Sunday, 29 January 2012

ரெயிலில் 2 இளம் பெண்களுடனும் உல்லாசமாக

மைசூரில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில் வெள்ளிக்கிழமை காலை 10 30 மணிக்கு புறப்பட்டது. இந்த ரெயிலில் மைசூர் ரெயில் நிலையத்தில் புத்தக விற்பனை கடை வைத்திருக்கும் அருண்குமார், டீ கடை வைத்திருக்கும் சந்தோஷ் ஆகிய 2 வாலிபர்கள் முதல் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் ஏறினார்கள்.
ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அருண்குமார் செல்போனில் 2 இளம் பெண்களிடம் தொடர்பு கொண்டு பேசி அசோக்புரம் ரெயில் நிலையத்தில் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் ஏறும்படி கூறி உள்ளார். அதன்படி அந்த 2 இளம் பெண்களும் அசோக்புரம் ரெயில் நிலையத்தில் ஏறினார்கள். அவர்கள் ரெயிலில் ஏறியதும் அருண்குமார், சந்தோஷ் ஆகிய இருவரும் முதல் வகுப்பு பெட்டி அறையை திறக்க முடியாதவாறு உள்புறம் பூட்டி விட்டு 2 பெண்களுடனும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மைசூர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது. உடனடியாக அவர்கள் சாம்ராஜ்நகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சாம்ராஜ்நகர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்ததும், முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிக்கு ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அறை கதவை தட்டினார்கள். உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. கதவை திறக்க முடியவில்லை.
எனவே ரெயில் பெட்டி அறை கதவு லாக்கரை திறக்கும் நிபுணர்களை போலீசார் அழைத்து வந்து கதவை திறந்தனர். அங்கு 2 இளம் பெண்கள் உள்பட 4 பேரும் விபசாரத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சாம்ராஜ்நகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசாரத்தில் ஈடுபட்ட அருண்குமார், சந்தோஷ் மற்றும் 2 இளம் பெண்களையும் கைது செய்தனர்.

No comments: