Monday, 8 August 2011

இலங்கை யாத்திரீகர்களை தங்க வைக்க வேண்டாம் என பொலிஸார் சென்னை ஹோட்டல்களுக்கு உத்தரவு

இலங்கை யாத்திரீகர்களை தங்க வைக்க வேண்டாம் என தமிழக பொலிஸார், சென்னை ஹோட்டல்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இலங்கை யாத்திரீகர்கள் மீது அண்மையில் சென்னையில் வைத்து இரண்டு தாக்குதல் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினால் சென்னையில் உள்ள மஹாபோதி நிலையத்திற்கு யாத்திரீகர்களினால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை யாத்திரீகர்கள் நாடு திரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையின் வட பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் இலங்கை யாத்திரீகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு அனுமதி மறுப்பதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழகப் பொலிஸாரின் இந்த நடவடிக்கை தம்மை அவதூறு செய்யும் வகையில் அமைந்துள்ளது என இலங்கை யாத்திரீகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை யாத்திரீகர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கக் கூடாது என உத்தரவிடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: