Tuesday, 12 July 2011

அச்சுவேலி- தொண்டைமானாறு வீதி மீண்டும் திறப்பு

அச்சுவேலி- தொண்டைமானாறு வீதி நேற்று பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.

போரினால் 1990ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.


பலாலிப் படைத்தளத்தின் கிழக்கு எல்லைக்குள் பல ஆண்டுகளாக சிக்கியிருந்த இந்த வீதியை சிறிலங்காப் படையினர் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த வீதி ஊடாக நேற்று பேருந்துச் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.

ஸ்பெய்ன் நாட்டு அரசாங்கம் மற்றும் ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ள இந்த வீதியை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திறந்து வைத்துள்ளார்.

No comments: