Sunday, 28 August 2011

நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் ருத்ரகுமாரனின் வரலாற்று சிறப்பு மிக்க உரை!

அனைவருக்கும் வணக்கம்! தமிழீழ விடுதலை போராட்டத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் கேட்டு புரிந்து கொள்ள வேண்டிய ஒரு பேச்சு! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் அவர்களின் உணர்ச்சி மிகுந்த பேச்சு சகல நெஞ்சங்களையும் பெட்னா அரங்கில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வை தட்டி எழுப்பியுள்ளது
தமிழீழத்தை நேசிக்கும் எந்த ஒரு தமிழனும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு என்றும் துணை நிற்பான்! பிரதமரின் உரை உங்கள் கண்களை திறக்கட்டும்! நாடு கடந்த அரசு, உலக போராட்டங்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடியாக, இதுவரை இல்லாத வடிவில், உலக தமிழரை இணைத்து, தமிழீழ விடுதலை புலிகளின் , தமிழீழ தேசியத்தலைவரின் பாதையில் இன்னொரு படி!
இது உலக தமிழருக்கு எல்லாம் குரல் கொடுக்க பிறக்கபோகும் தமிழீழம் எங்கு தமிழனுக்கு அநீதி நிகழ்ந்தாலும் தட்டி கேட்கும் என்பதற்கு சான்றாக நாடு கடந்த தமிழீழ அரசு சிங்கள படைகள் தமிழக மீனவர்களை சுட்ட பொது உலக அரங்கு எங்கும் அதை கொண்டு சென்றது என பிரதமர் கூறியபோது எங்கள் மனங்கள் எவ்வளவு திறக்க வேண்டும் என புரிந்து கொண்டேன்!
தமிழீழம் உலகதமிழர்களின் ஒற்றைக் கனவு!

புலிகளின் அமைப்புக்களை தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை!- மெளனம் காக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பியாவில் இயங்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை பதில் வழங்கவில்லை.
இதனை இலங்கையின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னமும் வெளிநாடுகளில் முன்னணி அமைப்பாக செயற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தமது கோரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் பதிலளிக்கும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்படும் அதேநேரம் அதன் கிளை அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும் என்பதே இலங்கையின் கோரிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர். எனினும் முன்னணி அமைப்புகளாக அவை, வெளிநாடுகளில் செயற்பட்டு வருகின்றன.
தமிழர் புனர்வாழ்வு கழகம், தமிழ் இணைப்புக்குழு மற்றும் தமிழ் இளைஞர் குழு போன்றவற்றையே தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

வன்னி மருத்துவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் பொய் சொல்ல பயிற்றுவிக்கப்பட்டார்கள்!- விக்கிலீக்ஸ்

வன்னிப்போரின் பின்னர் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள், கொழும்பில் செய்தியாளர்களுக்கு எதனை கூறவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால், பயிற்றுவிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் மூலம் இந்த தகவல் அமெரிக்காவில் உள்ள இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது
வன்னிப்போரின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். அவற்றை குறித்த மருத்துவர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினர். எனினும் போர் முடிந்த பின்னர் அந்த மருத்துவர்கள் இலங்கை படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்ட காலத்தில், வன்னிப்போரின் போது அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக குறித்த மருத்துவர்கள் கூறுவதாக அரசாங்கம் தெரிவித்து வந்தது. இதனை அவர்கள் செய்தியாளர்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பர் என்று அரசாங்கம் தெரிவித்தது.
இதன்படி போரின் போது வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களான ரி சத்தியமூர்த்தி, வரதராஜ், மற்றும் சண்முகராஜா ஆகியோர், தாம் போரின் போது வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவல்கள் பொய்யானவை என்று குறிப்பிட்டனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அழுத்தம் காரணமாகவே அவ்வாறு தாம் கூறியதாக அவர்;கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதனை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரியான ஆர் மூர் என்பவர், அமரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு கேபிள் செய்தி மூலம் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை குறித்த மருத்துவர்கள் வரவேற்றிருந்தமையையும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. எனினும் அந்த மருத்துவர்கள், இலங்கை அரசாங்கத்தினால் பயிற்றுவிக்கப்பட்டு பொய் கூறியதை அடுத்தே அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்கள் தொடர்ந்தும் தமது பணிகளில் தொடர அனுமதிக்கப்பட்டதாகவும் அமெரிக்க தூதரகம் இராஜாங்கத் திணைக்களத்துக்கு கேபிள் மூலம் அறிவித்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை சுஸ்மா சுவராஜ், மற்றும் இந்திய தலைவர்களைச் சந்தித்தது

பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழுவொன்று, இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் (Sushma Swaraj) உட்பட இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துள்ளது.
சுஸ்மா சுவராஜை சிறீலங்கா அரசாங்கம் தமது நாட்டுக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக அழைத்துள்ள பின்புலத்தில், புதுடெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அவரை நேரில் சந்தித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு, ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றி எடுத்துக் கூறியது.
சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழர் தாயகத்தின் உண்மை நிலை பற்றி தெளிவாக எடுத்து விளக்கப்பட்டதுடன், அவரது கொழும்பிற்கான பயணத்தை சிறீலங்கா அரசாங்கம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் எதிர்காலப் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவி சுஸ்மா ஸ்வராஜ் சிறீலங்காவிற்கான தனது பயணத்தை இரத்து செய்திருப்பதாக, தமிழ்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பாரதீய ஜனதாக் கட்சியின் ஏனைய பிரதான தலைவர்கள், சிவ் சேனா கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், வி.எச்.பி (VHP), மற்றும் இந்திய கம்யூனிசக் கட்சியின் (CPI) மூத்த தலைவர்களையும் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்தித்துப் பேசியிருந்தனர்.
இவர்கள் அனைவரும், தமிழ்நாட்டுக்கு வெளியேயுள்ள ஏனைய மாநிலங்களிலும், இந்திய நாடாளுமன்றத்திலும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை எதிரொலிக்கச் செய்வதுடன், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கோரி நிற்கும் தமிழின அழிப்பில் இடம்பெற்ற அனைத்துலக போர்க்குற்ற சுயாதீன விசாரணைக்கு (Independent International Investigation) ஆதரவளிப்பது பற்றி தமது கட்சிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பது எனவும் உறுதி அளித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லண்டனில் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி (Nitin Gadkari) உட்பட அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் சந்தித்துப் பேசியபோது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பை அடுத்தே, தமிழர் பேரவையின் இந்தியாவிற்கான பயணம் அமைந்திருந்தது.
இந்திய அரசியல் தலைவர்களை மட்டுமன்றி அங்குள்ள மனித உரிமை அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள், ஊடகங்கள், மற்றும் அரசியல் ஆலோசகர்களையும் டெல்லி, கர்னாடகா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சந்தித்து தமிழர் பேரவை பேச்சு நடத்தியிருந்தது.
இந்திய தலைவர்கள் அதிர்ச்சி
சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மிலேச்சத்தனமான இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி முழுமையாக அறிந்திராத இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபை, மற்றும் ராஜ்ய சபை உறுப்பினர்கள், பிரித்தானிய தமிழர் பேரவை வழங்கிய ஆவணங்கள், மற்றும் இன அழிப்புத் தகவல்களைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழின அழிப்பை எடுத்து விளக்கிய அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை பற்றியும், அந்த அறிக்கையில் அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான வலியுறுத்தல் உள்ளடக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்புக்களில் அழுத்திக் கூறப்பட்டது.
போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை
சிறுவர்கள், பெண்கள், மூதாளர்கள் உட்பட 40,000 மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்களப் படையினரால் இன அழிப்புச் செய்யப்பட்டதும், 146,679 பேர் காணாமல் போயிருப்பது பற்றி அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என பிரித்தானிய தமிழர் பேரவை இந்த சந்திப்புக்களில் வலியுறுத்தியது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு, மற்றும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் கோரியிருக்கும் போர்;க்குற்ற விசாரணையை அமுல்படுத்துவதற்கு இந்தியாவிலுள்ள பொது அமைப்புக்கள், மற்றும் அரசாங்கத்தின் ஆதரவும் இந்தச் சந்திப்புக்களில் கோரப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இந்த ஆதரவு இருக்க வேண்டிய அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
தாயகத்தில் தமிழ் மக்களின் நிலையும், நிலமும்
தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கில் வலுவான சிங்கள படைத்துறை நிருவாகக் கட்டமைப்பின் கீழ் அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள், பௌத்தர்கள் இல்லாத தமிழர் வாழ்விடங்களில் கட்டப்பட்டுவரும் பௌத்த விஹாரைகள், தமிழர் நிலங்களில் சிங்களவர்களின் ஆதிக்கங்களை வலுவடையச் செய்யும் நடவடிக்கைகள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.
தமிழ் மக்களின் கலாசாரம், அரசியல் அடையாளங்களை திட்டமிட்ட ரீதியில் அழிப்பதன் ஊடாகவும் இன அழிப்புத் தொடந்து வருகின்றமை இந்த சந்திப்புக்களின் சுட்டிக்காட்டப்பட்டது. தமிழர் தாயத்தில் இடம்பெறும் இந்த சம்பவங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆவணங்களும் பிரித்தானிய தமிழர் பேரவையால் சமர்ப்பிக்கப்பட்டன.
நன்றி.
பிரித்தானிய தமிழர் பேரவை

அன்பு உறவுகளே கருணையை எதிர்பார்க்கிறோம்!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகிய சகோதரர்களின் உயிர்களைக் காக்குமாறு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களைக் கோரும் மடல் இங்கே தரப்பட்டுள்ளது.
அவரால் மட்டுமே இந்த நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு வரையப்பட்டுள்ள இந்த மடலைப் பிரதியெடுத்து கையொப்பமிட்டு மின்னஞ்சல் மூலமாகவோ தொலைமடல் மூலமாகவோ அனுப்பி வைத்து பெறுமதியான அந்த மூன்று உயிர்களையும் காக்கும் செயற்பாட்டில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
DOWNLOAD APPLICATION IN PDF VERSION

மூவரின் உயிர் காத்தலுக்கான ஈழத்தமிழரின் கருணை மனு! - சி. சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர்

பாரத தேசத்தின் முன்னாள் மாண்புமிகு பிரதமர் ராஜிவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் எமது உறவுகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் மீதான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனும் செய்தி அறிந்து, ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் அதிக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம்.
மேன்மை மிகு ஜனாதிபதி அவர்கள்,
ஜனாதிபதி செயலகம்,
புதுடெல்லி,
இந்திய ஜனநாயகக் குடியரசு.
மாண்பு மிகு முதல்வர் அவர்கள் ஊடாக,
தமிழ்நாடு.
உயிர் காத்தலுக்கான ஈழத்தமிழரின் கருணை மனு
பாரத தேசத்தின் முன்னாள் மாண்புமிகு பிரதமர் ராஜிவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் எமது உறவுகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் மீதான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனும் செய்தி அறிந்து, ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் அதிக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம்.
வரலாற்றினாலும் தொன்மை மிகு பண்பாட்டினாலும் இணைவு பெற்ற இரு தேசங்களாகவும் இரத்த பந்த உறவினர்களாகவும் நாங்கள் உங்களுடன் வாழ்ந்து வருகிறோம்.
இலங்கைத்தீவில் ஏற்பட்ட பகைமையும் அதனால் எழுந்த ஈழத்தமிழரின் துயர வாழ்வையும் மூன்றாந்தரத் தந்திரோபாயங்கள் ஊடகவே இலங்கை அரசு அணுகி வந்திருக்கின்றது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
இந்தப்பகை முரணும் அதன் பரிணாமங்களும் சில சந்தர்ப்பங்களில் ஈழத்தமிழர் மீதான தவறான புரிதல்களையும் அணுகு முறைகளையும் பிற அரசுகள் கைக்கொள்ள இலங்கை அரசு ஊக்கியாக இருந்து வந்துள்ளது என்பதே வரலாறு.
ஆனால் இந்திய தேசத்தின் உண்மையான நேச சக்தியாக எப்போதும் ஈழத்தமிழர்களே இருந்து வருகிறார்கள் என்பதை வரலாற்றில் மறைக்க முடியாது.
எது எவ்வாறு இருந்த போதும் மாண்மிகு பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களின் கொலையின் போதும் அக்கொலையால் இந்திய மக்கள் கொண்டிருக்கின்ற நெடுந்துயரின் போதும் அனுதாபம் மிகுந்த பங்காளர்களாக ஈழத்தமிழர்களாகிpய நாங்கள் இருந்து வருகின்றோம்.
அன்பு, காருண்யம், மன்னித்தல், என்னும் உயர் விழுமியங்களை ஏற்றுப் போதிக்கின்ற பாரத அரசும் பாரத மக்களும் தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கின்ற எம் உறவுகளுக்கு இரக்கம் காட்டி உலக அளவில் காலாவதியாகி வரும் தண்டனை முறைகளுக்கு மாற்றீடாகச் சிந்தித்தித்து செயற்படுத்துமாறு தயவுடன் வேண்டுகிறோம்.
சிங்களப் பெருந்தேசிய அடக்குமுறைகளாலும் அவர்களின் கொடிய யுத்தத்தாலும் ஏற்பட்ட இரத்தத்ததையும் வலிகளையும் ஆற்றமுடியாது அந்தரித்து நிற்கும் சமூகம் ஒன்றின் சார்பில் எங்கள் சகோதரர்கள் மீது கருணை அளிக்கக் கோருகிறோம்.
தூக்குத் தண்டனை எனும் பாவச் செயல் ஒன்றை நிறைவேற்றி ஈழத்தமிழர்களின் இதயங்களில் மாறாப் பெருங்காயம் ஒன்றை ஏற்படுத்தி விடவேண்டாம் என்று அன்புரிமையோடு இறைஞ்சுகிறோம்.
பழிக்குப் பழி தீர்க்கா பக்குவம் மிகுந்த இந்திய மண்ணையே நாங்கள் காண விரும்புகிறோம். ஏனெனில் ஈழத்தமிழர்களின் தாய் மண் பாரத மாதாவே என்பதை வரலாறு எமக்கு நினைவூட்டி வருகிறது.
அதனால்தான் இந்திய நடுவண் அரசையும் தமிழக அரசையும் தங்களின் பாதுகாப்புக் கவசங்களாக நம்பி இலங்கை அரசின் வன்கொடுமைகளிடையேயும் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.
ஈழத்தமிழர்களின் மொத்த உணர்வையும் உணர்வின் குரலையும் கருணையோடு ஏற்று சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விலக்களிப்புச் செய்வதன் மூலம் மாண்புமிகு பிரதமர் ரஜீவ்காந்தி அவர்களின் அன்பையும் மனிதநேயப் பண்பையும் பெருமைப்படுத்துவதுடன் பாரதப் பண்பாடு கீர்த்தி பெறவும் இவ்வுறவுகள் மீது கருணை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
ஈழத்தமிழர் சார்பாக,
சிவஞானம் சிறீதரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
யாழ்.மாவட்டம்

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜக்கொப் ஸுமாவுடன் புலிகளின் நெருக்கம்: இலங்கை அதிர்ச்சி !

விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்க அரசுடனும் அங்கே இருக்கும் பல நாடுகளோடும் கொண்டுள்ள நெருக்கமான தொடர்புகள் தொடர்பாக இலங்கை பெரும் அதிர்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


புலிகள் சமாதான காலத்தில் அதன் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனூடாகவும் மற்றும் இதர சிரேஷ்ட உறுப்பினர்களூடாகவும் தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளிடம் நட்புறவை வளர்த்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரித்திரியா நைஜீரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் அவர்கள் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை அரசு கவலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான புகைப்படம் தொடர்பாகவும் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜக்கொப் ஸுமா சு.ப.தமிழ்ச்செல்வனுடன் தனது வீட்டில் வைத்து உரையாடும் இப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பல நாடுகளை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தென்னாபிரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜக்கொப் ஸுமா அவர்கள் உலகில் உள்ள பலம்பெருந்திய தலைவர்களில் ஒருவர் ஆவார்.

விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்க அதிபருடன் கொண்டுள்ள உற்வுகள் குறித்து இலங்கை அரசு தற்போது தனது கவனத்தை திருப்பியுள்ளது. புலம்பெயர் மக்களின் போராட்டம் ஒரு புறம் இருக்க, மேற்குலகின் போர் குற்ற அழுத்தங்கள் மறு முனையில் இருக்க ஏக காலத்தில் புலிகளின் மறை முகப் பலம் தொடர்பாக இலங்கை அரசு தற்போது தனது கவனத்தை திருப்பியுள்ளது எனக் கொழும்பில் இருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளிடன் மொத்தமாக 3 விமானங்கள் இருந்ததாகவும், அவற்றில் 2 விமானங்கள் கொழும்பு நோக்கிப் புறப்பட்டு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 3 விமானம் எங்கே சென்றது என்பது தொடர்பாக இலங்கைப் புலனாய்வு இன்னும் ஆராய்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாது புலிகளிடம் கிளைடர் எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்றும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இவ்விமானமும் மாயமாக மறைந்துள்ளது. இலங்கை அரசானது தனது தரைப்படையின் கட்டமைப்பை மாற்றாது, வான்படை மற்றும் கடற்படைகள் கட்டமைப்பை பலப்படுத்தி வருவதன் பின்னணி தான் என்ன எனப் பலர் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இலங்கை அரசானது எதற்கு இவ்விரு கட்டமைப்புகளையும் பலப்படுத்தி வருகின்றது என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது எனலாம்

பேரறிவாளனின் தாயார் லங்காஸ்ரீ வானொலி மூலம் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் விடுக்கும் அன்பான வேண்டுகோள் (ஓடியோ இணைப்பு)


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்ப்பட்ட பேரறிவாளனின் தாயார் அறுபுதம்மாள் தனது மகனுக்கும் ஏனைய இருவருக்கும் கருணை காட்டி இத்தூக்குத்தண்டனையில் இருந்து அவர்களைக் காப்பாற்றி தரும்படி உலக மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.


லங்காஸ்ரீ வானொலி மூலம் உலகத் தமிழ் மக்களுக்கு மேற்கண்டவாறு உருக்கமான வேண்டுக்கோள் ஒன்றை அன்பாகவும், நம்பிக்கையுடனும் விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 20 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு இந்தாண்டிலாவது விடுதலை கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்திருப்பதோடு, எதிர்வரும் 9ம் திகதி தூக்குத்தண்டனைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்றதோடு அதிர்ச்சியாகிவிட்டோம்.

இவர்கள் மூவரையும் தற்போது தனித்தனி பூட்டிய அறைகளில் விடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இத்தூக்குத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தவாவது, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என உலகத் தமிழ் மக்கள் அனைவரிடமும் பேரறிவாளனின் தாயார் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இவர்களின் குற்றத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும், இவர்களுக்கான தண்டனையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இம்மூவரது உயிர்களையும் காக்குமாறு உலகத்து உறவுகளிடம் இத்தாயாரின் விடுத்த உருக்கமான வேண்டுகோளை செவிமெடுக்க...

அமெரிக்காவிடம் சரணடைகிறார் சிறிலங்கா அதிபர்


போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் விடயத்தில் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே சிறிலங்காவையும் அணுக வேண்டும் என்று நாளை கொழும்பு வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவி செயலர் றொபேட் ஓ பிளேக்கிடம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏனைய நாடுகள் விடயதில் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்கா, சிறிலங்கா விடயத்தில் மாறுபாடான கொள்கையைக் கடைப்பிடித்து தனிமைப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது.

எனவே உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே தம்மையும் நடத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவிடம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

நாளை கொழும்பு வரும் றொபேட் ஓ பிளேக்கிடம் இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் பேசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க விருப்பம் வெளியிட்டிருந்தார்.

இந்தச் சந்திப்பு நாளை நடைபெறும் என்று கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையை முன்வைப்பதற்காகவே பிளேக்கைச் சந்திக்க மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக அமெரிக்காவுடன் மோதல் போக்கை வெளிப்படுத்தி வந்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது சற்று இறங்கிப் போக முடிவு செய்துள்ளதையே இது வெளிப்படுத்துவதாகவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிளேக் வலியுறுத்தி வந்தநிலையில், கடந்தமுறை கொழும்பு வந்த அவரை சிறிலங்கா அதிபர் சந்திக்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரம் அனைத்துலக அளவில் சிறிலங்காவுக்கு நெருக்கடிகளை அதிகரித்து வரும் நிலையிலேயே, ஏனைய நாடுகளைப் போன்று தம்மையும் அணுகுமாறு அமெரிக்காவிடம் சரணடைய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாவாந்துறைத் தாக்குதலுக்கு பாவமன்னிப்பா? நல்லூரானுக்கு ஹெலியில் பூப்போட்ட ஹத்துருசிங்க (வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடாத்தி வரும் மஹிந்த ஹத்துருசிங்க பாவமன்னிப்பு தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


சில தினங்களுக்கு முன்னர் நாவாந்துறையில் தனது இராணுவ காடையர் குழுவைக் கொண்டு பொதுமக்கள் மீது காட்டுத் தாக்குதல் நடத்தி மீண்டும் ஒருமுறை சிங்கள வல்லாதிக்கத்துக்கு தமிழர்கள் என்றும் அடிமைகளே என்று நிரூபித்தார் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியான மஹிந்த ஹத்துருசிங்க.

இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்து இரத்தம் சொட்ட சொட்டக் கிடந்த தமிழ்மக்களை இராணுவக் காடையர்கள் உடனடியாக மருத்துவமனையிலும் சேர்க்காமல் தடை விதித்து சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட துப்பாக்கிய நிலைமை யாவரும் அறிந்ததே.


இன்றைய தினம் அதற்கு பிராயச் சித்தம் தேடும் முகமாக ஒருநாள் முன்னதாகவே அவசரப்பட்டு நல்லூர் கந்தனின் கந்தனின் தேர்த் திருவிழாவில் தனது அதே இராணுவ காடையர் குழுவைக் கொண்டு ஹெலி கொப்டரில் பூமாரி பொழிந்தார்.

வழமையாக தீர்த்த உற்சவம் அன்று தீர்த்தக் கேணியில் பூமாரி பொழிவது தான் இந்த காடையர்களின் வழக்கம்.


ஆனால் ஒருநாள் முன்னதாகவே இன்றைய தினம் ஹெலியில் பூமாரி பொழிந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் உண்மையில் கடுப்பாகி தங்களுக்குள் பேசிக் கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

நாவாந்துறையில் தாக்கப்பட்டவர்களின் காயம் கூட ஆறாத நிலையில் பூமாரி பொழிந்து மக்களை என்ன ஏமாற்றுகிறார்களா? என்று கோபத்துடன் பேசிக் கொண்டனர்.

முன்னர் குண்டுமழை பொழிந்து எத்தனை தமிழ் குடும்பங்களையே வேரோடு கருவறுத்தவர்கள் இப்பவும் அதே ஹெலியில் பூமழை பொழிவது மீளவும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற அவஸ்தையை ஏற்படுத்துகிறது.

இன்னமும் தங்களது இராணுவ வல்லாதிக்க அடக்கு முறைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளாதவர்கள் எத்தனை ஹெலியில் வந்து பூப் போட்டாலும் பிரயோசனம் எதுவும் ஏற்படப் போவதில்லை.

புலிகள் இல்லை என்ற நினைப்பில் நிராயுதபாணிகளாக உள்ள தமிழ் மக்களுடன் சண்டைபோட்டு உங்களின் வீர சாகசங்களை நிரூபிக்காதீர்கள்.

முதலில் தமிழர்களின் சொந்த மண்ணில் அவர்களை மரியாதையோடு நடத்துங்கள் அல்லது அந்த மண்ணை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்.. அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள்.

தொடர்ந்து தமிழர்களை முட்டாளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள்

யாருக்கு முதலில் தூக்கு: குலுக்கல் முறையில் தெரிவு

வேலூர் சிறையில், செப்., 9ம் தேதி தூக்கிலிடப்படும் மூவரிடமும், கடைசி ஆசை தெரிவிக்கும்படி கேட்கப்பட்டு, அவர்களுக்கான தூக்கிலிடும் நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும், செப்., 9ம் தேதி தூக்கில் போட, சிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, வேலூர் மத்திய சிறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறை உள்கேட் வரை, பத்திரிகையாளர்கள், போட்டோ கிராபர்கள் செல்ல, நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறை அலுவலர்கள் வாகனங்கள், சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சிறையைச் சுற்றி நான்கு இடங்களில் தடுப்புகள் அமைத்து, 24 மணி நேரம் வாகனச் சோதனை நடக்கிறது.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில், 19 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில், 7,500 பேர் தங்கியுள்ளனர். அவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேரறிவாளன் கடிதம்: "என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் சாவின் மடியில் இருக்கிறேன். இவ்வழக்கில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு நேற்று, பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார்.

ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போடும் வரை, பார்வையாளர்கள் சிறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, மூவரின் ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தூக்கிலிடும் நேரம்: செப்., 9ம் தேதி அதிகாலை, 4.30 மணி, 5:00 மணி, 5.30க்குள் என, அடுத்தடுத்து மூன்று பேரையும் தூக்கில் போட முடிவு செய்துள்ளனர். முதலில் யாரை தூக்கிலிடுவது என்பது, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஒரே சமயத்தில் இருவரை மட்டுமே, வேலூர் சிறையில் தூக்கு போட வசதி உள்ளதால், சேலம் சிறையில் ஒருவரை தூக்கில் போட, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடைசி ஆசை: மூன்று பேரிடம், "கடைசி ஆசை என்ன?' என்று தெரிவிக்கும்படி, எழுத்து மூலம் கேட்கப்பட்டுள்ளது. முருகன் தினமும் காலை, 6 மணிக்கு வாக்கிங் செல்வார். நேற்று முதல், வாக்கிங் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் துறை கண்காணிப்பாளர் அறிவுடையநம்பி நேரடி கண்காணிப்பில், தனித்தனி செல்களில் அடைக்கப்பட்ட இம்மூவருக்கும், சிறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த பின் உணவு தரப்படுகிறது.

பத்திரிகைகள் படிக்க, "டிவி' பார்க்க, ரேடியோ கேட்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, தினம் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை, மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஐ.ஜி., சைலேந்திர பாபு நேற்று சிறைக்கு வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,யுடன் நான்கு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

28 ஆண்டுகளுக்கு பின் மூன்று பேருக்கு தூக்கு : சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த சேட்டு என்ற சந்துரு, 35. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொன்று, குழந்தை தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு, 1983, நவம்பர் மாதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

28 ஆண்டுகளுக்கு பின், செப்., 9ம் தேதி, ராஜிவ் கொலை வழக்கில் கைதான மூவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காத்திருக்கும் கைதிகள்: ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன்; தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ரவிச்சந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன்; சென்னை சிறுவன் கொலை வழக்கில் மோகனரங்கன், கோபி ஆகிய எட்டு பேருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் இவர்கள் தூக்கு கயிற்றை எதிர்நோக்கியுள்ளனர்.

வேலூர் சிறையில் தூக்கு மேடை தயார் : முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு, செப்டம்பர் 9ம் தேதி, வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்காக, சிறை மதில் சுவர்களுக்கு வெளியே, சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தூக்கு மேடை சரிபடுத்தும் பணி, நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு துவங்கி, நேற்று மாலை 3 மணிக்கு முடிந்தது.

சிறைக்கு வெளியே உள்ள தோட்டப் பகுதியை ஒட்டி, தூக்கு போடும் இடம் சிறிய கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக, இங்கு சேட்டு என்பவரை தூக்கில் போட்டனர்.

அதன் பின், 28 ஆண்டுகளாக இங்கு யாரையும் தூக்கில் போடவில்லை. இதனால், இந்த இடம், காடு போல இருந்தது. பொதுவாக இந்த இடத்தில், ஒருவரை தூக்கில் போட்டு விட்டால், அதற்குப் பின் யாரும் பார்க்க முடியாதபடி, துணியால் மூடி வைத்திருப்பர்.

கடந்த 28 ஆண்டுகளாக இந்த இடம் மூடி இருந்ததால், துணியும் கிழிந்து கந்தை போல தொங்கிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தூக்கு மேடை கம்பிகள் சரிப்படுத்தப்பட்டன.

ஆனால், மூன்று பேரும் ஜனாதிபதிக்கும், தமிழக முதல்வருக்கும் கருணை மனுக்கள் அனுப்பியதால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இப்போது, ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கும், செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் போடுவது நிச்சயமான பின், அவசர கதியில் இந்த இடம் சரி செய்யும் பணி துவங்கியது.

இதற்காக, 16 அடி ஆழத்தில் கிணறு போல காணப்படும் தூக்கு மேடையின் கீழ்ப் பகுதி, சுண்ணாம்பால் வெள்ளையடிக்கப்பட்டது. மேடையைத் தாங்கி நிறுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பி, தூக்கு பள்ளத்தில் இருந்து கீழே உடல் விழும் போது தூக்கும் இரும்புத் தகடுக்கும், கறுப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், தூக்கு போடும் இரும்பு விசை, கிரீஸ் போட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தூக்கு மேடையின் மேற்கூரையும் சரிசெய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் மிகவும் வலுவான நிலையில், இரு தூண்கள், அதனிடையே பலமான இரும்புக் கம்பியும் அமைக்கப்பட்டன. அவை இன்றும், நல்ல கண்டிசனில் இருப்பதாக, சிறை அதிகாரிகள் கூறினர்.

தற்போது, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு தூக்கு போடும் நிலை இங்குள்ளது. தூக்கு மேடை தயாராக இருப்பதாக, வேலூர் சிறைத்துறை அதிகாரிகள், சிறைத் துறை தலைவருக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.

தூக்கு மேடை சீர் செய்ய பூஜை : ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில், ஆரம்பம் முதல் இந்த தூக்கு மேடை மட்டும் தான் உள்ளது. இங்கு இதுவரை, 1,500க்கும் மேற்பட்டவர்களை தூக்கில் போட்டிருப்பதாக, சிறைத் துறையினர் கூறினர்.

தற்போது, இந்த தூக்கு மேடையை சரிப்படுத்த வேண்டும் என, சிறைத் துறையினர் பல மேஸ்திரிகள், இரும்புக் கம்பிகளை சரிசெய்பவர்களிடம் கேட்ட போது, அவர்கள் மறுத்து விட்டனர்.

25க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்களிடம் கேட்டும், யாரும் முன்வரவில்லை. இதனால், வெறுத்துப் போன சிறைத்துறை அதிகாரிகள், சிறை வார்டன்களை கொண்டே இதை சரிசெய்தனர்.

உள்ளே செல்லும் முன், சூடம் ஏற்றி பூஜை செய்தனர். பின்னர், பணி முடிந்ததும், இதே போல பூஜை செய்தனர். சரிசெய்து முடிக்கும் வரை, 50 சிறைக்காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

அமெ. முன்னாள் இராஜங்க செயலாளர் கொண்டலிஸா ரைஸ் மீது ஈர்ப்புக் கொண்டிருந்த கடாபி (படங்கள் இணைப்பு)

லிபிய ஜனாதிபதி கடாபியின் வாசஸ்தலத்தில் போராளிகளால் கைப்பற்றப்பட்டுள்ள அவரது உடைமைகளில் அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளர் கொண்டலிசா ரைஸின் புகைப்படங்கள் அடங்கிய அல்பம் ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.

தற்போது இவ் அல்பம் தொடர்பில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.

அதிலொன்றுதான் கடாபி கொண்டொலிசா ரைஸின் மீது பல வருடங்களாக ஈர்ப்புக் கொண்டிருந்தமை தொடர்பிலான தகவலாகும்.

கடாபி பல தடவைகள் கொண்டலிஸா ரைஸ் தொடர்பில் ஊடகங்களில் வர்ணித்திருந்ததுடன் பாராட்டியுமிருந்தார்..

குறிப்பாக 2007 ஆம் ஆண்டு அல் ஜெஸீரா தொலைக்காட்சிக்கு அவர் வழங்கியிருந்த பேட்டியின் போது " லீசா...லீசா...லீசா... நான் அவரை விரும்புகிறேன், எனது டார்லிங் கறுப்பின ஆபிரிக்க பெண் அவர்" எனவும் கடாபி தெரிவித்திருந்தார்.

மேலும் ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த கொண்டலிஸா ரைஸ் அரேபியத் தலைவர்களுக்கு உத்தரவு வழங்குவதனைப் பார்த்துப் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொண்டலிஸா ரைஸ் 2008 ஆம் ஆண்டு லிபியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அவர் கடாபியுடன் தனியான விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கடாபி ரைஸிற்கு வைர மோதிரம் உட்பட சுமார் 212,000 அமெ.டொலர் பெறுமதியான பரிசுப்பொருட்களை வழங்கியுள்ளார்.

இத்தகவல்களானவை தற்போது ஊடகங்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகின்ற விடயமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




13 வயதுப் பெடியன் சாவின் விளிம்பில் இருந்து உயிர் தப்பியுள்ளான்.



அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 13 வயதுப் பெடியன் சாவின் விளிம்பில் இருந்து உயிர் தப்பியுள்ளான். அதிசயமான இந் நிகழ்வை தொடரூந்து நிலைய கமராக்கள் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. குறிப்பிட்ட சிறுவன் சம்பவ தினமன்று தொடரூந்து(ரெயில்) எடுப்பதற்காக சீட்டில் அமர்ந்து இருந்திருக்கிறான். அதுமட்டுமா சிகரெட் ஒன்றையும் பிடித்தவண்ணம் இருந்திருக்கிறான். அவன் நின்ற பிளாட்போமுக்கு எதிரே இருந்த பிளட்போமில் தனக்கு தெரிந்த பெண் ஒருவர் வரவே அவரைப் பார்க்க தண்டவாளங்களை கடந்து அடுத்த பிளாட்போமுக்கு அவர் தாவ முற்பட்டுள்ளார்.

நடுத் தண்டவாளத்தில் வைத்து எதிரே ஒரு தொடரூந்து வருவதை அவர் அவதானித்துவிட்டு தான் வந்த அதே பக்கத்துக்கு விரைந்து சென்று திரும்பவும் மேலே ஏற முயற்சி செய்துள்ளார். ஆனால் படுவேகமாக வந்த அந்த தொடரூந்து அவரை மோதியுள்ளது. அதிஷ்டவசமாக அவர் கீழே விழுந்து தப்பி விட்டார். ஒரு கையும் ஒரு காலும் உடைந்த நிலையில் அவர் மீண்டும் தாவி மேலே ஏறி வந்து திரும்பவும் அமரும் காட்சி பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளது. சாவையே ஏமாற்றிய சிறுவனின் இக் காணொளியை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.