இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக அளவில் தொடர்ந்து கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்று நோய் ஏற்படும் என தெரியவந்துள்ளது.
எனவே கைத்தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயம் குறித்து குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கைத்தொலைபேசி எந்திரங்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சு புற்று நோய் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும் அதை தடுத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது.
சுவீடனை சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு மூளையின் நரம்பு திசுக்களில் கட்டி ஏற்படுகிறது. பிற்காலத்தில் அது மூளை புற்று நோயாக மாறும் வாய்ப்பு இருப்பதை கண்டறிந்தனர்.

No comments:
Post a Comment