Friday, 29 July 2011

புதுமுக நடிகையுடன் காதல் தோல்வி: நடிகர் அஜய் திடீர் தற்கொலை

 
அம்புலி என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜய். இது 3டி படமாகும். ஓர் இரவு என்ற திகில் படத்தை எடுத்த இரட்டை இயக்குனர்கள் ஹரி சங்கர், ஹரீஸ் நாராயணன் ஆகியோர் டைரக்டு செய்கின்றனர். படப்பிடிப்பு முடிந்து அம்புலி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் அஜய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் சாவுக்கு காரணம் தெரியவில்லை.

அம்புலி படத்தில் அஜய் ஜோடியாக நடித்தவர் புதுமுக நடிகை சனம். இவரும் பெங்களூரை சேர்ந்தவர். சனம் மீது அஜய் காதல் வயப்பட்டதாகவும் ஆனால் சனம் காதலை ஏற்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியுள்ளது.

போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அஜய் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.

இதுபற்றி அம்புலி படத்தின் இயக்குனர் ஹரி சங்கர் கூறியதாவது:-

அம்புலி படத்தை முடித்து விட்டு அஜய் பெங்களூர் சென்று விட்டார். டப்பிங் பேசும் போது அழைக்கிறோம் என்று அவரிடம் சொல்லி அனுப்பினோம். அஜய்க்கு தமிழில் பேச தெரியும். எனவே தான் குரல் பொருத்தமாக இருந்தால் அவரையே பேச வைக்கலாம் என முடிவு செய்தோம்.

ஆனால் திடீரென்று தூக்கில் தொங்கி அஜய் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக பெங்களூர் சென்றோம். அஜய் வீட்டுக்கு போய் துக்கம் விசாரித்தோம். தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

அம்புலி படத்தில் கதாநாயகியாக நடித்த சனத்தை அஜய் காதலித்தாரா என்பதும் எங்களுக்கு தெரியாது. அஜய் பெற்றோர் எங்களிடம் விசாரித்தனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஏதேனும் சம்பவங்கள் நடந்ததா என்று கேட்டனர். எங்களுக்கு தெரிந்த வரை அப்படி எதுவும் இல்லை என்றோம்.

அஜய் இறந்ததால் அம்புலி படத்தில் அவருக்கு வேறு ஆள் வைத்து டப்பிங் பேச வைத்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜய் உதிரம் என்ற படத்திலும் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இதனால் அந்த படக்குழுவினர் தவிப்பில் உள்ளனர்.

சாக்கடைக்குள் தலை கீழாகத் தொங்கி தொலைபேசியைத் தேடிய அமெரிக்கர்!

சாலையோரத்தில் உள்ள சாக்கடை கழிவு நீரினுள் விழுந்த கைத்தொலைபேசியைத் தேடி குழிக்குள் தலை கீழாகத் தொங்கி தலையை வைத்து தேடும் ஒருவரையே படத்தில் காண்கிறீர்கள்.

21 வயதான Jared Medeiros என்ற அமெரிக்கரே மேற்படி வீரதீரச் செயலில் இறங்கியவராவார்.

இறுதியாக தீயணைப்பு வீரர் ஒருவரின் உதவியுடன் கைத்தொலைபேசி மீட்க்கப்பட்டது.

60 வயதுக் குழந்தையைப் பிரசவித்த 92 வயதுப் பாட்டி (படங்கள் இணைப்பு)

 
92 வயது மூதாட்டி ஒருவர் 60 வயதுக் குழந்தை ஒன்றை சீனாவில் சில நாட்களுக்கு முன் பிரசவித்து உள்ளார். என்ன அதிசயமாக இருக்கின்றதா? மூதாட்டியின் பெயர் Huang Yijun. சீனாவின் தென்பகுதியைச் சேர்ந்தவர். குழந்தை இறந்துதான் பிறந்து இருக்கின்றது. இவர் உண்மையில் ஒரு கல் குழந்தையைத்தான் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சுமந்து வந்திருக்கின்றார்.

வயிற்றில் உருவான சிசு 1947 ஆம் ஆண்டு இறந்து இருக்கின்றது. இறந்த சிசுவை வெளியில் எடுக்க வெண்டும் என்று வைத்தியர்கள் அந்நாட்களில் சொல்லி இருக்கின்றனர். ஆனால் வறுமை காரணமாக இவர் பேசாமல் இருந்து விட்டார்.

இறந்த சிசு வயிற்றுக்குள் கல்லைப் போல் ஆகி விட்டது. இது மிகவும் அரிதாக ஏற்படக் கூடிய நோய்.

முட்டை கருப்பைக்குள் வெளியில் தங்கி விடுகின்ற அதே சமயம் மகப் பேறு தோல்வி அடைகின்றபோது இந்நோய் ஏற்பட்டு விடுகின்றது.