| விடுதலைப்புலிகளின் கர்ணல் ரமேஷ் இலங்கையில் நடந்து முடிந்த போரின் போது விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த கர்ணல் ரமேஷ், போரின் இறுதிக் கட்டங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறி, அவரது மனைவி, வத்சலா தேவி, அமெரிக்காவின் நியூயார்க் நகர சிவில் நீதிமன்றம் ஒன்றில் இழப்பீடு தரக்கோரி இரண்டு வழக்குகளை தொடுத்திருக்கிறார். ரமேஷ் மனைவி வழக்கு : உருத்திரகுமாரன் செவ்வி இதில் ஒரு வழக்கில் இலங்கையின் இராணுவ உயர் அதிகாரி , மேஜர் ஜெனரல் ஷவீந்தர சில்வாவையும், மற்றொரு வழக்கில் , இலங்கை முப்படைகளின் தளபதி என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பிரதிவாதிகளாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். மஹிந்த, ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான வழக்கு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே என்கிறார் உருத்ரகுமாரன். கேட்கmp3 இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும் மாற்று மீடியா வடிவில் இயக்க போரின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியில் வரவேண்டும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த வழக்கை தாக்கல் செய்ததாகக் கூறுகிறார், வத்சலா தேவி சார்பில் இந்த வழக்கை தாக்கல் செய்த விஸ்வநாதன் உருத்ரகுமாரன். மக்களுக்கான நீதி கிடைக்கக்கூடிய அரசியல் மற்றும் சட்ட ரீதியிலான வாய்ப்பு இலங்கையில் இல்லாத காரணத்தினாலேயே இந்த வழக்கை தாம் அமெரிக்காவில் தாக்கல் செய்ததாகவும் உருத்ரகுமாரன் கூறுகிறார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அழைப்பாணையை பிறப்பித்துள்ளதாகவும், ஆனாலும் இதுவரை அந்த அழைப்பாணையை பிரதிவாதிகளிடம் கையளிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். |
Tuesday, 27 September 2011
மஹிந்தவுக்கு எதிராக கர்ணல் ரமேஷ் மனைவி வழக்கு (உருத்திரகுமாரன் செவ்வி)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment