Friday, 12 August 2011

ஒரே சூலில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு: வட்டவளையில் அதிசயம்(காணொளி இணைப்பு)

வட்டவளை லொனெக் பாற்பண்ணையில் பசு ஒன்று ஒரே சூலில் மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது. பொதுவாக பசுக்கள் ஒன்று அல்லது இரண்டு கன்றுகளை ஈனும். எனினும் ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது.
வட்டளை பெருந்தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட வட்டவளை லொனெக் பாற்பண்ணைக் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதாகும்.

பாற்பண்ணையில் 200 க்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன. பாற்பண்ணையின் நடவடிக்கைகள் நவீனமுறையில் இடம்பெறுவதோடு பாற்பண்ணையில் சுமார் 35 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
தனது பாற்பண்ணையிலுள்ள பசுவொன்று ஒரே தடவையில் கடந்த 3 ஆம் திகதி மூன்று கன்றுகளை ஈன்றதனால் இந்தப்பாற்பண்ணையின் நிருவாகியான ஜி.கிருஸ்ணமூர்த்தி பெருமைக்கொண்டுள்ளார்.

No comments: