நடிகை மனோரமா குளியலறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.![]() மனோரமா முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை செய்து கொண்ட பிறகும் வலி குறையாததால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அவர் படங்களில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது |
Saturday, 29 October 2011
குளியலைறையில் வழுக்கி விழுந்து தலையில் அடி: மருத்துவமனையில் மனோரமா
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment