Monday, 30 January 2012

நெடியவனை கைது செய்ய சர்வதேச பிடியாணை!

 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயட்பட்டளர் நோர்வேயில் இருந்து செயல்பட்டு வருகின்ற நெடியவனுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.நெடியவனின் சொந்தப் பெயர் சிவபரன் பேரின்பநாயகம்.1976 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி பிறந்தவர். பிறந்த இடம் வட்டுக்கோட்டை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வயதில் சேர்ந்தவர். தலைவர் வே. பிரபாகரனுக்கு மிக நெருக்கமான ஒருவரானார்.  கே.பி என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று சுயம் பிரகடனம் செய்து கொண்டார் நெடியவன்.
பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக இவரை கைது செய்கின்றமைக்கு உதவி செய்ய வேண்டுமென சர்வதேச பொலிஸாரிடம் இலங்கை கோரி உள்ளது.

No comments: