![]() |
| அண்மையில் நோர்வேயில் தாக்குதல் நடத்திய நபருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் எனவே ஐரோப்பாவில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களிடம் இதுதொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு நோர்வேயில் உள்ள சிறிலங்கா தூதுவர் ரொட்னி பெரேரா நோர்வே வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சிறிலங்கா தூதுவரின் இந்த கோரிக்கையை நோர்வே தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதல் பாணியிலேயே நோர்வே தாக்குதலும் இடம்பெற்றுள்ளதாகவும் எனவே விடுதலைப்புலிகளுக்கு இத்தாக்குதலுடன் தொடர்பு இருக்கலாம் என தான் நம்புவதாகவும் சிறிலங்கா தூதுவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தூதுவரின் இந்த கோரிக்கை நகைப்புக்கிடமானது என்றும் தமிழ் மக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் மற்றுமொரு தீய எண்ணம் என்றும் ஐரோப்பாவில் உள்ள தமிழர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. |
Friday, 9 September 2011
நோர்வே தாக்குதலுக்கு புலிகள் தொடர்பாம் சிறிலங்கா தூதுவர் புதிய கண்டுபிடிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment