இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இலங்கை இராணுவத்தின் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் இராணுவ பயிற்சிக்கழகங்களில் திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும்.
இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. டெல்லியில் நேற்று இலங்கை இராணுவத்தின் செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்க தலைமையிலான குழுவுடன் இந்திய இராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவிற்கான கூடுதல் தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங். தலைமையிலான குழு டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளதென இந்திய இராணுவ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப்போர் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
தமிழர்களை இனப்படு கொலை செய்த இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்க உலகநாடுகளுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில்,
அதற்கு நேர் மாறாக, தமிழினப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய இராணுவம் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலையை ஆதரிக்கிறது என்பது மட்டுமின்றி தமிழர்களின் குரலாக எதிரொலித்த தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தையும் அவமதிப்பது ஆகும். என கூறப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் இராணுவ பயிற்சிக்கழகங்களில் திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும்.
இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. டெல்லியில் நேற்று இலங்கை இராணுவத்தின் செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்க தலைமையிலான குழுவுடன் இந்திய இராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவிற்கான கூடுதல் தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங். தலைமையிலான குழு டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளதென இந்திய இராணுவ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப்போர் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
தமிழர்களை இனப்படு கொலை செய்த இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்க உலகநாடுகளுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில்,
அதற்கு நேர் மாறாக, தமிழினப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய இராணுவம் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலையை ஆதரிக்கிறது என்பது மட்டுமின்றி தமிழர்களின் குரலாக எதிரொலித்த தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தையும் அவமதிப்பது ஆகும். என கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment