Wednesday, 27 July 2011

ஆடையகத்தின் பொம்மைகளுக்கு பதிலாக அரைநிர்வாண மொடல்கள்

இத்தாலிய ஆடை விற்பனை நிலையமொன்றில் ஜன்னல்களில் ஆளுயர பொம்மைகளுக்குப் பதிலாக அரை நிர்வாண மொடல்கள் நிறுத்திவைக்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிலான் நகரிலுள்ள அந்த ஆடையகத்தில் ஆண்களும் பெண்களும் கட்டை காற்சட்டை, மற்றும் நீச்சலுடைகளை அணிந்து நின்றுகொண்டிருந்தனர்.
கோடை கால நீச்சல் மற்றும் குளியல் ஆடை விற்பனையை ஊக்குவிப்பதற்கான திட்டத்தின்படி இம்மொடல்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
ஆனால் இத்தாலிய தொழிற்சங்கங்கள் இந்நடவடிக்கையை கண்டித்துள்ளன. இது மனித உடலை வர்த்தகமாக்கும் நடவடிக்கை என இத்தாலிய தொழிற் சங்கம் விமர்சித்துள்ளது.

‘நாங்கள் இந்த விற்பனைக்கோ திறந்த சந்தைப் பொருளாதாரத்திற்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால், நாங்கள் ஊழியர்களின் நாகரீகம் மற்றும் அறிவுள்ள வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளை கருத்தில் கொள்கின்றோம்’ என அத் பில்காம்ஸ் சி.ஜி.ஐ.எல். எனும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் மேற்படி இளம் மொடல்கள் இவ்வாறான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளால் சிறிது நேரம் காணாமல் போனாலும் பின்னர் மீண்டும் அந்த வர்த்தக நிலையத்தின் கண்ணாடிகள் முன்னால் வந்து நின்றனர். மொடலிங் என்பதும் ஒரு தொழில் தான் என அவர்கள் கூறியுள்ளனர்.
மேற்படி தொழிற்சங்கங்கள் தமது வியாபாரத்திற்கு மேற்கொண்ட ‘இலவச பிரச்சாரத்திற்கு’ நன்றி தெரிவிப்பதாக அவ்வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், கூறியுள்ளார்.
‘வீதிகளில் வெட்டியாக திரிந்தவர்களுக்கு ஒரு தொழிலை வழங்கி ஊதியமும் வழங்கினோம். அதில் என்ன தவறு?’ என்கிறார் அவர்.

ஆபாசம் - வன்முறை படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது: தமிழக அரசு அதிரடி


 

கடந்த ஆட்சியில் சினிமாக்களின் பெயர்கள் தமிழில் வைத்தால் கேளிக்கை வரியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு சலுகை அளிக்கப்பட்டது. தமிழில் பெயர் வைக்க ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இந்த சலுகை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.

ஆனால் இந்தச் சலுகையை பல சினிமாக்கள் தவறாக பெற்று வந்ததாக பேசப்பட்டது. வரி சலுகைக்காக ஒரு எழுத்து, இரண்டு எழுத்துகளில் பெயரும், அடைப்புக்குறிக்குள் வேறு ஒரு பெயரும் வைத்துக் கொண்டும் சில சினிமாக்கள் வெளிவந்தன. வரி விலக்கு பெற தகுதியில்லாத திரைக்கதைகளை கொண்ட சில சினிமாக்களும் தமிழில் பெயர் வைத்த ஒரே காரணத்திற்காக இந்த சலுகையை அனுபவித்தன. 

இப்போது இந்த வரிச்சலுகையை பெற மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதில் வன்முறை, ஆபாசம், பண்பாடற்ற திரைக்கதைகள் கூடாது என சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் சுனீல் பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

22.7.2006ல் தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டது. பின்னர் கேளிக்கை வரி விலக்கு பழைய திரைப்படங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. 30.3.2007ல் தமிழ் திரைப்படங்களின் காப்புரிமை வைத்திருப்போருக்கும் கேளிக்கை வரிவிலக்கு நீட்டிக்கப்பட்டது.

22.8.2007ல் கேளிக்கை வரிச்சலுகை பெற, திரையிடப்படும் பழைய மற்றும் புதிய திரைப்படங்களின் தமிழ் பெயர், தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து பரிந்துரை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.   திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிடப்பட்டால் மட்டுமே அத்திரைப்படங்களின் கதைக்கரு தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளது என உறுதி செய்ய இயலவில்லை.

மேலும் சில தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்பட்டதால் மட்டுமே கேளிக்கை வரி விலக்கு பெற்று விடுகின்றன. மேற்கண்ட சூழ்நிலையில் கேளிக்கை வரிச் சலுகை பெற திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கீழ்க்கண்ட கூடுதல் தகுதி வரையறைகளை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது. 

* அவ்வாறான திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து `யு' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

* திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்.   * திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும். * திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம்பெறுமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

மேற்கண்ட வரையறைகள், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரப்பட்டு தற்போது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.   மேலும் கேளிக்கை வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்கின்ற திரைப்படங்களை பார்வையிட்டு வரி விலக்கிற்கு பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும் என அரசு ஆணையிடுகிறது. அவ்வாறான புதிய குழு அமைப்பதற்கான ஆணை தனியே வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மங்காத்தா - 19; வேலாயுதம் - 31 ?


தமிழ்நாட்டின் தியேட்டர் அதிபர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படங்கள் ' வேலாயுதம்' மற்றும் 'மங்காத்தா'.

இன்னும் இசை வெளியீட்டு தேதியே வெளியிடாமல் இருக்கும் பட்சத்தில் கேரள விநியோகஸ்தர்கள் இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அஜீத்தின் 50 வது படமான 'மங்காத்தா' ஆகஸ்ட் 19ம் தேதியும், விஜய் நடிக்கும் 'வேலாயுதம்' ஆகஸ்ட் 31ம் தேதியும் வெளியாகும் என்று கூறி அங்குள்ள தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்களாம்.

ஓணம் பண்டிகை காலத்தில் இவ்விரண்டு படங்களும் வெளிவந்தால் வசூலில் நனையலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.


 எப்போதுமே தமிழ், தெலுங்கு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரு படம் வெளியானால் ஒரே தேதியில் தான் வெளிவரும். ஆகையால் தமிழ்நாட்டிலும் இவ்விரண்டு படங்களும் இதே தேதியில் தான் வெளியாகும் என ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

விக்டோரியன் பிரேத பரிசோதனை புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு)


19 ம் நூற்றாண்டுகளில் புகைப்படம் எடுக்கும் வழக்கம் முற்றிலும் குறைவாக இருந்தது. அப்போது வாழ்ந்த மனிதர்கள் இறந்து விட்டால் அவர்களின் முகம் அடுத்த சந்ததியர்களுக்கு தெரியாமல் மறைந்து போகிறது.

அதனால் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு கொடுக்க இறந்தவர்களின் உடலை வெளியே எடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.








ஆபத்தான சல்பர் சுரங்கம் (வீடியோ இணைப்பு)


Olivier என்பவர் இந்தோனேசியாவில் உள்ள East Java என்ற பகுதியில் உள்ள சல்பர் சுரங்கத்தை பற்றி நமக்கு கூறும் தகவல்களை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

200 மீற்றர் ஆழமான பள்ளத்தில் இருந்து சல்பர் குழம்பான வெளிவருகிறது. இந்த சல்பர் சுரங்கம் 2600 மீற்றர் உயரமுள்ள எரிமலைக்கு அடுத்து உள்ளது. கற்களாக உள்ள இந்த சல்பரை நிலவு வெளிச்சத்தில் மீண்டும் தொழிற்சாலைக்கு எடுத்து சென்று தூய சல்பராக மாற்றப்படுகிறது.





















இந்திய அணியுடன் ஜூனியர் சச்சின் போட்டோக்கள் & வீடியோ


 




















முனி - 2... அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காஞ்சனா. அவர் இதற்கு முன் நடித்து இயக்கி வெளியிட்ட முனி படத்தின் இரண்டாம் பாகம் இது.

இந்தப் படத்தின் ஹைலைட்டே, முனியாக வரும் சரத்குமார்தான். இந்த முனி சாதாரண முனி அல்ல... திருநங்கை.

நடிகர் சங்கத் தலைவராக, எம்எல்ஏவாக, கட்சித் தலைவராக தனக்கென ஒரு இமேஜ் கொண்ட சரத்குமார், சற்றும் தயங்காமல் இந்த வேடத்தில் நடித்துள்ளார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் இப்படிச் சொல்கிறார்:

"காஞ்சனா படத்தில் சரத்குமாரின் கேரக்டர், படத்தில் ஹைலைட்டாக அமைந்துவிட்டது. இமேஜ் பார்க்காமல் இந்த வேடத்தை அவர் செய்ததால் படத்துக்கே புதிய மரியாதை கிடைத்துள்ளது. அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்."

படத்தில் நடித்தது குறித்து சரத்குமார் கூறுகையில், "நான் ஒரு நடிகனாக என் வேலையைச் செய்தேன். சவாலான வேடங்களைச் செய்வது எனக்கு பிடித்தமான விஷயம். காஞ்சனா பாத்திரத்தில் என் பங்கை சரியாகச் செய்திருப்பது, ரசிகர்களின் ரியாக்ஷனிலிருந்து தெரிகிறது," என்றார்.


இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இன்று கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் காட்டி வரும் அக்கறைக்கும் நடவடிக்கைகளுக்கும், கச்சதீவை மீட்க வலியுறுத்தி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு நேரில் நன்றி தெரிவிக்கவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெயலலிதாவை அவர் சந்திப்பது இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை பிரச்சனையில் தமிழக அரசுக்கு துணையாக இருப்போம்: ஜெயலலிதாவை சந்தித்தப் பின் சீமான் பேட்டி
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கச்சதீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்கு ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்ததாகவும், இலங்கை பிரச்சனையில் தமிழக அரசுக்கு துணையாக இருப்போம் என்று முதல்வரிடம் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

91 பேரைக் கொன்ற இடத்தில் இருந்து நீந்தித் தப்பிய ஈழத் தமிழ் பெண் !



கடந்த 22ம் தேதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள உட்டோயா தீவில் ஆளும் கட்சியின் இளம் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் போலிசார் போல வேடமிட்டு துப்பாக்கி ஏந்திவந்த ஆயுததாரி இளையோர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டார். இதில் சுமார் 91 பேர் உயிரிழந்தனர் என்பது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அக் கூட்டத்தில் ஈழத் தமிழ் பெண் ஒருவரும் இருந்திருக்கிறார். அவர் தன்னை எவ்வாறு பாதுகாத்தால், ஆயுததாரி சுட்டபோது என்ன செய்தார் என்பதைக் கேட்கும்போது நாம் அதிர்சியில் உறைந்துபோனோம். அதிர்வு இணையம் சார்பாக அவரை நாம் தொடர்புகொண்டு மேலதிகத் தகவல்களைப் பெற்றுள்ளோம். குறிப்பிட்ட தீவில் பல நூற்றுக்கணக்கான இளையோர்கள் நின்றிருந்தவேளை ஆயுததாரி அவர்களை நோக்கிச் சுட்டு சுமார் 50 பேர் இறந்த பிற்பாடு ஆயுதத்தை ஒளித்துவைத்துவிட்டு உதவிசெய்யும் ஒரு பொலிசார் போல வந்து அனைவரையும் கட்டிடத்துக்குள் பாதுகாப்பாகச் செல்லுமாறு கூறியுள்ளார்.



இந் நபரின் கூற்றைப் பல இளையோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தலைதெறிக்க ஓடி மறைவிடங்களைத் தேடியுள்ளனர். அங்கே நின்றிருந்த நூற்றுக்கணக்கான இளையோர்களை இவர் கட்டிடத்துக்குள் போகச்சொன்னதன் அர்த்தம் என்ன என்று புரிகிறதா ? எல்லோரும் கட்டிடத்துக்குள் சென்றிருந்தால், தான் மறைத்து வைத்த ஆயுதத்தை எடுத்துவந்து கட்டிடத்துக்குள் புகுந்து அவர் தாக்கியிருப்பார். அப்படி என்றால் இன்னும் பலர் உயிரிழந்திருப்பார்கள். ஆனால் அதிஷ்டவசமாக அவர் கூற்றைப் பல இளையோர்கள் ஏற்கவில்லை. அது புத்திசாலித் தனம் இல்லை என பலர் எண்ணியுள்ளனர். ஆயுததாரி பொலீஸார் போல வேடமிட்டு அனைவரையும் கட்டிடத்துக்குள் செல்லுமாறு உத்தரவிட்டவேளை, குறித்த தமிழ் பெண் அவருடன் பேசியிருக்கிறார். யார் சுடுகிறார்கள் எதற்காகச் சுடுகிறார்கள் என இப் பெண் அவரையே கேள்விகேட்டும் உள்ளார். அவரோ எனக்குத் தெரியாது ஆனால் யாரோ சுடுகிறார்கள் என்று பதிலளித்துள்ளார்.

சொன்ன பேச்சை இளையோர்கள் கேட்காத பட்சத்தில் திரும்பவும் மறைவிடத்துக்குச் சென்று தனது துப்பாக்கியை எடுத்து அவர் இளையோர்களை நோக்கிச் சுட ஆரம்பித்துள்ளார். அது ஒரு தீவு என்பதால் நீந்தத்தெரிந்த பல இளையோர்கள் தண்ணீரில் குதித்து நீந்தித் தப்பித்துள்ளனர். இதனிடையே குறிப்பிட்ட ஈழத் தமிழ் பெண்ணும் இவரது துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க ஏரிக்கரை நோக்கி ஓடியுள்ளார். இப் பெண்ணையும் ஆயுததாரி குறிவைத்துச் சுட்டுள்ளார். ஆனால் அவற்றில் இருந்து தெய்வாதீனமாகத் தப்பிய அவர் நீரில் குதித்துள்ளார். சாதாரணமாகவே ஐரோப்பாவில் காணப்படும் அனைத்துக் கடல், மற்றும் கடல் ஏரிகளின் வெப்ப நிலை என்ன என்று உங்களுக்குத் தெரியும். அதிலும் நோர்வே போன்ற குளிர் நாடுகளில் கடல் உறையும் நிலையில் குளிர் இருக்கும். நோர்வே நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் அதிகமாக இக் கடலில் குளித்துப் பழக்கப்பட்டதால், உறையும் குளிராக இருந்தாலும் அவர்கள் கடலில் நீந்த வல்லவர்களாக உள்ளனர். வெப்ப நாடுகளில் இருந்து வருவோர் இக் கடலில் குதித்தால் சில நொடிகளில் குளிர் தாக்கி இறக்கக்கூடும்.

தண்ணீரை உறையவைக்கும் குளிரில் அவர் சுமார் 1 கி.மீட்டர் தூரம் நீந்தியுள்ளார். மரணப் பயம் ஒரு புறம், தனது நண்பி மற்றும் நண்பர்கள் இறந்து கிடந்ததைப் பார்த்த அதிர்ச்சி ஒருபுறம் இருக்க அவர் கடலில் நீந்திய வண்ணம் இருந்திருக்கிறார். கரை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது , இல்லை எவ்வளவு நேரம் நீந்தவேண்டும் என்று கூடத் தெரியாத அத் தமிழ் பெண் தனது நம்பிக்கையை மட்டும் விட்டுவிடவில்லை. இதற்கும் மேலும் ஒரு கொடுமையும் அரங்கேறியுள்ளது. கடல் ஏரியில் நீந்தும் வேளை அவ்வளியே ஒரு படகு அவரை நோக்கி வந்துள்ளது. தன்னை நோக்கிச் சுட்ட ஆயுததாரி தனக்கு சூடு விளவில்லை என்பதனால் தன்னைத் திரத்திக்கொண்டு படகில் வருவதை அவர் கண்டுள்ளார். அதாவது கடலில் குதித்து தப்பிக்கும் இளையோர்களையும் கடலில் வைத்து சுட்டுக்கொல்ல ஆயுததாரி படகில் வருவதாக நினைத்த அவர் நீருக்குள் இன்னும் மூழ்கி ஆழத்துக்குச் சென்றுள்ளார். சில வினாடிகள் கழித்து வெளியே வரும்போது, அவர் வேறு ஒருவர் படகில் செல்வதைப் பார்த்துள்ளார்.

இவர் தண்ணீரில் மூழ்கி ஆழத்துக்குச் சென்ற காரணத்தால் படகில் சென்றவர் இவரைக் காணவில்லை. கண்டிருந்தால் காப்பாற்றி இருந்திருப்பார். இப்படியும் ஒரு நிகழ்வா என அனைவரையும் உறையவைக்கும் நிலை அங்கே இருந்திருக்கிறது. இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு தளராத உறுதியோடு அவர் இளைப்பாறி இளைப்பாறி நீந்த ஆரம்பித்துள்ளார். இறுதியில் சுமார் 1 கி.லோமீட்டர் நீந்தி ஒரு கரையை அடைந்துள்ளார். அங்கே நின்ற நோர்வே மக்கள் சிலர் அவரின் கரங்களைப் பற்றி வெளியே இழுத்து உதவிசெய்துள்ளனர். இப் பெண் துணிச்சலாகவும் விடா முயற்சியோடும் தன்னைக் காப்பாற்றியிருந்தாலும், தனது நண்பர்கள் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அத்தோடு தொலைக்காட்சியில் பார்த்தபோது போலீஸ் சீருடையில் தன்னோடு வந்து பேசிய ஆள் தான் அந்த ஆயுததாரி என்று அவர் தற்போது உறுதியாகக் கண்டறிந்துள்ளார். அவர் அடைந்துள்ள சோகங்களில் இருந்தும் அதிர்சியில் இருந்தும் அவர் விரைவில் மீண்டுவர உதவேண்டும் என அதிர்வு இணையம் அவர்களது உற்றார் உறவினர்களை வேண்டி நிற்கிறது.

Coca cola , Boeing வைத்து இலங்கை இரகசியத் திட்டம் ?

இலங்கைக்கான அமெரிக்க நிதியுதவிகளை தடைசெய்யும் பிரேரணை ஒன்று சமீபத்தில் காங்கிரஸால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது சட்ட வரமுறையாகும் சாத்தியங்களும் காணப்படுகிறது. இவ்வாறு இது ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டால், நடப்பு ஆண்டில் 13 மில்லியன் டொலர் தொகையையும், அடுத்த ஆண்டில், 55 மில்லியன் டொலர் தொகையையும் இலங்கை இழக்கவுள்ளது. இலங்கை பணத்தில் இது கிட்டத்தட்ட 7.5 பில்லியன் ரூபாய்கள் ஆகும். குறிப்பிட்ட பிரேரணை சட்டமாக்கப்படுவதற்கு முன்னர், அதைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசு அதீத பிரயத்தனங்களை எடுக்கின்றது ,அதன் ஒரு பகுதியாக சில பல்தேசிய நிறுவனங்கள் சிறிலங்காவுடனான வர்த்தக உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனைவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

கொகா கோலா, போயிங் உள்ளிட்ட 12 பல்தேசிய நிறுவனங்கள் சிறிலங்கா - அமெரிக்க வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன எனத் தற்போது அறியப்படுகிறது. அதாவது அமெரிக்க கம்பெனிகளை வைத்து இலங்கை பாரிய இரகசிய காய் நகர்த்தல் ஒன்றை மேற்கொள்ள தயாராகியிருக்கிறது. இந்தக் கடிதத்தில் சிறிலங்காவின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருவதைக் காண்பிக்கும் புள்ளிவிபரங்களைச் சுட்டிக்காட்டி , சிறிலங்கா - அமெரிக்க வர்த்தக உறவுகள் வலுப்படுத்தப்படுவது இருநாடுகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளதாம்.

சிறிலங்காவுக்கான உதவிகளை அமெரிக்கா தடை செய்யவுள்ளது பற்றி இந்தக் கடிதத்தில் நேரடியாக எதுவும் குறிப்பிடப்படாத போதும்- அமெரிக்க அரசுக்கு மறைமுகமாக அழுத்தம் ஒன்றைக் கொடுக்கும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது. இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறிலங்கா ஆண்டுதோறும் 13 மில்லியன் டொலர் அபிவிருத்தி நிதியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட இலங்கை அரசின் சார்பில் பிரதிநிதிகள் குழு ஒன்று வாஷிங்டன் செல்லவுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை விடவும் இலங்கை பிறிதொரு இரகசியத் திட்டத்தையும் வைத்துள்ளதாம். அதாவது அமெரிக்காவின் நிதி உதவிகள் தடைப்பட்டால் துண்டு விழும் தொகையை சீனாவிடம் இருந்து பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசானது மேற்குலகுகளிடம் இருந்து தொடர்ந்தும் தன்னை அன்னியப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சனல் 4 ன் கொலைக்களம் தமிழில் ஜெயா தொலைக்காட்சியில் வரவுள்ளது !

 
சனல் 4 கொலைக்களம் வீடியோ ஆவணப்படம் தமிழில் �டப்� செய்யப்பட்டு வருவதாகவும் அது விரைவில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெலலிதாவிற்குச் சொந்தமான ஜெயா தொலைக்கட்சியில் ஒளிபரப்புச் செய்யப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று வெளியான சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழ் இத்தகவலை அரசியல் அலசல் பகுதியில் இது வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயா தொலைக்காட்சியை இலங்கையிலும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஸ்ரீலங்காவின் தூதர் பிரசாத் காரியவாசம் அண்மையில் சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது ஜெயலலிதா தாம் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு இரண்டாவது பிரதான காரணம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தான் கொண்டிருந்த நிலைப்பாடு ஆகும் என்றும் இலங்கைத் தூதரிடம் தெரிவித்தார் என்றும் சண்டே ரைம்ஸ் அரசியல் அலசலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஸ்ரீலங்கா பற்றி தாம் எடுக்கும் நடவடிக்கைகள் தனது மக்கள் மற்றும் தனது அரசாங்கத்தின் கூட்டாளிக்கட்சிகளின் ஆலோசனையுடன் தான் அமையும் என்றும் ஜெயலலிதா பிரசாத் காரியவாசத்திடம் தெரிவித்ததாகவும் சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை ஜெயா ரிவியில் ஒளிபரப்பப்படும் இந் நிகழ்வுகளை இலங்கையிலும் பார்க்க முடியும் என்பதால் குறிப்பிட்ட நாளில் அவ் ஒளிபரப்புகளைத் தடைசெய்வது குறித்தும் இலங்கை அரசு ஆராய்ந்து வருகிறதாம் என்ற தகவல்களும் தற்போது கசிந்துள்ளது.

சூரியனுடன் மோதி அழிந்துபோகும் வால் நட்சத்திரம்: முதன்முறையாகப் பதிவு !

அண்டவெளியிலும் மற்றும் நமது பால்வெளியிலும் பல நூற்றுக்கணக்கான வால் நட்சத்திரங்கள் வலம்வந்துகொண்டு இருக்கின்றன. அவை உண்மையாகவே ஒரு விண்கல்லாகவே நோக்கப்படுகிறது. அவை பயணிக்கும் வேகத்தால் அக் கற்களில் இருந்து தூசித்துகள்கள் கிளம்பி பின்நோக்கிச் செல்வதால் அக் கல்லுக்கு ஒரு வால் இருப்பதுபோலத் தோற்றமளிக்கிறது என்று விஞ்ஞானிகள் விளக்கஞ்சொல்லுகின்றனர்.

இதுபோல ஒரு வால் நட்சத்திரம் சமீபத்தில் சூரியனோடு மோதி அழிந்துள்ளது. இவ்வாறு நடக்கும் காட்சிகள் அபூர்வம் அதனை மனிதனின் கண்களால் பார்க்கவும் முடிவதில்லை. ஆனால் செயற்கைக்கோள்களின் துல்லிய கமராக்களின் கண்களில் இருந்து இவை தப்பிவிடுமா என்ன ?

அமெரிக்காவால் விண்வெளியில் ஏவப்பட்டுள்ள SDO என்னும் விண்கலம் உயர் வரையறை படங்களை பூமிக்கு அனுப்பிவருகிறது. அவ்வாறு அனுப்பப்பட்ட படங்களில், கடந்த ஜூலைமாதம் 6ம் திகதி ஒரு வால் நட்சத்திரம் சூரியனுடன் மோதி தனது மரணத்தை சந்தித்ததை அது துல்லியமாக படும் எடுத்து அனுப்பியுள்ளது. சுரியனுடன் மோதமுன்னர் 15 நிமிடங்களுக்கு முன்னரே அது தீ பற்றி எரிந்து அழிந்துபோனதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

விண்ணில் இருந்து பார்க்கலாம்: 3 கி.மீ. நீளத்துக்கு தனது பெயரை எழுதிய கோடீசுவரர்

 
ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஹமாத். சமீபத்தில் அவர் அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார். அதில் தனது பெயரை 3 கி.மீட்டர் நீளத்துக்கு எழுதி வைத்தார்.

தனது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் சுமார் 0.5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்து தரையில் பதித்து வைத்துள்ளார். அந்த எழுத்துக்களை விண்ணில் பறந்தபடியே பார்க்க முடிகிறது. இந்த எழுத்துக்கள் �பேஷ்புக்� இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை தண்ணீரால் அழிக்க முடியாதபடி எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில், இவர் ரூ.12 கோடிக்கு உலகின் மிக விலை உயர்ந்த அதிநவீன காரை வாங்கினார். அபுதாபியில் இவருக்கு ஆட்டோமொபைல் மியூசியம் உள்ளது. அதில் கவர்ச்சிகரமான 200 வெளிநாட்டு கார்கள் உள்ளன. இவர் மிகப்பெரிய ஒரு லாரியை வடிவமைத்துள்ளார். அது அவரது மாளிகையை விட 64 மடங்கு பெரியது.

வண்ணமயமாக மணல் சிற்பங்கள் (படங்கள் இணைப்பு)

 
நம்முடைய தளத்தில் பல விதமான மணல் சிற்பங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது நாம் பார்க்க போகும் மணல் சிற்பங்கள் வண்ணங்கள் சேர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.