Friday, 4 November 2011

விசித்திரமான யானை முகம் கொண்ட இளைஞர்

இந்த உலகில் எத்தனையோ விதமான விசித்திர மனிதர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த இளைஞனின் விசித்திர குறைபாடுகள் மற்றவர்களை சோகத்தில் ஆழ்த்தக்கூடியவை.
இப்படிப்பட்ட இந்த இளைஞனை இந்தியாவின் யானை மனிதன் அல்லது யானை முக இளைஞன் என அழைக்கின்றனர்.
கிழக்கு இந்தியாவின் லோரிகா எனும் பகுதியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
26 வயது நிரம்பிய இவரின் பெயர் லலித் ராம். இவருடைய முகத்தில் காணப்படும் விசித்திர தோற்றமே இவரை யானை முக இளைஞன் என்று மற்றவர்கள் அழைப்பதற்கு காரணம்.
மேலும் இவருக்கு முகத்தில் மேலதிக தசைகள் வளர்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இவரை நாள்தோறும் பலர் கேலி மற்றும் கிண்டல் செய்கின்றனர்.
மேலும் பலர் உனது முகம் மிகவும் அசிங்கமாக இருப்பதால் உனக்கு திருமணம் நடக்காது என்றும் உன்னை யாரும் காதலிக்க மாட்டார்கள் என்றும் கூறுகிறார்களாம்.
இந்த மனிதர்களுக்கு மத்தியில் இந்த இளைஞன் மன உறுதியுடன் எனக்கு திருமணம் நடக்கும் என தெரிவித்துள்ளார்.
இவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த விசித்திர குறைபாடு மரபணு மாற்றங்களால் ஏற்பட்டது எனவும் இதனை அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முடியும் எனவும் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவரான விவேக் குமார் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த இளைஞன் தற்போது அறுவை சிகிச்சை செய்ய ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வெளிவந்த பாம்பால் பரபரப்பு

ஏடிஎம்-ல் என்ன வரும்? பணம் வரும். இல்லாவிட்டால் பணம் இல்லை என்று வரும் மெசேஜை பார்த்து எரிச்சல் வரும்.
ஸ்பெயினில் உள்ள ஏடிஎம் மெஷினில் இருந்து பாம்பு வந்திருக்கிறது. ஸ்பெயினின் பாஸ்க் பகுதியில் உள்ளது லாடியோ நகரம். இங்குள்ள கஜா மாட்ரிட் வங்கி ஏடிஎம்-க்கு நேற்று ஒருவர் பணம் எடுக்க வந்தார்.
கார்டை நுழைத்து கடவுச்சொல்லை அடித்து பண தொகையை டைப் செய்தார். பணம் வரும் வழியில் தயாராக கையை வைத்திருந்தார்.
நாணய நோட்டுகளுடன் கூடவே வழுவழுவென்று ஏதோ தென்பட்டது. சுதாரித்த அவர் நோட்டுகளை சட்டென்று இழுத்துவிட்டார்.
பாம்பு ஒன்று புஸ்.. புஸ் என்று சத்தம் போட்டபடியே மெதுவாக வெளியே தலையை நீட்டியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த பொலிஸ்காரர் ஒருவர் தனது லத்தியை லாவகமாக அதன் அருகே பிடித்தார். அதை பிடித்துக்கொண்டு ஏற தொடங்கியது பாம்பு.
இதற்குள் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உள் பக்கத்தில் குச்சியை விட்டு குத்தி அதை வெளியே தள்ளினர்.
ஒரு பெட்டியில் அடைத்து பாம்பு பண்ணைக்கு அதை பத்திரமாக அனுப்பி வைத்தனர். ஏடிஎம் மெஷினில் பணத்தை எண்ணி வெளியே தள்ளும் பகுதியில் பாம்பு சிக்கியிருந்ததும் நாணயங்களுடன் சேர்ந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
வயல்வெளியில் இருந்து பாம்பு தானாகவே புகுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விஷமத்தனமாக யாராவது பாம்பை உள்ளே போட்டார்களா என்றும் விசாரணை நடக்கிறது.

ஐஸ்வர்யாராய்க்கு 11-ந்தேதி சிசேரியன் .

நடிகை ஐஸ்வர்யாராய்க்கும், அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனுக்கும் 2007-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்பும் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து நடித்தார் ஐஸ்வர்யாராய் தமிழில் “ராவணன்”, “எந்திரன்” படங்களிலும் நடித்தார்
கடந்த ஜூன் 21-ந்தேதி ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கும் தகவலை மாமனார் அமிதாப்பச்சன் வெளியிட்டார்.
அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். டாக்டர்கள் ஆலோசனைப்படி சத்தான உணவுகள் சாப்பிட்டு வீட்டில் ஓய்வு எடுத்தார்.
வயிறு பெரிதாக இருந்ததால் பொது விழாக்களில் பங்கேற்பதையும் தவிர்த்தார்.

ஐஸ்வர்யாராய்க்கு நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் பிரசவம் இருக்கும் என டாக்டர்கள் கணித்தனர்.
நாட்கள் நெருங்குவதால் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் பரபரப்பாகியுள்ளனர்.

சமீபத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை அழைத்து ஐஸ்வர்யாராய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சியை விமர்சையாக நடத்தினர்.
 பிரசவதேதி நெருங்குவதால் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் பரபரப்பாகியுள்ளனர். வருகிற 11-ந்தேதி சிசேரியன் மூலம் பிரசவத்துக்கு ஏற்பாடு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்றைய தேதி 11-11-11 என்ற அபூர்வ தினமாக கருதப்படுகிறது. எனவே அந்த நாளில் பிரசவம் நடக்க வேண்டும் என்று பச்சன் குடும்பத்தினர் ஆர்வப்படுகின்றனர்.

தாய்வானில் முதலைக்கறி ரெஸ்டராண்ட்

மனிதனின் பசிக்கு தற்போது முதலையும் உணவாகப் பயன்படுகிறது. தாய்வானில் தான் இந்த முதலைக்கறி ரெஸ்டாரண்ட் உள்ளது.
இந்த ரெஸ்டராண்டில் இறைச்சிக்காவே முதலைகள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வளர்க்கப்படும் முதலைகள் மூன்று வருடங்களுக்கு பின் இறைச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் தாய்வானில் முதலை சூப் என்றால் மிகவும் புகழ்பெற்றதாகும்.

மனித பற்களை உடைய அதிசயமீன்

பொதுவாக மீனின் பற்களை பார்த்திருப்போம். மீனிற்கு மனிதனைப் போன்ற பற்கள் இருப்பதை பார்த்திருக்க மாட்டோம். இருந்தால் எப்படியிருக்கும்?
மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட ஒருவரின் தூண்டிலில் மனிதனின் பற்களைப் போன்ற அமைப்பை உடைய அதிசய மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.
இது பற்றி அம்மீனவர் குறிப்பிடுகையில், இந்த மீனை சாப்பிட விரும்பவில்லை என்றும் பாசத்துடன் கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஐந்தறிவு கொண்ட புலிக்கும் பாசம் உண்டு

“அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” இது எத்துணை உண்மையானது என்பதனை பல சந்தர்பங்களில் புரிந்திருக்கிறோம்.
அன்பு என்பது ஆறரிவு கொண்ட மனித வர்க்கத்திற்கு மட்டும் சொந்தமில்லை. ஐந்தறிவு கொண்ட எங்களுக்கும் அன்பு காட்டத் தெரியும் என காட்டி இருக்கிறது இந்த புலி.
அன்புக்கு முன் உயிர்களினை காவு கொள்ளும் புலி கூட பூனையாகி விட்டது.
குழந்தையும், புலியும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவ முயல்கின்றனர். ஆனால் குறுக்கே கண்ணாடி இருப்பதால் தங்கள் மனதுக்குள் உணர்வை பகிர்ந்து கொள்கின்றனர்.
இரண்டு வயது தாண்டாத இந்த குழந்தை மிருகக்காட்சி சாலைக்கு தன் பெற்றோருடன் சென்ற போது அங்கிருந்த புலியைப்பார்த்து அந்த இடத்திலேயே நின்று விட்டதாம்.
புலியும் குழந்தை அருகே படுத்தே விட்டதாம். ஒருவேளை முன்ஜென்ம உறவாகக் கூட இருக்கலாம்.

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் திட்டம்?

ஈரானிய அணுசக்தி நிலைகள் மீது பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டனின் டெய்லி மெய்ல் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஈரானிடம் நான்கு அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு போதுமானளவு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் யுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
‘ஈரானிய நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவதற்கான திட்டத்தை அமெரிக்கா முன்னெடுக்கும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். அமெரிக்கா வலியுறுத்தினால் எந்த நடவடிக்கைக்கும் பிரித்தானிய இராணுவ உதவியை அமெரிக்கா பெறும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டனிலுள்ள இராணுவ அதிகாரிகள் பிரித்தானிய கப்பல்கள், டொமாஹாவ்க் ஏவுகணை பொருத்தப்பட்ட நீர்மூழ்கிகளை எதிர்வரும் மாதங்களில் எங்கு நிலைகொள்ளச் செய்வது சிறப்பானது என ஆராய்ந்துவருவதாக டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்து சமுத்திரத்திலுள்ள பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள தீவான டியாகோ கார்ஸியாவிலிருந்து தகர்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அனுமதி கோரும் என பிரித்தானிய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அத்தீவில் கடற்படைத் தளமொன்றை கொண்டுள்ள அமெரிக்கா அதை முந்தைய மத்திய கிழக்கு மோதல்களின் போது பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தாக்குதலொன்றை ஆரம்பிப்பதற்கு பராக் ஒபாமா தயங்குவதாகவும் ஆனால் ஈரானிய அணுசக்தி திட்டங்கள் தொடர்பான அதிகரித்து வரும் பதற்றங்கள் இந்நிலையை மாற்றிவிடும் எனவும் பிரித்தானிய அரசாங்க மற்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சவூதி ராஜதந்திரியொருவர் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதிலும் வாஷிங்டனிலுள்ள சவூதி தூதுவரை கடந்த கொல்வதற்கு இடம்பெற்ற சதியிலும் ஈரான் பின்னணியில் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தவேண்டுமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாஹு வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கு மேற்குப்புறத்திலுள்ள ஆப்கானிஸ்தனரில் 98,000 அமெரிக்க துருப்பினர் உள்ளனர். கிழக்கிலுள்ள ஈராக்கில் 43,500 அமெரிக்கப் படையினர் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 10,000 பிரித்தானிய துருப்பினரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் தயார்
இதேவேளை நேற்று வியாழக்கிழமை லிபியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அலி அக்பர் சலாஹி, மேற்படி செய்திகள் குறித்து கூறுகையில், எந்த அச்சுறுத்தலையும் ஈரான் தண்டிக்கும் எனக் கூறினார்.
“சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதில் துரதிஷ்டவசமாக, அமெரிக்கா தனது மதிநுட்பத்தை இழந்துவிட்டது. அது பலத்தில் மாத்திரமே தங்கியுள்ளது.
ஆம் நாம் மோசமானதை எதிர்கெர்ள தயாராகவுள்ளோம். ஆனால் ஈரானுக்கு எதிராக மோதலில் ஈடுபடுவற்கு முன் அவர்கள் இரு தடவை சிந்திப்பார்கள் என நம்புகிறோம்’ என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சலாஹி கூறினார்.
ஈரான் எப்போதும் இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. எனவே இது எமக்குப் புதிதல்ல. எட்டு வருடங்களாக இஸ்ரேலின் அச்சுறுத்தல் குறித்து நாம் கேள்விப்பட்டுவருகிறோம்.
எமது நாடு ஐக்கியமான ஒரு நாடு. எமது படைகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. எமக்கு இந்த அச்சுறுத்தல்கள் புதியவை அல்ல. எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது நாட்டை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என துருக்கிய பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

விண்வெளியில் இருந்து கிரகம் 8ம் தேதி பூமியை நெருங்குகிறது

விண்வெளியில் இருந்து கீழிறங்கும் கிரகம் ஒன்று, இந்த மாதம் 8ம் தேதி பூமியை நெருங்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ தெரிவித்துள்ளது.
2005 ஒய்.யூ.55 என்ற அந்த கிரகம், பூமியில் இருந்து 2.01 லட்சம் மைல் வரை நெருங்கி வரும். 8ம் தேதி இந்த அதிசயம் நடைபெற உள்ளது. இது சந்திரனில் இருந்து பூமிக்கு உள்ள தூரத்தில் 0.85 பங்கு ஆகும்.
விண் பாறாங்கல் வடிவிலான இந்த கிரகம், பூமிக்கு அருகில் வருவதால் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய உதவும். அதன்மூலம் பூமியின் பூர்விகம் மற்றும் கோள்கள் இடையே எதிர்கால நிகழ்வுகள் பற்றி விஞ்ஞானிகளுக்கு முக்கிய விஷயங்கள் தெரிய வரும்.
1,300 அடி அகலம் கொண்டது இந்த ஒய்.யூ.55 கிரகம். சீரற்ற சுழற்சி, மெதுவான சுற்றுப் பாதை கொண்ட இது, கருமையானது என நாசா தெரிவித்துள்ளது.
கார்பன் அடிப்படையிலான சி&டைப் கிரகங்கள் பற்றி விஞ்ஞானிகள் கூடுதல் தகவல்களை அறிய இந்த கிரகம் பூமிக்கு அருகில் வருவது வாய்ப்பாக அமையும் என்று நாசாவின் கலிபோர்னிய மைய அதிகாரி டான் யோமன்ஸ் தெரிவித்தார்.
இதுபோன்ற கார்பன் அடிப்படையிலான பாறை வடிவ கிரகங்கள் உயிர் வாழத் தேவையான காரணிகளை பூமிக்கு அளிக்கின்றன. அதன் மூலம் உயிரினங்கள் வாழ முடிகிறது. இந்த கிரகங்கள் இல்லாமல் இருந்தால் நாம் இங்கிருந்திருக்க முடியாது என்று டான் யோமன்ஸ் கூறினார்.
எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான ஆதாரங்களை அளிப்பதில் இந்த சி&டைப் கிரகங்கள் உதவும். இவற்றில் நீர் ஆதாரம் மற்றும் விமான எரிபொருளுக்கான மூலப் பொருள் இருப்பதால் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் பயன்படும் என்றும் டான் தெரிவித்தார்.

கடாஃபி மகனைக் காதலித்த அழகி வேலையிழந்தார்

முஅத்தஸிம் கொல்லப்பட்டதைக் கேட்டு கண்ணீர் சிந்தியதாக வனெஸ்ஸா தெரிவித்திருந்தார்.
கடாஃபியின் மகனைக் காதலித்தேன் என்று பத்திரிகைப் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்த இத்தாலிய அமெரிக்க சூப்பர் மாடல் அழகியுடன் தாங்கள் செய்துகொண்டிருந்த விளம்பர ஒப்பந்தத்தை ஸ்பானிஷ் ஐரோப்பிய தொலைதொடர்பு நிறுவனம் ஒன்று ரத்து செய்துள்ளது.
கர்ணல் கடாஃபியின் மகன் முத்தஸிம்மின் காதலியாக நான்கு ஆண்டுகள் தான் இருந்துள்ளேன் என்று வனெஸ்ஸா ஹெஸ்லர் தெரிவித்திருந்தார்.
வனெஸ்ஸா ஹெஸ்லரின் அழகு முகமும் வாளிப்பான உடலும் நீளமான கால்களும் ஐரோப்பா எங்கிலும் விளம்பரப் பலகைகளையும் இணையப் பக்கங்களையும் அலங்கரித்து வந்துள்ளன.
ஸ்பானிஷ் ஐரோப்பிய தொலைதொடர்பு நிறுவனங்களின் குழுமமான டெலெஃபோனிக்காவின் அகண்ட அலைக்கற்றை இணையத் தொடர்பு சேவைக்கான விளம்பரங்களில் தோன்றி வந்த சூப்பர் மாடல் இவர்.
ஆனால் இவர் அளித்த ஒரு பேட்டியின் காரணமாக டெலிஃபோனிக்கா நிறுவனத்தில் மாடலிங் பணியை தற்போது இவர் இழந்துள்ளார்.
இணையப் பக்கங்களில் வரும் டெலிஃபோனிக்காவின் விளம்பரங்களில் இருந்தும் இவரது படங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டன.
சில நாட்கள் முன்பு கர்ணல் கடாஃபியுடன் சேர்த்துக் கொல்லப்பட்டிருந்த அவரது மகன் முத்தஸிம் கடாஃபியுடன் நான்கு ஆண்டுகள் காலம் தான் உறவு வைத்திருந்ததாக பிரபலங்கள் தொடர்பான இத்தாலிய பொழுதுபோக்கு சஞ்சிகை டீவா இ டோன்னாவுக்கு அளித்த பேட்டியில் இவர் சொல்லியிருந்தார்.
நெருக்கம்
முத்தஸிம் கொல்லப்பட்டதை அறிந்து தான் கண்ணீர் சிந்தியதாகவும், காதலித்த நாட்களில் அவருடன் உணர்வுமிக்க நெருக்கமானதொரு உறவு வைத்திருந்தாக வனெஸ்ஸா சொல்லியிருந்தார்.
ஆனாலும் லிபியாவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து அவருடன் தான் தொடர்பில் இல்லை என்று இவர் தெரிவித்துள்ளார்.
கடாஃபி குடும்பத்தாரின் மற்ற உறுப்பினர்களையெல்லாம் தான் சந்தித்திருக்கிறேன் என்றும், அவர்கள் எல்லாம் 'இயல்பான ஆட்கள்'தான் என்றும் இவர் குறிப்பிட்டிருந்தார்.

என் குழந்தைக்கு தந்தை இவர்தான்;17 வயது பாப் பாடகர் மீது இளம்பெண் புகார்

என் குழந்தையின் தந்தை இவர்தான் என 17 வயது அமெரிக்க பாப் பாடகர் மீது இளம்பெண்  புகார் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் 17 வயதே ஆன இவர் மீது கலிபோர்னியாவைச் சேர்ந்த மரியா யீடர் என்ற 20 வயது இளம்பெண் புகார் கூறியுள்ளார்.

ஜஸ்டினின் ரசிகையான இவர் அவருடன் உறவு வைத்து இருந்தார்.
அதன் மூலம் அவர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார்.
அந்த குழந்தை பிறந்து 3 மாதம் ஆகிறது. எனவே, தனது குழந்தைக்கு ஜஸ்டின் பீபர்தான் தந்தை என ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மரியா யீடர் தெரிவித்துள்ளார்.
அதை நிரூபிக்க அவர் மரபணு சோதனை செய்து கொள்ள முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், இவரது குற்றச்சாட்டை ஜஸ்டின் பீபரின் நெருங்கிய நண்பர்கள் மறுத்துள்ளனர்.
மரியா யீடர் கூறுவது முற்றிலும் பொய் என தெரி வித்துள்ளனர்.
எனவே, ஜஸ்டின் பீபர் மீது மரியா யீடர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ஜஸ்டின் பீடரை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்
.இந்த வழக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் விசாரணைக்கு வருகிறது.

நாளொரு மேனி பொழுதொரு போட்டோ - 41 செக்கனில் 4 வருடங்களை அடக்கி புதுமுயற்சி

நான்கு வருடங்களாக ஒவ்வொரு நாளும் தன்னை படம் பிடுத்து இறுதியில் அத்தனை படங்களையும் வீடியோ கோப்பாக உருவாக்கி youtube இல் தரவேற்றியுள்ளார்,
நான்கு ஆண்டுகள் இங்கு கணப்பொழுதில் மறைந்து விடுகின்றன, இதுவரை இந்த வீடியோவை 3 மில்லியன் பேர்வரையில் பார்த்துள்ளனர்.
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமாக (ஒரு வேளை இவருக்கு இதே வேலையாக இருந்திருக்கும் போல) காட்சி தருகிறார், 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது பலரால் பேசப்படும் விடயங்களில் முக்கியமானதாகும்

பிரித்தானியாவில் இசையில் சாதித்த ஈழத் தமிழன்!

யாழ்ப்பாணம் அளவெட்டியை பூர்வீகமாகக் கொண்ட ரமேஷ் என்ற ஈழத் தமிழர் இசைத் துறையில் சாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளார்
தற்போது பிரித்தானியாவில் வசிக்கும் இவர் மேல்நாட்டு கலைத்துறையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பாடலை உலகத் தரத்துக்கு ஏற்ப சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
பிரித்தானியாவில் இசை Top Chart நோக்கிய இவர் பயணம் கண்டு வெவ்வேறு Music record labels இவரை அணுகி உள்ளார்கள்.
ஆனால்; எமக்கென்ற தனி அங்கீகாரம் வேண்டுமென பல தமிழ்க் கலைஞர்களை இணைத்து ‘SME’ என்ற தனி record label ஐ உருவாக்கித் தனது தனித்துவம் கொண்ட இசையை மேல்நாட்டவர் முன்னிலையில் நிலைநாட்டியுள்ளார்.
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த இவ்விளைஞனின் இச்சாதனைக்கு அனைத்துத் தமிழ் மக்களும் ஆதரவு வழங்க வேண்டும்.
இவரது பாடலை iTunes Amazon போன்ற இணையத் தளதில் வாங்கலாம்.
புகலிடம் கோரி அகதியாக போய்ச் சேரும் நாடுகளில் படித்து உயர்ந்து இப்படியான உலகத் தரமான பாடல்களை வெளியிட்டு வரும் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டியது நமது கடமை.

எங்கே செல்லும் இந்தப் பாலம்! திகிலூட்டும் அதிர்ச்சி வளைவுகள்

வாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட்டும் திறமையை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.
அந்த அளவுக்கு உயரமாகவும் மோசமான ஏற்ற இறக்கங்களையும், வளைவுகளையும் கொண்டது இந்தப் தெருவுடன் இணைந்த பாலம்.
Atlantic Road என்று அழைக்கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது.
இந்த வியத்தகு பாலம் பல்வேறு கார் கம்பனிகளினதும் விளம்பரங்களில் இடம்பிடித்து உள்ளது.
ஐந்து மைல் நீளமான குறித்த தெரு 2005 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
தற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

வெட்டுக்கிளியை உயிருடன் உண்ணும் பெண்

பெண் என்றாலே மென்மை, அழகு என்றெல்லாம் வர்ணிக்கும் காலம் மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
நண்பர்களுடன் செய்துக்கொண்ட சவாலிர்க்காக ஒரு வெட்டுக்கிளியை உயிருடன் துடிக்க துடிக்க வாயில் போட்டு மென்று விழுங்கி காட்டுகிறார் இந்த பெண்மணி. இவரை வர்ணிக்காவிட்டாலும் இவரது தயிரத்தை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

முத்துராமன் விழாவில் ரஜினியின் பேச்சு

எஸ்.பி முத்துராமன் விழாவில் “சூப்பர் ஸ்டார்” ரஜினி பங்கேற்ற நிகழ்வு பற்றி ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது. அந்த விழா தொடர்பாக காணொளி காட்சியினை எம் வாசகர்களுக்காக நாம் தருகின்றோம்.

அடுக்குமாடி கட்டிடத்தில் அடர்ந்த காடு

ஆயிரக்கணக்கான மரம், செடி, கொடிகளுடன் கூடிய பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு இத்தாலியின் மிலன் நகரில் அமைக்கப்பட்டு வருகிறது.
புதுவீடு வாங்கியிருக்கீங்கள, வீட்டை சுத்தி வாழை, தென்னை வைக்க முடியுமா என்று கேட்டால் அதற்கு வீட்டில் குடியிருப்பவர்கள் 400 சதுர அடி அபார்ட்மென்டில் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று பதில் தருவார்கள்.
இத்தாலியை சேர்ந்த கட்டுமான நிறுவனம் இதை சாத்தியம் என்கிறது. ஸ்டெபனோ போரி என்ற ஆர்க்கிடெக் தலைமையில் போரி ஸ்டுடியோஸ் நிறுவனம் இத்தகைய அபார்ட்மெண்ட்டை அமைத்து வருகிறது.
27 மாடிகளுடன் கூடிய அபார்ட்மென்ட் அருகிலேயே அதைவிட சற்று சிறியதாக இன்னொரு அபார்ட்மென்ட் அமைத்து அனைத்து தளங்களிலும் மரம், செடி, கொடிகள் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 730 மரங்கள், 11 ஆயிரம் செடிகள், 5 ஆயிரம் புதர் மற்றும் குரோட்டன்ஸ் வகைகள் இதில் அமைக்கப்படுகின்றன.
வானுயர அமைக்கப்படும் காடு என்று பொருள் படும் வகையில் பாஸ்கோ வெர்ட்டிகல் என்று அபார்ட்மென்டுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதுபற்றி போரி நிறுவனத்தின் இயக்குனர் மிகேல் பிரனலோ கூறியதாவது, தரையில் வீடு கட்ட வசதி இல்லாத சூழலில் தான் மாடிகள் கட்டும் எண்ணம் உதித்தது. குடியிருப்புக்காகத்தான் மாடிகள் கட்ட வேண்டும் என்பது இல்லை. மரம், செடிகள் நடுவதற்கு மாடி கட்டலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த பாஸ்கோ வெர்ட்டிகல் அபார்ட்மென்ட்.
மரம், செடி, கொடிகளை பார்க்கும் போதே மனதுக்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கும். சூரிய வெப்பம், மாசு பாதிப்பு ஆகியவற்றில் இருந்து நம்மை காப்பவை தாவரங்கள் தான். தரை தளத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி அடுக்குமாடிகளில் வசிப்பர்களுக்கும் இந்த சுகம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கட்டிடத்தை உருவாக்கி வருகிறோம்.
அபார்ட்மென்ட் விலை ரூ.4.35 கோடி முதல் ரூ.13.25 கோடி. வீடுகள் மட்டுமே அவர்களது தனிப்பட்ட சொத்து. இங்கு இருக்கும் அனைத்து தாவரங்களும் பொது சொத்தாகும். சூரிய ஒளி, காற்று ஆகியவற்றை அனுசரித்து, புயல், மழை வந்தாலும்கூட விழாத வகையில் மரங்களை அமைத்துள்ளோம்.
எனவே வீட்டின் உரிமையாளர்கள் அவர்கள் வசதிக்கேற்ப மரங்களை மாற்றியமைக்க முடியாது. தங்களுக்கு பிடித்த மரங்கள் அமைந்திருக்கும் இடத்தில் அபார்ட்மென்ட்டை வாங்கிக் கொள்ளலாம். அடுக்குமாடி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
அனைத்து தளங்களிலும் வைக்கப்பட உள்ள மரம், செடிகள் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டில் கட்டுமான பணிகள் முடிந்ததும் அவை அதனதன் இடத்தில் வைக்கப்படும். மனிதர்களோடு சேர்த்து மரம், செடி, கொடிகள் வாழ்வதற்கும் ஏற்ற குடியிருப்பை கட்டுவது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

சில்லுகள் இல்லாமல் விமானத்தை தரையிறக்கிய விமானி

இன்று விமான விபத்து ஒன்றில் 220 பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர். 767 போயிங் ரக விமானமே தரையிறங்கும் போது சில்லுகள் வெளியே வராத காரணத்தால் விபத்து நேரிட்டது.
விமானியின் சாதுரியமான செயற்பாட்டால் ஏராளமான பயணிகள் உயிர் தப்பினர். அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள Newark விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமே மேற்படி விபத்துக்கு உள்ளானது.
ஆனால் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொழிநுட்ப கோளாறு தான் காரணம் என்று விமானிகள் அறிவித்துள்ளனர்.