Sunday, 4 September 2011

லண்டனில் நாளை த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்திக்கின்றனர்


.
4-09-2011 தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் லண்டன் தமிழர்களைச் சந்திக்கவுள்ளனர்.

லண்டன் ஹரோ பகுதியில் உள்ள அலெக்ஸ்ஸான்ரா வீதியிலுள்ள சொரஸ்ரியன் சென்ரரில் நாளைமாலை சுமார் 5.30 மணிக்கு இச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சந்திப்பின்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்க உள்ளதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தீர்வு தொடர்பாக கலந்துரையாட உள்ளதாகவும் அறியப்படுகிறது.

குறிப்பாக புலம் பெயர் வாழ் தமிழ் சமூகம் என்ன நினைக்கிறது, அவர்களின் கருத்துக்கள் தான் என்ன என்பது தொடர்பாக கேட்டு ஆராயப்படவுள்ளது.

புலம்பெயர் தமிழ் சமூகத்தின் கருத்துக்களை கேட்டறிந்து அதனைத் தாம் உள்வாங்க உள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

5.30 pm between 9.00 pm
Zoroastrian Centre.
442-452 Alexandra Avenue,
South Harrow,
Harrow,
HA2 9TL

No comments: