Wednesday, 9 November 2011

5 செய்தி இணைய தளங்களுக்கு இலங்கை தடை

நாட்டு நலனுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி 5 செய்தி சேனல்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
ஆனால், இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு ஊடக நிறுவங்கள் விமர்சித்துள்ளன.
 அமெரிக்க தூதரகம், இதனை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கூறியுள்ளது.
 இலங்கை சட்டப்படி, எந்த செய்தி நிறுவங்களையும் தடை செய்ய வழியில்லை என்றாலும், அவற்றின் மீது அவதூறு வழக்குதொடுக்கலாம்.
 இருந்தபோதும், இலங்கை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் கனேகல, இந்தத் தடையை அறிவித்துள்ளார்.

அந்த 5 செய்தி இணையதளங்கள்:

www.lankaenews.com, srilankamirror.com, srilankaguardian.com, paparacigossip9.com and www.lankawaynews.com

No comments: