Sunday, 29 January 2012

இங்கே தமிழனை விட மலையாளி பல படி மேல்

 


சில புகைப்படங்களைப் பார்க்கும் போது எம்மையறியாமல் மனதிற்குள் சந்தோசம் பொங்கும்.அதே போல் சில படங்களைப் பார்க்கும் போது வெறுப்பும் கோவமும் ஒருங்கே ஏற்படும்.இந்தப் படத்தைப் பார்த்த மானமுள்ள தமிழனுக்கு மேலே சொன்னதில் எந்த உணர்வு ஏற்ப்படிருக்கும் என்று நான் சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை.

எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால்,அந்த அம்மாவின் காலில் இப்படி பகிரங்கமாக சாஷ்டாங்கமாக விழுந்து சில்லறை பொறுக்கி  விட்டு,தன் மனைவி,பிள்ளைகள் முன் மீசையை முறுக்கிக்கொண்டு எப்படித் திரியமுடிகின்றது என்பதுதான்.

ஏதோ நான் பெண் ஆதிக்கவாதி என்று முத்திரை குதிவிடாதீர்கள்.இதே போல் ஓர் ஆண் அரசியல்வாதி காலில் விழுந்திருந்தாலும்,இதே உணர்வே ஏற்ப்பட்டிருக்கும்.

பெற்ற தாய்,தந்தை காலில் விழுந்து வணங்கத்தயங்கும் நமது சமுதாயம்,இப்படியான அரசியல் வாதிகளின் காலில் விழுவதுதான் வேதனையாக உள்ளது.காலப் போக்கில் இதுவும் அரசியல் கலாச்சாரமாகிவிடும்.ஆனால் காமராசர் போன்ற அவதாரபுருசன் என்றால் வேறு கதை.

அந்த அம்மாவும் தன் கறைபடியாத கரத்தால்,எப்படி ஆசீர்வதிக்கின்றார்...................அன்னை தெரேசா கூட இப்படி போஸ் கொடுத்து நான் பார்த்ததில்லை. எல்லாம் காலத்தின் கொடுமை!!!!!

அருகில் உள்ள படம்,கேரளா முதலமைச்சருடையது.
கற்றுக் கொள்ளுங்கள் மலையாளிகளிடம் இருந்து,இத்தகைய நற்ப்பண்புகளை..........................

ஏதோ நான் மலையாளி மக்களை உயர்த்தியும்,தமிழனை கேவலப்படுத்தியும் விட்டதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமையே.

--எப்படியோ,இந்தப் படத்தைப் பார்த்ததால் எனக்கு ஏற்ப்பட்டவயிற்றெரிச்சலில் ஒரு பகுதியை இங்கே கொட்டித் தீர்த்துவிட்டேன்.--

No comments: