![]() |
| போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க நம்பகத் தன்மைவாய்ந்த நடவடிக்கையில் சிறிலங்கா இறங்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வொசிங்டனில் நேற்றுமுன்தினம் நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பிலேயே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் நம்பகமான விசாரணைகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஜெனிவாவில் உள்ளமனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்துள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே மார்க் ரோனர் இவ்வாறு கூறியுள்ளார். |
Saturday, 1 October 2011
நம்பகமான விசாரணை நடத்த சிறிலங்காவுக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கிறது அமெரிக்கா
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment