![]() |
| இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் குதார்‘ கொழும்புத் துறைமுகத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த இந்தியக் கடற்படைப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர். 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில் 25 அதிகாரிகளும், 160 கடற்படையினரும் கொழும்பு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை வரை இந்தியப் போர்க்கப்பல் கொழும்பிலேயே தரித்து நிற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தமான் கடற்பகுதியில் வேவு பார்த்த சீன வேவுக் கப்பல் ஒன்றை, இந்தியக் கடற்படை துரத்திச் சென்ற போது கொழும்புத் துறைமுகத்தில் அடைக்கலம் தேடியதாக கடந்தவாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் வேவு பார்க்கும் சிறப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட எந்தவொரு சீனக் கப்பலும் கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசிக்கவில்லை என்று சிறிலங்கா கடற்படை கூறியிருந்தது. இந்தநிலையிலேயே இந்திய கடற்படையின் போர்க்கப்பல் திடீரென கொழும்புக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
Friday, 9 September 2011
கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல் - ஓடி ஒளிந்த சீனக்கப்பலை தேடி வந்தது?
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment