![]() |
| கனேடிய மாகாணத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் மாகாணங்களுக்கான தேர்தல் ஒக்ரோபர் 6ம் நாள் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் விடுதலைப் புலிகள் சார்பு குழுக்கள் பலவும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக சிறிலங்கா அரசாங்கம் கவலையடைந்துள்ளது. இதுதொடர்பாக கனேடிய வெளிவிவகார அமைச்சுக்கு ரொறன்ரோவில் உள்ள சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் கனேடிய வெளிவிவகார அமைச்சுக்கு கூறியுள்ளார். அதேவேளை விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகளின் ஆதிக்கம் கனேடிய தேர்தலில் அதிகரித்து வருவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவலையடைந்துள்ளதாகவும் சித்திராங்கனி வகீஸ்வரா கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார். |
Wednesday, 7 September 2011
மாகாணத் தேர்தலில் புலிகள் சார்பு குழுக்கள் ஆதிக்கம் கனடாவை எச்சரிக்கிறது சிறிலங்கா
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment