Tuesday, 12 July 2011

புதன்கிழமை சென்னை வருகிறார் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!!

 வரும் புதன்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரசிகர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ரஜினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். 

ரஜினிகாந்த்தின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அங்கேயே ஓய்வு எடுத்து வந்தார்.

தற்போது அவரது உடல்நிலை நூறு சதவீதம் குணமாகி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரை அழைத்து வர மூத்த மகள் ஐஸ்வர்யா நேற்று சிங்கப்பூர் சென்றார்.

புதன்கிழமை இரவு விமானத்தில் அவர் சென்னை திரும்புகிறார். அவர் சென்னை திரும்பியதும் ராணா படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்கபடுகின்றது . 

ரஜினி வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள், அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். விமான நிலையத்திலிருந்து அவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் வரை வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


No comments: