Tuesday, 27 September 2011

புலிகளை வேட்டையாடிய புலனாய்வு அதிகாரியே பலி


அம்பாறை மகாஓயா சிறப்பு அதிரடிப்படை முகாமில், அதே முகாமில் பணியாற்றும் பிரதம ஆய்வாளரால் சுட்டுக்கொல்லப்பட்ட உதவிக் காவல்துறை அத்தியட்சகர் சிசிரகுமார முத்தெட்டுவேகம கிழக்கில் புலிகளுக்கு எதிலான போரில் தீவிரமாகப் பங்கெடுத்தவர் என்று தெரியவந்துள்ளது.

உதவிக் காவல்துறை அத்தியட்சகர் சிசிரகுமார சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவில் முன்னர் பணியாற்றியவர்.

கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதேவேளை, தனது உயரதிகாரியை சுட்டுக்கொன்ற பிரதம காவல்துறை ஆய்வாளர் டி.எ. ஜயதிலக தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.

படுகாயமடைந்த அவர், மகாஓயா மருத்துவமனையில் இருந்து ஆபத்தான நிலையில் உலங்குவானூர்தி மூலம் கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டபோது நடுவழியில் மரணமாகியுள்ளார்

No comments: