33 வயதான புவனேஸ்வரி சிங்கப்பூரில் திட்ட மேற்பார்வையாளராக பணியாற்றிய இந்திய பிரஜையான முருகையன் செல்வம் என்பவரை கொலை செய்ததாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
தன்னையும் தனது எஜமானரின் இரு பிள்ளைகளையும் கொல்லப்போவதாக தனது காதலர் அச்சுறுத்தியதால் தற்காப்பு நடவடிக்கையாக அவரை கொன்றதாக மனநல மருத்துவரிடம் புவனேஸ்வரி கூறியுள்ளார். தன்னை பாலியல் ரீதியிலும் பொருளாதார ரீதியாகவும் அவர் சுரண்டியதாகவும் புவனேஸ்வரி கூறியுள்ளார்.
இப்பணிப்பெண்ணுடன் வேறு இரு இந்திய பிரஜைகளும் பாலியல் உறவுகொண்டிருந்ததாக நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் ஒருவர் செல்லிட தொலைபேசிக்கான சிம் அட்டையை அப்பெண்ணுக்கு வாங்கிக்கொடுத்துள்ளார். தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து தனது காதலர் தன்னை ஏமாற்றியமை குறித்தும் அப்பெண் மேற்படி நபர்களிடம் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment