Saturday, 1 October 2011

மன உளைச்சலாம்... வெளிநாட்டுக்கு பறக்கும் சோனா இதுதான்டா போலீஸ்!


பத்திரிகையாளர்கள் முன்பு வந்து சரண் என்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது நான் மூன்று கேள்விகள் கேட்பேன். அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். முதல் கேள்வி, என்னை நீ தொடக் கூடாத இடத்தில் தொட்டது உண்மையா? ரெண்டு நீ என் தொடை மேலே கையை வைக்க வந்தது உண்மையா? மூணாவது கேள்வி ஏய்... உன் ரேட் என்னடின்னு கேட்டது உண்மையா? இது மூணுக்கும் அவர் பதில் சொல்லிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்கணும். அப்புறம்தான் கேஸ் வாபஸ் வாங்கப்படும் என்றார்.

ஆனால் நேற்று மாலை ஆறு மணிக்கு தி.நகரிலிருக்கும் காவல் நிலையத்திற்கு சென்றார் சோனா. அங்கு என்ன அட்வைசிக்கப்பட்டாரோ? அன்றிரவே தான் சரணை மன்னித்துவிட்டதாக பத்திரிகையாளர்களுக்கு செய்தி கொடுத்துவிட்டார். கடிதம் மூலம் இந்த மன்னிப்பை கோரியிருக்கிறாராம் சரண்.

இன்று இரவு வெளிநாட்டுக்கு கிளம்புகிறார் சோனா. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். அதை தணிக்கும் பொருட்டுதான் இந்த பயணம். அப்படியே ஆந்திராவில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பதினைந்து நாட்கள் கழித்துதான் சென்னை திரும்புவேன் என்று நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார்.

'காயமே இது பொய்யடா' என்பதற்கு சோனா சொன்ன இன்னொரு பதில்தான் நல்ல எக்ஸாம்பிள். நானும் சரணும் ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம். பழசையெல்லாம் மறந்துட்டோம்....

No comments: