![]() |
| யாழ்ப்பாண நகரின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் கண்காணிப்பு காணொலிப் பதிவுக் கருவிகளைப் பொருத்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு நகரில் பாதுகாப்பு சோதனைச்சாவடிகளை அகற்றிய பின்னர், முக்கிய இடங்களில் கண்காணிப்பு காணொலிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களிலும், படை முகாம்களின் முன்பாகவும் கண்காணிப்பு காணொலிப் பதிவுக் கருவிகளைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்ப காணொலிப் பதிவுக் கருவிகளைப் பொருத்துவதன் இரகசியமாக கண்காணிக்க முடிவதுடன், பாதுகாப்பையும் பலப்படுத்த முடியும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கருதுவதாகத் தெரியவந்துள்ளது. இத்தகைய உயர் தொழில்நுட்பக் கருவிகளை கொள்வனவு செய்வதால் அடுத்த ஆண்டுக்கான சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவினம் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினம் 1300 கோடி ரூபாவினால் அதிகரிக்கும் என்று சிறிலங்கா நிதியமைச்சு மதிப்பிடு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
Sunday, 4 September 2011
யாழ்ப்பாண நகரைக் கண்காணிக்க காணொலிப் பதிவுக் கருவிகள்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment