Monday, 8 August 2011

இனப் பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசே முதலில் வைக்கவேண்டும்! மேற்கு நாடுகளின் நிலைப்பாடு இதுவே

இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு அரசே முதலில் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் விரும்புவதாக கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
 இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பை ஒத்ததாக அமைந்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பு முதலில் இலங்கை அரசுக்கே உள்ளதென்று இந்த நாடுகள் நம்புவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆனால் சிறிலங்கா அரசு எப்போதும், ஏனைய தரப்பனரே முதலில் தீர்வுத்திட்டத்தைத் தர வேண்டும் என்று கேட்டு வருகின்றது.

அரசின் இந்த நகர்வு காலத்தை விழுங்குகின்ற ஒரு முயற்சி என்று அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஐரோப்பய ஒன்றியம் போன்ற நாடுகளால் புரிந்து கொள்ளப்படுவதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை அரசிடம் இருந்து எழுத்து மூலமான பதில் ஒன்றைக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு ஒன்றை வழங்கியுள்ள நிலையில், இலங்கை அரசின் மீதான அழுத்தங்களை இந்த நாடுகள் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

No comments: