Wednesday, 10 August 2011

ஒரு புத்தில் 40 நாகப்பாம்பு குட்டிகள்(படங்கள் இணைப்பு)

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து 40 நாகப்பாம்புக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மரகதமுல்லை பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் இந்தப் பாம்புக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.





தோட்டத்தின் புற்று ஒன்றில் இருந்து வெளிவந்த இந்தப் பாம்புக் குட்டிகளை பிரதேச வாசிகள் பிடித்துள்ளனர். இவ்வாறு ஒரே தடவையில் அதிகளவில் பாம்புக் குட்டிகள் பிறந்நதாலும் சூழ்நிலை மாற்றத்தினால் அவற்றில் ஒரு சில மாத்திரமே உயிர் வாழ்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



இந்தப் பாம்புக் குட்டிகளை நேற்றிரவு வன ஜீவராசிகள் சரணாலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கசென்ற போதிலும் அங்கு எவரும் இருக்கவில்லையென பிரதேச வாசியான ஜயசூரிய குறிப்பிட்டார். பின்னர் அவர்கள் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் பாம்புகளை விடிவித்துள்ளனர்

No comments: