Friday, 12 August 2011

ஒரே சூலில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு: வட்டவளையில் அதிசயம்(காணொளி இணைப்பு)

வட்டவளை லொனெக் பாற்பண்ணையில் பசு ஒன்று ஒரே சூலில் மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது. பொதுவாக பசுக்கள் ஒன்று அல்லது இரண்டு கன்றுகளை ஈனும். எனினும் ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது.
வட்டளை பெருந்தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட வட்டவளை லொனெக் பாற்பண்ணைக் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதாகும்.

பாற்பண்ணையில் 200 க்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன. பாற்பண்ணையின் நடவடிக்கைகள் நவீனமுறையில் இடம்பெறுவதோடு பாற்பண்ணையில் சுமார் 35 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
தனது பாற்பண்ணையிலுள்ள பசுவொன்று ஒரே தடவையில் கடந்த 3 ஆம் திகதி மூன்று கன்றுகளை ஈன்றதனால் இந்தப்பாற்பண்ணையின் நிருவாகியான ஜி.கிருஸ்ணமூர்த்தி பெருமைக்கொண்டுள்ளார்.

பேசவில்லை என்பதால் 10,000 USD வென்ற ஜோடி

விமானத்தில் ஏறும் போதும்,வரவேற்கும் போதும் அவர்கள் பிரன்சில் பேசவில்லை என்று குறித்த ஜோடி 350,000 பவுண்ட்ஸ் நஷ்ட ஈடாக கேட்டு இருந்தது.
எனினும் அவருகளுக்கு 8000 பவுண்ட்ஸ் நஷ்ட ஈடாக வழங்கபட்டுள்ளது.
அந்த நாடு சட்டத்தின்படி ஊழியர்கள் தேசிய மொழி இரண்டிலும் பேச கூடியவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் அந்த ஜோடி 7UP கேட்டதற்கு, Sprite குடிபானம் கொடுத்ததாகவும் கூறியுள்ளது .

தண்ணீர் பாட்டிலில் தனது விந்தை ஊற்றியவருக்கு $27,௦௦௦000 ௦௦௦ அபராதம்

அவருடன் வேலை செய்யும் பெண்ணின் தண்ணீர் பாட்டிலில் ,தனது விந்தை ஊற்றியதர்க்காக குறித்த நபருக்கு $27,௦௦௦000 அபராதம் செலுத்துமாறு அமெரிக்க நீதி மன்றம் தீர்பளித்துள்ளது.

தொகுப்பளியை அறைந்த நடன கலைஞர் – Video


தாயின் குரூப் செக்ஸ் நடவடிக்கையை படம் பிடிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட 6 வயது மகள்- video

அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம் தாய் ஒருவர் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் உறவு கொண்டமை மட்டும் அல்லாமல் அப்படுக்கையறைக் காட்சிகளை புகைப்படங்கள் பிடிக்கும்படி 06 வயது மகளை நிர்ப்பந்தித்து இருக்கின்றார்.
இரகசிய தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் இளம் தாயை கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மறியலில் போடப்பட்டார்.
மூன்று வேறு சந்தர்ப்பங்களில் ஆறு ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டபோது கையடக்கத் தொலைபேசியில் மகள் வீடியோக்கள் பிடித்துக் கொண்டார் என்று பொலிஸாருக்கு தாய் தெரிவித்து இருக்கின்றார்.
மகள் முன்னிலையில் அநாகரிமாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 10 வருட சிறைத் தண்டனைக்கு உரிய குற்றத்தைப் புரிந்து இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.

வித்தியாசமான முறையில் அமைந்த ஐ.போன் கவர்!(படங்கள் இணைப்பு)

தனிமையில் வாடுபவர்களுக்காகவே இந்த கை இணைக்கப்பட்ட iPhone உறை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது யப்பானின் டோக்கியோவில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது இந்த கை இணைக்கப்பட்ட போன் உறை. ஐபோன் 4 இல் பயன்படுத்தத்தக்க வகையில் இது ஆக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது நிஜக் கைகளின் அளவிலேயே ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொட்டு உணரும் போது ஓர் நிஜக் கையை ஸ்பர்சிக்கும் உணர்வே ஏற்படுகிறது.

ஆண்,பெண், குழந்தையின் கை வடிவங்களில் வெளிவந்துள்ள இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைப் பயன்படுத்துவோர், இந்த உறையில் இணைக்கப்பட்ட கையுடன் கைகோர்த்து பிடித்தமானவர்களுடன் பேசுகையில் அவர்களின் அருகில் இருப்பது போல தாம் உணர்வதாக தெரிவித்தனர். இதன் தயாரிப்பாளர், தனிமையில் வாடுபவர்கள் தாம் பிரிந்திருக்கும் உறவுகளுடன் இந்த உறை இணைக்கப்பட்ட போனில் பேசும் போது தனிமை மறந்து உல்லாசமாக இருப்பதற்காகவே இந்தத் தயாரிப்பு தயாரிக்கப்படுவதாக தெரிவித்தார். இதன் சந்தைப்பெறுமதி 65 அமெரிக்க டொலர்கள் ஆகும்.


தேசியத்தலைவர் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு ஏற்பாடு

விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வசிப்பிடத்தை விரைவில் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீடு முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வழியில் பிரதான வீதியில் இருந்து சுமார் 4கிலோ மீற்றர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது.
இந்த வீட்டிற்கு அண்மைக்காலமாக அதிகளவான தென்னிலங்கை சிங்கள மக்கள் வந்து செல்கின்றனர். இதனோடு பெருமளவில் பொலிஸாரும், இராணுவத்தினரும் கூட வந்து செல்கின்றனர்.
வெளியில் சாதாரண வீடுபோன்று தோற்றமளிக்கும் இந்த வீடு எத்தகைய தாக்குதலுக்கும் சிதைவுறாத வகையில் உள்ளே பாதுகாப்பான ஆழமான பதுங்குகுழிகளைக் கொண்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு பதுங்குகுழிப் பாதைக்கும் கனமான இரும்புக் கதவுகள் போடப்பட்டுள்ளது.
இதேவேளை இங்கு பிரபாகரன்தான் தங்கினார் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் அதன் அமைப்பு முறையை அவதானித்த இராணுவத்தினர் இங்கு பிரபாகரன் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் உறவுகளே! வெளிநாட்டில் அணிகின்ற ஆடைகளைத் தவிர்த்து எம் கலாசார உடைகளை அணிந்து வாருங்கள்...!


வெளிநாடுகளில் வாழும் எமது அருமை உறவுகளுக்கு வணக்கம். ஈழத் தமிழ் மக்கள் உள்நாட்டில் சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்த போதெல்லாம், நீங்கள் ஐரோப்பிய நாடுகளின் வீதிகளில் இறங்கி பேரணி நடத்தியதை நாம் ஒருபோதும் மறந்திலோம். சொந்த நாட்டை விட்டு வசதி, வாய்ப்பு என எல்லாமும் இருக்கக்கூடிய வெளிநாட்டிற்கு வந்தபின்பு நம் பாட்டில் இருக்கவேண்டியதுதானே. இந்த நினைப்பு இம்மியும் இல்லாமல் எங்களுக்காக நீங்கள் செய்தவை, செய்து கொண்டிருப்பவை ஏராளம்.


நீங்கள் வெளிநாடுகளில் இருப்பது எங்களுக்கான பலம் என்ற உண்மை முழுமையாக உணரப்பட்ட நிலையில், உங்களின் யாழ்ப்பாண வருகை கண்டு மட்டற்ற மகிழ்வு அடையாமல் இருக்கமுடியாது.

நல்லூர்க் கந்தனின் திருமுகம் காண, அவனின் பெருந்திருவிழாக் காலத்தில் நீங்கள் வருவதானது உங்களின் இறைபக்திக்கும், தாய்த் தேசம் மறவாத பெருந்தன்மைக்கும் எடுத்துக்காட்டாகும்.

இத்தகைய உயர்ந்த சிறப்புக்கள் உள்ள உங்களிடம் விநயமாக ஒன்றைக் கூறவேண்டும். அதாவது, நீங்கள் வெளிநாடுகளில் எப்படியான உடைகள் அணிகின்றீர்கள் என்பது பற்றியெல்லாம் எமக்கு எந்தக் கவலையும் கிடையாது.

ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வருகைதருகின்ற நீங்கள், வெளிநாட்டில் அணிகின்ற ஆடைகளைத் தவிர்த்து எங்கள் பண்பாட்டிற்கு உகந்த உடைகளை அணிய வேண்டும் என்பது எங்கள் பெருவிருப்பம்.

இப்பெருவிருப்பம் உங்கள் பற்றிய உயர்ந்த நினைப்பை உருவாக்கவேண்டும் என்ற நன்நோக்கம் கொண்டது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

சட்டக் கல்வியை நிறைவு செய்துவிட்டு பாரதம் திரும்பிய மகாத்மா காந்தி, தான் அணிந்திருந்த அந்நிய நாட்டுக் கலாசார ஆடைகளை புறந்தள்ளி பாரததேசம் மதிக்கக்கூடிய உடைகளை அணிந்தார் என்ற செய்தியை அறிகின்றபோது காந்தியின் தேசப்பற்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றதல்லவா? ஆம், எங்கள் மண்ணில் எங்களுக்கே உரித்தான ஆடைகளை அணிவதே பொருத்தமானதாகும்.

மனித வாழ்வில் ‘பொருந்துகை’ என்பது மிகவும் முக்கியமானது. எனவே வெளிநாடுகளில் இருந்து தாயகம் வரும் எமது அருமை உறவுகள் எங்கள் பண்பாட்டிற்குரிய ஆடைகளை அணியவேண்டும். அதேநேரம் நீங்கள் வாழும் நாட்டில் பிறந்த தமிழ் மண்ணின் வாரிசுகளுக்கும் தமிழ்ப் பண்பாட்டைக் கற்றுக்கொடுங்கள்.

நிச்சயம் அவர்கள் அதன்பால் விருப்பம் கொள்வர். அது வெறுமையான விருப்பமன்று. அது தமிழ் மீது பற்றுவைக்க, தங்கள் தாத்தா, பாட்டி என்ற உறவைப் போற்ற, தாய் மண்ணில் பாசம் கொள்ள நிச்சயம் உதவும் என்பதை சத்தியமாகச் சொல்கின்றோம்.

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டுவிழா � 2011 (படங்கள் இணைப்பு)

சுவிற்சர்லாந்து தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியால் நடத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டி, சிறுவர்களிற்கான சுவட்டு மைதான மெய்வன்மைப் போட்டிகள், பார்வையாளர்களிற்கான போட்டிகள் என மிகவும் சிறப்பாக நடைபெற்றன. 06-07-08.2011 (சனி,ஞாயிறு) ஆகிய இரு நாட்களும் காலை 8.30 தொடக்கம் விளையாட்டுவிழா நடைபெற்றது.

ஈகைச்சுடரேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம் செய்யப்பட்டு தமிழீழ தேசியக் கொடி, சுவிஸ் நாட்டின் தேசியக் கொடி, தமிழீழ விளையாட்டுத்துறைக் கொடி, தமிழர் இல்லக் கொடி ஆகியவை ஏற்றப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டு விழா ஆரம்பமாகியது.

வின்ரத்தூரில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் உதைப்பந்தாட்டம், (ஆண், பெண் இருபாலாருக்குமானது) கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்துத் துடுப்பாட்டம், கரம், குறிபார்த்துச் சுடுதல், குறிபார்த்து எறிதல், குண்டெறிதல், ஈட்டியெறிதல், கயிறுழுத்தல், சங்கீதக் கதிரை, கிளித்தட்டு (தாச்சி) சிறுவர்களிற்கான சுவட்டுமைதான மெய்வன்மைப் போட்டிகள் என நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் விளையாட்டுக் கழகங்களும், விளையாட்டு வீரர் - வீராங்கனைகளும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.

கழகங்களிற்கிடையிலான போட்டிகளில் பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து கழகங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

காலநிலை மப்பும், மந்தாரமும், மழையுமாக இருந்த போதும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்புற நடைபெற்றன. தமிழ் விளையாட்டு வீரர்களிற்கு ஒரு களமமைத்துக் கொடுக்கும் இடமாக இந்த விளையாட்டு விழா அமைந்ததெனவும், தாயகத்தையும், தமிழீழத்தையும் நினைத்து கொள்ளும் இடமாகவும் இது இருந்ததென பலரும் பாராட்டினார்கள்.































பேஸ்புக்கால் பாடசாலையில் கோட்டைவிடும் மாணவர்கள்!


டீன் ஏஜ் வயதினர் பேஸ்புக் மற்றும் ஏனைய சமூகத் தளங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பரீட்சைகளில் கோட்டை விடுவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அவர்களின் நன்னடத்தைகளும் கேள்விக்குறியாவதாக கல்வியலாலர்களும் எச்சரித்துள்ளனர்.

அவர்கள் வளர்ந்து ஒரு நிலையை அடையும் போது பேஸ்புக் போன்ற சமூகத் தளங்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் மாணவர்களின் நினைவுத்திறனும் குறைகிறதாம்.

உளவியல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது அந்த ஆய்வு.

அனைத்துலக நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் - சிறிலங்காவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை


மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக தரம் வாய்ந்த, நம்பகமானதும், சுதந்திரமானதுமான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால், சிறிலங்கா அனைத்துலக நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.


நியுயோர்க்கில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் நாளாந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

சிறிலங்காவில் அனைத்துலக மனிதஉரிமைச் சட்டங்களும், மனிதாபிமானச் சட்டங்களும் மீறப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகம் வாய்ந்த சுதந்திரமான விசாரணை நடத்தப்படுவதற்கே அமெரிக்கா ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அனைத்துலக தரத்திலான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றே அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அது அனைத்துலக தரத்துக்கேற்க இருக்க வேண்டியது சிறிலங்காவின் பொறுப்பு என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக இதைச் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்ட விக்ரோரியா நுலன்ட் அம்மையார், சிறிலங்கா அதைச் செய்யும் என்று அமெரிக்கா நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா நம்பகமான, சுதந்திரமாக அனைத்துலக தரம் வாய்ந்த விசாரணைகளை நடத்தத் தவறினால், அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா: கொலைக்களங்களில் இருந்து மீண்டவர்களின் அதிர்ச்சி தரும் வாக்குமூலங்கள்


போரில் பாதிக்கப்பட்ட றோசி என்ற 45 வயதான பெண் தான் உயிர் வாழ விரும்பவில்லை என்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், போர் என்ற சொல்லைக் கேட்டாலே இந்த தமிழ்ப்பெண்ணுக்கு கண்ணீர் வருகிறது.

வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மைநிலையை அறிந்து கொள்ள இரகசியமாக அங்கு சென்ற ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ செய்தியாளர் பிரியம்வதா, ‘இந்தியா ருடே‘ இணையத்தில் இவ்வாறு எழுதியுள்ளார். இந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இது.

சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு எதிராக இராணுவத்தினர் மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டதாக ஒரு கதை உள்ளது.

நாட்டின் வடக்கு,கிழக்கில் உள்ள தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக பரவலான ஆவணங்கள் இருந்த போதிலும், கொழும்பு அதனை நிராகரித்து வருகிறது.

போரில் தப்பியவர்கள் தமக்கு நீதி கிடைக்கும் என்ற எந்த நம்பிக்கையும் இன்றி, உலகின் மிக அடர்த்தியான இராணுவ வலயங்களில் ஒன்றில் இன்னமும் அச்சத்துடன் வாழ்கிறார்கள்.

உலகில் மிகமோசமான போர்க்குற்றங்கள் இடம்பெற்ற இடத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் மற்றும் அதை மறுக்கும் செய்திகளைப் பகுப்பாய்வு செய்து உண்மைகளை அறிந்து கொள்வதற்காக ஹெட்லைன்ஸ் ருடே செய்தியாளர் பிரியம்வதா விடுதலைப் புலிகளின் முன்னைய கோட்டையான வன்னிக்கு இரகசியமாகப் பயணம் செய்தார்.

வன்னிப் பிராந்தியத்தை அடைந்தபோது, பெரும்பாலும் சிங்களவர்களைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தின் படையினரால் அது மொய்க்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு சில மீற்றருக்கும் ஒரு படைச்சிப்பாய் ரோந்து சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு 100 மீற்றருக்கும் இடையில் ஒரு சோதனைச்சாவடி இருந்தது.

வன்னிப் பகுதி எங்கும் பெரும்பாலும் உள்ளூர் தமிழ் மக்களிடம் இருந்து கட்டாயமாக பறிக்கப்பட்ட நிலங்களில் சிறிலங்கா இராணுவம் பிரதான படைத்தளங்களை அமைத்துள்ளது.

அச்சம், பாதுகாப்பற்ற உணர்வுடன் காணப்படும் உள்ளூர் தமிழ்மக்களில் மிகச் சிலரே ஒளிப்படக்கருவி முன்பேச இணங்கினர்.

இரகசியமான இடங்களில் செவ்வி காணப்பட்ட மக்கள், அந்த ஒளிப்பதிவுகள் சிறிலங்கா படையினரின் கைகளில் கிடைத்தால், தமக்கு மரணம் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.

போரில் பாதிக்கப்பட்ட றோசி என்ற 45 வயதான பெண் தான் உயிர் வாழ விரும்பவில்லை என்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், போர் என்ற சொல்லைக் கேட்டாலே இந்த தமிழ்ப்பெண்ணுக்கு கண்ணீர் வருகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட பிரதேசத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசியதற்கு சாட்சியாக இருக்கிறார் றோசி.

கிளிநொச்சியில் இருந்து தனது கணவன், ஒரு மகன், நான்கு மகள்கள், ஒரு மருமகன், 10 மாதப் பேரக்குழந்தையுடன் வட்டுவாகல் பாதுகாப்பு வலயத்துக்குள் நகர்ந்த மறுநாள்- 2009 மே 14ம் நாள் அந்தப் பாதுகாப்பு வலயம் தாக்குதலுக்குள்ளானது.

“நாங்கள் இருந்த இடத்தில் குண்டு வீழ்ந்தது. அப்போது அமைதியாகவே இருந்தது. குண்டுகள் வீசப்பட்டதும் தான் நாம் புரிந்து கொண்டோம்.

அந்தப் பகுதியெங்கும் புகைமண்டலம் சூழ்ந்திருந்தது. எனக்கு எதுவும் தெரியவில்லை.எனது கை துண்டிக்கப்பட்டது. எனது மார்பை சிதறல்கள் சிராய்த்திருந்தன.

எனது மகன் என்னை மேலே தூக்கினார். நான் மறைத்தேன். எனது மகள்களை பார்க்கும்படி அவரிடம் கேட்டேன். அவர்கள் எல்லோரும் நன்றாக இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.

ஆனால் அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்பது அவர் அறிந்திருந்தார். எனது எல்லாப் பிள்ளைகளும் இறந்து விட்டார்கள். ஒருவருமே இல்லை“ என்றார் றொசி.

“அந்தநாளில் மட்டும் 3000 மக்கள் எனது கண்முன்னே இறந்தனர்.“ என்றார் அவர்.

போரில் பாதிக்கப்பட்ட இன்னொருவரான ரதி, அந்தக் கொடிய நாளில் தனது கணவரையும் மகனையும் பறிகொடுத்த துயரமான நிகழ்வில் இருந்து அவர் இன்னமும் மீளவில்லை.

“நான் அப்போது பதுங்குகுழியில் இருந்தேன். எனது மகனும் கணவரும் வெளியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வானத்தில் இருந்த வீழ்ந்த குண்டு ஒன்று வெடித்து சிதறியது.

அதன் குண்டுச் சிதறல்கள் தாக்கி கணவரும் மகனும் இறந்தனர். எமக்கு சத்தம் கேட்டது“ என்று கூறி நிறுத்தினார் ரதி.

ரதியின் மகன் லாவண்யா சொல்கிறார் “ வள்ளிபுனத்தில் இராணுவத்தினர் எம்மீது குண்டு வீசினர். அவரகள் இரசாயன குண்டுகளை வீசினர்.
வானத்தில் இருந்து தரையில் விழுந்த குண்டுகள் துண்டுகளாக சிதறின. ஆனால் சத்தத்தைக் கேட்க முடியவில்லை“

“ஒரு மதகுரு ஊடாக நான் எனது குடும்பத்தினருடன் சரணடையச் சென்ற போது, எனது இரண்டாவது குழந்தை இரசாயனக் குண்டினால் பாதிக்கப்பட்டது. அது பொஸ்பரஸ் குண்டு. அவன் முற்றாகவே பாதிக்கப்பட்டான்.“ என்கிறார் பாதிக்கப்பட்ட மற்றொருவரான தேவி.

“சிறுவர்கள் வயதானவர்கள் என்று எல்லோருமே மருத்துவமனையில் உதவியின்றிக் கிடந்தனர். இந்தத் தாக்குதலில் இரு சிறுவர்கள், ஒரு முதிய பெண்ணுடன் எனது கணவரும் மகனும் கொல்லப்பட்டனர்“ என்றார் ரதி.

தம்பி என்ற 8 வயது சிறுவன் தனது தாயைத் தவிர மொத்தக் குடும்பத்தையும் இழந்து பாதிக்கப்பட்டவர். சிறுவர்கள் கூட விட்டு வைக்கப்படவில்லை என்பதை அவர் விபரிக்கிறார். அவர் போரில் காயமடைந்தவர்.

“எப்போதும் ஷெல் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன. எல்லா இடங்களிலும் குண்டுகள் விழுந்தன. இந்தக் காயத்தைப் பாருங்கள். இதனுடன் தான் எனது வாழ்க்கையை ஒட்ட வேண்டியுள்ளது“ என்கிறார் தம்பி.

காயமடைந்த பொதுமக்களுக்கு மருத்துவமனைகள் கூடப் பாதுகாப்பானவையாக இருக்கவில்லை. காவ்யாவின் தந்தை போரில் காயமடைந்து பின்னர் இறந்து விட்டார்.

“தந்தையை நாம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அப்போது அங்கு நடந்த குண்டுத் தாக்குதலில் ஒரு இளம்பெண்ணும், இரு ஆண்களும் தலையில் இருந்து மூளை வெளியேறிய படி இறந்தனர்.“ என்றார் காவ்யா.

பாதிக்கப்பட்டவர்களின் அழுகை எல்லாவற்றையும் கூறுகின்றன.

சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்றங்களின் பட்டியலில் முகாம்களில் இருந்த பெண்கள் மீதான துன்புறுத்தலும் அடங்கியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டாத இரகசிய முகாம் ஒன்றில் ஒரு பெண் ஒரு ஆண்டைக் கழித்துள்ளார். “அது ஒரு சித்திரவதை முகாம். அடிப்படை வசதிகள் எமக்கு கிடைக்கவில்லை. அரசசார்பற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படவில்லை.“ என்கிறார் சுந்தரி.

“அது ஒரு இராணுவ முகாம். என்ன பிரச்சினையென்றாலும் இராணுவத்தினரையே அணுக வேண்டும். அவர்கள் சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.“ என்றார் சுந்தரி.

“அங்கே பாலியல் வன்புணர்வுகள் நடந்தன. இளம்பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். ஆனால் எப்படி அதை வெளியே சொல்ல முடியும்? அவர்கள் சங்கடப்படுவார்கள்.“ என்று சொல்கிறார் சுந்தரி.

செய்தியாளர்- பெண்கள் ஆடைகளின்றி அறைகளில் அடைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் கூறினவே?

சுந்தரி- ஆம், நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததால், அவர்கள் எம்மை துன்புறுத்தினர். எம்மைத் தடுத்து வைத்துத் துன்புறுத்தினர்.

திவ்யா என்ற பாதிக்கப்பட்ட இன்னொரு இளம்பெண் சொல்கிறார், “இரண்டு அல்லது மூன்று பெண்கள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் குளிக்கும் போது அவர்கள் படம் எடுத்துள்ளனர்.“

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கும் இந்த நிலைமையில் வேறுபாடு இல்லை. இளம் ஆண்கள், படித்தவர்கள் கூட அவமானத்தை சந்திக்க வேண்டியிருந்தது.

முருகன் என்ற புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப்பிரிவில் இருந்த முன்னாள் போராளி, ஒரு ஆண்டுக்கு மேலாக முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர், சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

“முன்னாள் போராளிகளான எம்மை சீர்திருத்தவதற்காக புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைத்தனர். ஆனால் நாங்கள் சீர்திருத்தும் நடவடிக்கைகளை விட அதிகளவில் வன்முறைகளை சந்தித்தோம். அது சித்திரவதைக்கு அப்பாலும் இருந்தது.

கால்நடைகள் போன்றே எம்மை வைத்திருந்தனர். ஒருமுறை ஒரு மேஜரும், லெப்.கேணலும் எம்மை வந்து சந்தித்தனர். அப்போது நாம் 800 பேர் இருந்தோம்.

அவர்கள் தமது முகத்தை மறைத்திருந்தனர். அவர்கள் பேய்களைப் போன்று இருந்தனர்.“ என்றார் முருகன்.

றோசி மேலும் கூறுகிறார் “இறந்தவர்களின் சடலங்கள் வீசப்பட்டுக் கிடந்த கழிவுநீரை எடுத்துக் குடித்தோம். பசியால் ஒரு தாயும் குழந்தையும் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது எனக்குத் தெரியும். எனது கண்களால் அதைப் பார்த்தேன்.“

“சிறிலங்கா இராணுவம் திடீரென எமது நிலத்தைப் பிடித்தனர். அவர்கள் எமக்கு எதிராக எமது மக்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பிரயோகித்தனர்.

நான் போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளுடன் இணைந்து கொண்டேன். அவர்கள் அழைத்தார்கள், ஆனால், எமது மக்களின் உரிமைக்காகப் போராடச் சென்றேன். அது ஒரு தேவையாக இருந்தது“ என்றார் சிவா.

30 ஆண்டுகளாகத் தொடர்ந்து, கடந்த 2009 மே மாதத்துடன், சிறிலங்கா இராணுவத்தினர் பெற்ற முழுமையான வெற்றியுடன் முடிவடைந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா கூறுகிறது.

அரசசார்பற்ற நிறுவன வட்டாரங்களின் புள்ளிவிபரங்கள் இது ஒன்றரை இலட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறுகின்றன.

மரணதண்டனைப் பாணியிலான கொலைகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீதான விமானக் குண்டுவீச்சுகள், பொதுமக்கள் மற்றும் பெண்போராளிகள் மீதான பாலியல் தாக்குதல்கள், இரசாயன ஆயுதங்கள், கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்தியது, காயமடைந்த பொதுமக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் தடுத்தது, குற்றச்சாட்டுகளின்றி தடுத்து வைத்தது- இவை சிறிலங்கா இராணுவத்தின் மீது சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் பலவற்றில் சிலவாகும்.

புலிகளின் கரங்களும் இரத்தம் தோய்ந்தவை தான். தீபன் என்பவரின் 16 வயது மகன் ராஜன் பாடசாலையில் இருந்து புலிகளால் கடத்தப்பட்டார்.“ எனது மகனுக்கு 16 வயது. புலிகள் அவரை பிடித்துக் கொண்டு போய் தமது படையில் சேர்த்தனர். நாங்கள் அவனை அனுப்பவில்லை. அவன் பெரிய கனவுகளுடன் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தான்“ என்கிறார் தீபன்.

பலூன்களினால் உருவாக்கப்பட்ட திருமண உடை(படங்கள் இணைப்பு)


சிறந்த வல்லுனர்களை கொண்டு பலூன்களினால் உருவாக்கப்பட்ட உடைகள், உருவங்கள் மற்றும் கலைத்திறன் மிக்க வித்தியாசங்களை நாம் பார்த்திருக்கின்றோம். அதில் ஒன்று தான் பலூன்களினால் செய்யப்பட்ட இந்த திருமண உடை.





இங்கிலாந்தை சேர்ந்த லெவிட் என்ற பெண் ஒருவர் இளவரசி கேத்திரின் உடையை போன்று 5000பலூனை கொண்டு திருமண உடை செய்து அசத்தியுள்ளார்.







இதுபற்றி லெவிட் கூறுகையில் வெண்ணிற ஆடை என்பதால் வெள்ளை பலூன்களை கொண்டு வடிவமைத்தேன். ஆடையின் மேல் பகுதிக்காக கலர் பலூன்களை பயன்படுத்தினேன். 5 ஆயிரம் பலூன்களை கொண்ட இந்த உடையை உருவாக்க 4 நாட்கள் ஆனது. இதற்கு முன் ஒரு கார் முழுவதையும் பலூனால் அலங்கரித்து தோழியுடன் ஓட்டிச் சென்று அசத்தியவர் லெவிட் என்பது குறிப்பிடதக்கது.

உலகின் மிகப்பெரிய நாய்(படங்கள் இணைப்பு)


கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகப்பெரிய நாய் என்ற சாதனையை இந்த ஹெர்குல்ஸ் பெற்றுள்ளது. ஹெர்குல்ஸ் என்பது இதன் பெயர். இது இங்லிஷ் மாஷ்டிஃப் வகையைச் சேர்ந்த்தது. இதன் எடை 282 பவுண்ட். இதன் கழுத்து 38 இன்ச். இதன் வயது 3 ஆகும்.





அதிசய மனிதர்களை உள்ளடக்கிய கூகி்ள் மேப்(வீடியோ இணைப்பு)


சவிச்சர்லாந்தின் 8877 Quarten என்ற இடத்தை கூகிள் மேப்பில் ஒரு அதிசய காட்சியை காணலாம். 8877 Quarten, Switzerland என்ற முகவரியை கூகிள் மேப்பில் தேடிய பின்னர் வானத்தை பார்க்கக் கூடியவாறு ஸ்கோரல் செய்யுங்கள்.





அங்கே ஒரு உருவம் தோன்றும், இது கூகிள் படம்பிடித்த கொமெரா லென்ஸை சரியாக சுத்தம் செய்யாததால் வந்திருக்கலாம் என்கிறார்கள். இதைப்பார்ப்பதற்கு இரு மனித உருவங்கள் இணைந்து நிற்பதைப்போன்று காணப்படுகிறது.