
புளோரிடா மாகாணத்திலுள்ள தொடர்மாடிக் கட்டிடமொன்றிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல்கேரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கோடைக் காலத்தை கழிப்பதற்காக வந்த வான்யா அமோக்கோவரீவா (வயது 22) ரலிஸ்டா தாம்போவா (வயது 23) ஆகிய இரு பெண்களும் குறித்த தொடர் மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் தங்கியுள்ளனர்.
இவர்கள் தங்கியிருந்த வீட்டின் குளியலறை உட்பட ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக குறித்த பெண்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் கமெராக்கள் மூலம் யாரோ அவதானித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இக்கருவிகள் புகை எச்சரிக்கைக்கான கருவிகளாக இருக்கும் என்றே இம்மாணவிகள் ஆரம்பத்தில் கருதியிருந்தனர். ஆனால் அவை கமெராக்கள் என்பதை அறிந்து அவர்கள் மிக அதிர்ச்சியடைந்துள்ளனர்.
'இது உண்மையில் பயங்கரமானது. இவ்வாறான சம்பவம் எனக்கும் எனது நண்பிக்கும் நடக்குமொன்று கொஞ்சமேனும் எதிர்பார்க்கவில்லை.
'நாங்கள் ஒரு கோடைப் பருவத்தை அமெரிக்காவில் கழிக்கவும் இங்கு வேலை செய்யவுமே வந்தோம்' என தாம்பஸோவோ தெரிவித்துள்ளார்.
இக்கமெராக்களை யார் பொருத்தினார்கள் என்பதை கண்டறிவதற்கு புலனாய்வாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
.jpg)

No comments:
Post a Comment