Saturday, 2 July 2011

திகார் ஒலிம்பிக் ” - களம் இறங்கும் முக்கிய கைதிகள்

புதுடில்லி: திகார் ஜெயிலில் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் கைதிகள் இடையிலான விளையாட்டு போட்டியில் ஜெயிலில் இருக்கும் முக்கிய உயர் அந்தஸ்தில் இருந்த கைதிகள் பலர் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்துடன் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை , காமன்வெல்த் ஊழலில் சிக்கி உள்ளே இருக்கும் கல்மாடி செய்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் இவர் வெளியே இருக்கும் நேரத்தில் இந்த ஜெயில் விளையாட்டு முகமைக்கு உதவி புரிய வேண்டும் என்று விரும்பினாராம்.

காமன்வெல்த் போட்டி நடத்தி இதில் பல கோடி ஊழல் புரிந்த குற்றத்திற்காக சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 2 மாதங்களாக ஜெயிலில் இருந்து வரும் அவர் எவ்வித சலனமுமின்றி சந்தோஷமாக இருப்பதாக ஜெயில் வட்டாரம் தெரிவிக்கிறது.

வரும் 2016 ல் ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்துவது எப்படி என்று சிந்தித்து கொண்டிருந்த நேரத்தில் அவர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் டில்லியில் எம்.பி.,யாக இருக்கும் இவருக்கு திகார் ஜெயிலில் தனி மரியாதை இருந்து வந்தது. ஜெயிலில் நடத்தப்படும் திகார் ஒலிம்பிக் போட்டிக்கு உரிய உதவிகள் செய்ய வேண்டும் என நினைத்திருந்தாராம். இதனை இவரது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

வாலிபால், கிரிக்கெட், கூடைப்பந்து: ஜெயில் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் சுனில் குப்தா இது குறித்து கூறுகையில்; திகார் ஒலிம்பிக்ஸ் என்பது ஜெயிலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. இது கடந்த 15 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நடக்கும் இந்த போட்டியில் ஒரே ஜெயிலுக்குள் உள்ள கைதிகள் , ஏனைய ஜெயில் கைதிகள் மோதிக்கொள்ளும் படி ஏற்பாடு செய்யப்படுகிறது. வாலிபால், கிரிக்கெட், கூடைப்பந்து, கோக்கோ, கபடி, செஸ், கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டிகள் நடத்தப்படுவதன்மூலம் கைதிகள் மிகுந்த உற்சாகம் அடைவர். வரும் திகார் ஒலிம்பக் போட்டியில் கல்மாடி பங்கேற்பாரா என்ற கேள்விக்கு குப்தா பதில் அளிக்கையில் “ அவர் விளையாட்டு உலகில் ஒரு பெரிய மனிதர், திகார் விளையாட்டு என்பது ஒரு சிறிய நிகழ்வு ” என்றார்.

வரவிருக்கும் இந்த விளையாட்டு போட்டியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிஜெயிலில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜா, அவரது உதவியாளர் சந்தோலியா, எம்.பி,. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வா, இயக்குனர் வினோத் சோயங்கா. யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா ஆகியோரும் இந்த போட்டியில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயில் அதிகாரிகளுடன் கல்மாடி அரட்டை: இந்நிலையில் திகார் ஜெயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நீதிபதி பிரிஜேஸ் குமார் கார்க் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இவர் செல்லும் போது கல்மாடி ஜெயில் சூப்பிரண்டுடன் அவரது அறையில் டீ , பிஸ்கட் எடுத்துக்கொண்டபடி ஹாயாக சிரித்து

No comments: