Tuesday, 12 July 2011

உயிரை மட்டும் காக்கும் நோக்கோடு சர்வதேசக் கடலில் தவிக்கும் எம் உறவுகளுக்கு உதவுவோம்

கொடிய சிங்கள அரசின் கோரப்பிடியிலிருந்து தமது உயிரைமட்டும் காக்கும் நோக்கோடு நியூசிலாந்து நோக்கி சர்வதேசக் கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இந்தோனேசியா கடற்படையால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக இந்தோனேசிய கடற்பரப்புக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் இந்தோநேசிய அரசினால் சிறீலங்காவிற்கு திருப்பியனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாகவும், அவ்வாறு நடைபெற்றால் தாம் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அக்கப்பலில் உள்ள எம் அன்பு உறவுகளில் ஒருவரான திரு.செல்வக்குமார் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களினுடையதே.
அந்த வகையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள எமது ஊடக அறிக்கையினை உங்கள் ஊடகங்களினூடாக மக்கள் மத்தியில் கொண்டுசென்று உடனடியாக மக்களை செயற்படவைக்க உதவுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
ஊடகப் பிரிவு
பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

No comments: