்கிறார். கௌதமுடன் வேலை பார்ப்பீர்களா என்று கேட்கிறார்கள். நான் இது பற்றியெல்லாம் யோசிக்கிற நிலையில் இல்லை, வேறு படங்களில் பிஸியாக இருக்கிறேன் என்று விட்டேத்தியாக அவர் சொன்ன பதிலிலுக்கு ஒரேயொரு அர்த்தம்தான்.

இப்போதைக்கு இவர்கள் இணையப் போவதில்லை.

நெடியவனை கைது செய்ய சர்வதேச பிடியாணை!

 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயட்பட்டளர் நோர்வேயில் இருந்து செயல்பட்டு வருகின்ற நெடியவனுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.நெடியவனின் சொந்தப் பெயர் சிவபரன் பேரின்பநாயகம்.1976 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி பிறந்தவர். பிறந்த இடம் வட்டுக்கோட்டை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வயதில் சேர்ந்தவர். தலைவர் வே. பிரபாகரனுக்கு மிக நெருக்கமான ஒருவரானார்.  கே.பி என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று சுயம் பிரகடனம் செய்து கொண்டார் நெடியவன்.
பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக இவரை கைது செய்கின்றமைக்கு உதவி செய்ய வேண்டுமென சர்வதேச பொலிஸாரிடம் இலங்கை கோரி உள்ளது.

8 வயது சிறுமிக்கு இரக்கமற்ற முறையில் கை உடைத்துத் தண்டனை :/ - படங்கள் இணைப்பு

இது ஈரான் நாட்டில் நடந்த சம்பவம்.
கடையொன்றில் பாண் திருடிய 8 வயது சிறிமியொருவர் வீடியோ கமெரா மூலம் அகப்பட்டுள்ளார். (வறுமைக்கொட்டிற்கு கீழேயுள்ள சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது. )
 
அச் சிறிமிக்கு ஈரானிய சட்டத்தின்படி ( இஸ்லாமியச்சட்டம் என சொல்லப்படுகிறது.) கைகளின் மீது வாகனம் ஏற்றப்பட்டுள்ளது. 
வாகனம் ஏற்றப்பட்ட பின்னர் அக் கையின் செயற்பாடுகள் முற்றாக செயல் இழந்ததால் இனி வாழ் நாள் முழுவதும் அப் பிள்ளையால் அக் கையை பயண்படுத்த முடியாது போயுள்ளது.
 
சாதாரணமாக, சட்டம் என்பது தவறை ஏன் செய்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கு தீர்வானதாக இருக்கவேண்டும். (விதிவிலக்குகள் இருக்கலாம்.)
அப் பிள்ளை பசியின் காரணமாகவே பாணைத்திருடியுள்ளது. ஒரு வேளை அப்பிள்ளைக்கு தினசரி உணவு கிடைக்கும் பட்சத்தில் இத்தவறை செய்திருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. 
அத்துடன் தற்போது கை செயல் இழந்ததால் இனி அப் பிள்ளையின் எதிர் காலம் போராட்டமானதாகவே அமையப்போகிறது. அரசு தன்மீதுள்ள குறைகளை நீக்காது அனைவரிடமும் ஒரே சட்டத்தை பின் பற்றுவது வருந்தத்தக்கதே.
 
இதைப்படிக்கும் இஸ்லாமிய நண்பர்களிடம் ஒரு சந்தேக கேள்வி...
ஈரானில் பயண்பாட்டிலுள்ளது உண்மையிலேயே இஸ்லாமிய சாட்டமா? 
இஸ்லாமில் இப்படித்தண்டனைகள் உண்டா?
 
தண்டனைப் படங்களைப் பாருங்கள்...
 
 
 
 
 

மைத்துனியின் கள்ளக் காதலை கண்டித்த வாலிபரை மின் கம்பத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்ற மனைவி


மைத்துனியின் கள்ளக் காதலை கண்டித்த வாலிபரை மின் கம்பத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்ற மனைவி, அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே பெருமுடிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (35). லாரி டிரைவர். இவரது மனைவி சுஜாதா (31). நேற்று முன்தினம், பலத்த தீக்காயங்களுடன் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேகர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இறந்தார்.

பெரியபாளையம் போலீசில் சுஜாதா புகார் கொடுத்தார். அதில் உடல் நிலை சரியில்லாத எனக்கு பம்ப் ஸ்டவ்வில் சேகர் கஞ்சி காய்ச்சினார். அப்போது தீ விபத்து ஏற்பட்டு, உடல் கருகி சேகர் இறந்தார்ÕÕ என கூறியிருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே ஸ்டவ் வெடித்து சேகர் இறக்கவில்லை. சுஜாதாவும் சிலரும் சேர்ந்து அவரை கொளுத்திவிட்டனர் என போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுஜாதா, அவரது அப்பா சுகா ரெட்டி, அக்கா மேகலா ஆகியோரை போலீசார், காவல் நிலையத்துக்கு நேற்றிரவு  அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் தெரியவந்த தகவல் குறித்து போலீசார் கூறியது: குடும்ப தகராறு காரணமாக சுஜாதாவின் அக்கா மேகலா, கணவரை பிரிந்தார். அவர் சுஜாதா வீட்டில் தங்கியிருந்தார். அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் சேட்டு என்பவருடன் மேகலாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதை சேகர் தட்டிக் கேட்டுள்ளார். சேட்டுவையும் எச்சரித்துள்ளார். மனைவி உள்பட உறவினர்கள் அனைவரும் சேகருக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த சேகர், மனைவியை அடித்திருக்கிறார். ‘உன் அக்கா மேகலா, என் வீட்டில் இருக்கக் கூடாது என கூறியிருக்கிறார்.

இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சுஜாதாவும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து போதையில் இருந்த சேகரை, வெளியே தூக்கிச்சென்று அங்குள்ள மின்கம்பத்தில் கட்டியுள்ளனர். பின் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டனர். பாதி உடல் எரிந்த அவரை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் இறந்ததும் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க, சமையல் செய்தபோது தீப்பிடித்து சேகர் இறந்துவிட்டார் என புகார் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து, சுஜாதா, மேகலா, சுகா ரெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சேட்டுவை தேடி வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் உறவினர்களுடன் சேர்ந்து கணவரை மனைவியே எரித்துக் கொலை செய்திருப்பது ஊத்துக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் இதை விட மோசமான ஆடை வடிவமைப்பு இருக்கவே முடியாது!

ஆடை வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு கலைஞரும் தங்கள் மூளையை குடைந்து கிளியல்களுடனும், முன்பக்கமும் பின்பக்கமும் காற்றோட்டமாக ஜன்னல்களை வைத்தும் ஆடைகளை வடிவமைப்பதுண்டு, இம்முறை முற்றிலும் மாறுப்பட்டு எளிதில் உள்ளீடு விளங்குகின்ற ஒளி ஊடுருவும் தன்மையுள்ள ( transparent ) பிளாஸ்டிக் உடையோன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

பிரெஞ்சு நாட்டைச்சேர்ந்த 26 வயதான அழகியின் உடலுக்கு முதன்முதலாக இந்த உடை அணிவிக்கப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டது இதுவரை உருவாக்கப்பட்ட ஆடைகளில் இது மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக கண்காட்சிக்கு வருகை தந்தவர்கள் குறிப்பிட்டனர்.

NRJ AWARDS 2012 என்ற விருது வழங்கும் விழாவில் இந்த ஆடைவடிவமைப்பாளருக்கு சிறந்த வடிவமைப்பிற்கான விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில் தவிப்பு!


நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை இதே நாளில் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த ஒரு வீரரின் குடும்பம் இன்று வரை வறுமையால் தீரா சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

1948 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி மகாத்மா காந்தியை டெல்லி பிர்லா மாளிகையில் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தியை படுகொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த வீரரின் பெயர் தேவ் ராஜ் சிங் தாகூர்.

1952-ம் ஆண்டு நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் கையால் வீரதீர செயலுக்கான விருதைப் பெற்றவர்.

இமாசலப்பிரதேசத்தின் நகான் நகரில் தாகூரின் குடும்பம் வசித்து வருகிறது. இந்திய விமானப் படையில் பணியாற்றி வந்த தாகூருக்கு மனநிலை பாதிக்கப்பட கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. 14 ஆண்டுகாலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் 1987-ல் தாகூர் காலமானார்.

தாகூர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் வறுமையோடு போராடி வருகிறது.

நாட்டின் தேசப்பிதாவை சுட்டுக் கொன்ற கோட்சேவை பிடித்துக் கொடுத்த வீரர் என்ற அடிப்படையில் அரசுப் பணிக்காக இமாசலப்பிரதேச அரசிடம் அவரது குடும்பம் நீண்டகாலமா கோரிக்கை விடுத்தாலும் நிறைவேறியபாடில்லை. இதுபோன்ற அடிப்படையில் எல்லாம் அரசுப் பணி வழங்க முடியாது என்பதில் இமாசலப்பிரதேச அரசு அதிகாரிகள் பிடிவாதம் காட்டுகின்றனர்.

ஆண்டுதோறும் ஜனவரி 30-ந் தேதி மகாத்மாவை நினைவுகூறும் நமக்கு கோட்சேவின் நினைவும் வராமல் போவது இல்லை... இருவரது பெயரும் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை போல தேவ்ராஜ்சிங் தாகூரின் பெயரும் இடம்பெற வேண்டும்.

'1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!


நயன்தாரா தான் நடிக்கவிருக்கும் புதிய தெலுங்குப் படத்திற்கு வாங்கியுள்ள சம்பளத்தைக் கேட்டு டோலிவுட்டில் ஒரே புகைச்சலாய் இருக்கிறதாம்.

நயன்தாரா பிரவுதேவாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. அதனால் அவர் சினிமாவுக்கு குட்பை சொன்னார். தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் தான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்த நயன் கண்ணில் அருவி கொட்டியது. இந்நிலையில் பிரவுதேவா-நயன் இடையே லடாய் ஏற்பட்டு அவர்கள் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், தெலுங்கில் தசரத் இயக்கத்தில் நாகர்ஜுனா நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒன்றரை கோடி ரூபாய். நடிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டு போன நடிகையை வலியக்க அழைத்து வந்து இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கிறார்களே என்று தெலுங்கு பட உலகில் உள்ள பலருக்கும் வயிற்றெச்சலாம்.

தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகைகளுக்குக் கூட இந்த சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பது தான் பலரையும் கடுப்பாக்கியுள்ளது.

இப்பவே ஒன்றரை கோடி என்றால் இனிமேல் எவ்வளவு வாங்குவாரோ?

ரகசியமாக ! எளிமையாக நடந்த ரஜினியின் ' கோச்சடையான் ' பூஜை


ரஜினி உடல்நிலை சரியானதைத் தொடர்ந்து அவர் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ' கோச்சடையான் ' படத்தில் நடிக்க இருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

' கோச்சடையான் ' படத்தில் சரத்குமார், சிநேகா, ஆதி மற்றும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். படத்திற்கான இசையமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவ்வாறு அனைத்து பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் ரஜினி படப்பிடிப்பில் எப்போது கலந்து கொள்கிறார், படத்தின் பூஜை என்று நடைபெற இருக்கிறது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

' கோச்சடையான் ' படத்தின் பூஜை மிகவும் எளிமையாக நடைபெற்று இருக்கிறது. இது குறித்து லதா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் இணையத்தில் "   மலர்கள்..  ஆரத்தி.. ( பட ) பூஜைக்காக தேங்காய் உடைக்கப்பட்டது.. மீண்டும் என் கணவர் மேக்கப் சேரில் அமர்ந்திருக்கிறார்.. கோச்சடையான் !  இது அற்புதமாக தருணம்.  "என்று தெரிவித்து இருக்கிறார்.

படத்தின் இயக்குனரான செளந்தர்யா ரஜினிகாந்த் தன் தந்தையுடன் கோச்சடையான் வேலைகளைத் தொடங்கியது குறித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்- மனைவி லதா பேட்டி

 



சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மனைவி லதா அளித்த பேட்டி விவரம் வருமாறு:- 

கேள்வி:- சூப்பர் ஸ்டாரின் மனைவி என்ற வகையில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் பொதுமக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுவதுண்டு. அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

பதில்:- இது சுலபமானது அல்ல. கண்ணாடி வீட்டுக்குள் வசிப்பது போன்றது. மற்றவர்கள்போல் சுதந்திரமாக இருக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டுவதில்லை. பொதுமக்கள் பார்வையில் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் அல்ல. 

கேள்வி:- உங்கள் கணவர் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது விளைவுகள் ஏற்பட்டுள்ளதா?

பதில்:- நிறைய விளைவுகளை சந்தித்து இருக்கிறேன். அதன் வாயிலாக ஏராளமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. ரசிகர்கள் மத்தியில் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், வீட்டில் சூப்பர் ஸ்டார் என்ற உணர்வுடன் அவர் நடப்பதில்லை. ஒரு நல்ல குடும்ப தலைவராகவே நடந்து கொள்வார். 

கேள்வி:- உலகம் ரஜினியை சூப்பர் ஸ்டாராக பார்க்கிறது. நீங்கள் ஒரு நல்ல மனிதராக அவரை பார்க்கிறீர்கள். இந்த இரண்டு அம்சங்களையும் நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?

பதில்:- ரஜினியை உலகம் உயர்ந்த அந்தஸ்தில் வைத்து பார்ப்பதற்காக, அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இதை எங்களுக்கு கிடைத்த ஆசியாக நாங்கள் உணர்கிறோம். அவருக்கு இரண்டு பக்கங்கள் கிடையாது. எப்போதும் நல்லவராக, முக்கியமானவராகவே இருந்து வருகிறார். 

கேள்வி:- எப்போதும் பிஸியாக இருக்கும் ரஜினியால் எப்படி இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள முடிந்தது?

பதில்:- குழந்தைகளுக்கு எப்போதுமே அவர் ஒரு நல்ல தந்தையாக இருந்து வந்திருக்கிறார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், குடும்பத்துடன், குழந்தைகளுடன் நல்ல முறையில் பொழுதை கழித்து வந்துள்ளார். விடுமுறை காலங்களில் எங்களை வெளியில் அல்லது வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வார். 

கேள்வி:- உங்கள் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரும் சினிமா துறையில் ஈடுபட்டுள்ளனரே? உங்கள் கருத்து என்ன?

பதில்:- அவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். இதைதான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த விரும்பவில்லை. இருவரும் இயல்பாகவே மிகவும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா நல்ல எழுத்தாளர், பேச்சாளர், பாடகர் மற்றும் நடனம் ஆடக்கூடியவர். சவுந்தர்யா ஒரு நல்ல ஓவியர். சினிமாவில் அவர்களுக்கு பிடித்த துறையை அவர்களாகவே தேர்வு செய்துள்ளனர். 

கேள்வி:- பிசியான வாழ்க்கையில் கல்வியாளர், சமூக சேவகர். இப்படி உங்களை எப்படி மாற்றிக் கொள்ள முடிந்தது?

பதில்:- இது ஒரு தனிமனித வாழ்க்கையின் ஒரு அங்கம் என்று கருதுகிறேன். நானும், எனது கணவரும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இருவருமே பக்தி மார்க்கம் கொண்டவர்கள். அவரிடம் கூடுதலாக ஞானமார்க்கமும் உண்டு. 

கேள்வி:- உங்கள் கணவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்:- இதுபற்றி அவரிடம் நான் பேசவில்லை. பேசவும் முடியாது. ஆனால், அவரால் நிறைய நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதை உறுதியாக கூறுவேன். அவர் எப்போதுமே தன்னால் முடிந்த தர்ம காரியங்களையும், உதவிகளையும் செய்து வருபவர். அரசியலுக்கு வருவது முழுக்க முழுக்க அவரது விருப்பத்தை பொருத்தது. ஆனால், எதை அவர் செய்தாலும், அதை நல்லவிதமாக செய்வார். 

இந்த விஷயத்தை பொருத்தவரை அவரிடம் இருந்தே விருப்பம் வெளிப்பட வேண்டும், அவரிடம் இருந்தே தகவல் வரவேண்டும் என்று விரும்புகிறேன். அரசியல் உள்ளிட்ட எந்த விஷயத்திலும் அவரை நான் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ மாட்டேன். என்னைப் பொருத்தவரை, அவரது தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட உணர்வுகள் முக்கியம். அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு


இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.   இந்திய அணி தான் விளையாடிய 4 டெஸ்டிலும் தோற்று மிகுந்த அவமானம் அடைந்தது. மெல்போர்ன் டெஸ்டில் 122 ரன்னிலும், சிட்னி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்னிலும், பெர்த் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்னிலும், அடிலெய்ட்டு டெஸ்டில் 298 ரன்னிலும் மோசமாக தோற்றது.

இந்திய அணி 4 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் (0-4) செய்யப்பட்டது. தொடர்ச்சியாக இப்படி நடந்துள்ளதால் வீரர்கள் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.

வெளிநாட்டில் இந்திய அணி தொடர்ந்து 8 தோல்வியை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியை அதிரடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

டோனி தற்போது 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி) கேப்டனாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக அவரது டெஸ்ட் கேப்டன் பதவி பிறக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுக்கிறது.

இந்திய டெஸ்ட் அணியின் மாற்றத்தின் ஒரு பகுதியாக அவர் கேப்டன் பதவியை இழக்கிறார். ஆனால் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் டோனி கேப்டனாக நீடிப்பார். டெஸ்ட் தொடர் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் போதே 2013-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக டோனி அறிவித்திருந்த முடிவால் அவர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது. அந்த நேரத்தில் 2013-ம் ஆண்டை பற்றி டோனி பேச தேவையில்லை என்று கிரிக்கெட் வாரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அவரது இந்த அறிவிப்பு அணிக்குள் பிளவு இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசமான தோல்வி, அவரழ நடவடிக்கை ஆகியவற்றின் எதிரொலியாக டோனி டெஸ்ட் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது. 

டோனிக்கு பதிலாக டெஸ்ட் அணிக்கு ஷேவாக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஷேவாக்கை பொறுத்தவரை அவர் தனது வழியில் செயல்படுவார். டோனியின் வழியை பின்பற்ற மாட்டார் என்று தெரிகிறது. 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்யும் முறை, பீல்டிங் அமைக்கும் முறை ஆகியவை பற்றி தானே முடிவு செய்துக் கொள்வார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் ஷேவாக் முன்னுரிமை கொடுப்பார். சீனியர் வீரர்களான தெண்டுல்கர், டிராவிட், லட்சுமண் ஆகியோருக்கு டோனியின் கேப்டன் பதவியில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஷேவாக் தலைமையில் விளையாடுவதில் பிரச்சினை இருக்கலாம்.

இதற்கிடையே சீனியர் வீரர்கள் யாரும் ஓய்வு பெற மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் டெஸ்டில் தொடர்ந்து தேர்வு செய்யப்படுவர்கள் என்று தெரிகிறது. சீனியர் வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான ரோகித்சர்மா, ரெய்னா, புஜாரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.