Thursday, 25 August 2011

அமெரிக்க விமானங்களில் இருந்து அம்பாறையில் பொதிகள் வீச்சு (படங்கள் இணைப்பு)


இருபது நாடுகளின் விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கும் பசுபிக் வான் மீட்பு ஒத்திகையின் ஒரு கட்டமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் வான்வழியாகப் விநியோகப் பொதிகளை போடும் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் சி-130 இராட்சத விமானங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்துக்கு மேலாக பொதிகளை போடும் பயிற்சிகள மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகைப் பயிற்சியில் சிறிலங்கா, அவுஸ்ரேலியா, மலேசிய விமானப்படைகளின் தலா ஒரு விமானமும், அமெரிக்க விமானப்படையின் மூன்று விமானங்களும் பங்கேற்கவுள்ளன.

அதேவேளை நாளை சிறிலங்கா மற்றும் அமெரிக்க விமானங்களில் இருந்து பரா படையினரை தரையிறக்கும் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இரத்மலானைப் பகுதியில் இந்த ஒத்திகை நாளை பிற்பகல் 2 மணிக்கும் 4.30 மணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளதாக சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இரத்மலானை விமான்படைத் தளத்தை மையப்படுத்தி கடந்த திங்களன்று ஆரம்பிக்கப்பட்ட பசுபிக் வான் மீட்பு ஒத்திகையில் சிறிலங்கா விமானப்படையின் 150 அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளினதும் 300 வெளிநாட்டு விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.







No comments: