Saturday, 2 July 2011

இலங்கையிடம் இருந்து 80 தாக்குதல் படகுகளை வாங்கும் இந்தியா !


இந்தியக் கடற்பரப்பில் பாதுகாப்பைப் பலப்படுத்தவுள்ள இந்திய கடற்படையினர் அதற்காக இலங்கையிடமிருந்து அதிவேகப் படகுகளைக் கொள்வனவு செய்யவுள்ளனர். இலங்கையில் இயங்கிவரும் டுபாய் அடிப்படையான மல்ரிநஷனல் கம்பனியான கப்பல் உற்பத்தியாளர்களான சோலாஸ் மரைன் லங்கா பிரைவேற் லிமிற்றட்டிடமிருந்து 80 படகுகளை இந்தியா கொள்வனவு செய்கிறது. இதற்கான பேச்சுக்கள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இந்தப் படகுகள் 67 மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி படகுகள் மணிக்கு 45-50 மைல் வேகமுடையதாகக் கட்டப்படவுள்ளன. கரையோரப் பாதுகாப்புக் கடமைகளிலும் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனவாம்.

No comments: