Monday, 8 August 2011

இந்தியாவின் அழுத்தம் காரணமாக அவசரகால சட்டம் நீக்கப்படவுள்ளது

இந்தியா கேட்டுக்கொண்டதை அடுத்து இலங்கையில் அவசரகால சட்டம் அடுத்த மாதத்தில் இருந்து நீக்கப்படவுள்ளது
கடந்த வாரம் லோக்சபாவில் உரையாற்றிய இந்திய வெளியறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, இலங்கை அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும். போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை நடத்தவேண்டும். மற்றும் இயல்புக்கு வந்த பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் இந்த மாதத்துக்கான அவசரகால சட்ட நீடிப்பு நாளை திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் என்றும், பெரும்பாலும் அடுத்த மாதத்தில் இருந்து அவசரகால சட்டம் நீக்கப்படும் என்றும் அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments: