Wednesday, 9 November 2011

வெட்டிய கால் மீண்டும் முளைத்த அதிசயம்

யானைக்கால் நோய் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் தான் Mandy Sellars. இவர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்நோயின் காரணமாக இவரது கால்கள் வீக்கமடைந்து யானையை போன்று காட்சியளித்தது.
இதனால் சத்திர சிகிச்சை மூலம் அவரது ஒரு காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அகற்றப்பட்ட ஒரு காலின் எடை சுமார் 32 கிலோவாக இருந்திருக்கிறது.
அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் 22 மாதங்கள் கழிந்த நிலையில் மீண்டும் இவரது கால் முளைக்க தொடங்கியுள்ளது.
இதுபற்றி இவர் கருத்து தெரிவிக்கையில், நான் ஊனமாக இருப்பேன் என்று எண்ணவில்லை. எனது கால் மீண்டும் முளைக்கும் என நம்பிக்கை இருந்தது என பெருமையாக சொல்கிறார்.
மேலும் தற்போது முளைத்த கால் சுமார் 19 கிலோ எடையுடனும் 1 மீற்றர் சுற்றளவினையும் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments: