| ||
| லிபியாவில் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு போராட்டத்தின் மூலம் மக்கள் முடிவு கட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். அவரது மனைவி ஷபியா, மகள் ஆயிஷா மற்றும் 2 மகன்கள் குடும்பத்துடன் அல்ஜீரியா நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். அங்கு அவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது அங்கு புதிய அரசு அமைந்துள்ளது. ஆனால் கடாபி எங்கு இருக் கிறார் என்பது மர்மமாக உள்ளது. இந்த நிலையில் தனது தந்தை கடாபி நலமுடன் இருப்பதாக அவரது மகள் ஆயிஷா தெரிவித்துள்ளார். சிரியாவை சேர்ந்த அராஸ் என்ற டெலிவிஷனுக்கு டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவரது டெலிபோன் பேச்சு அந்த டி.வி.யில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. டெலிபோன் செய்தியில் ஆயிஷா கூறியிருப்பதாவது:- எனது தந்தை கடாபி மிக்க நலமுடன் உள்ளார். அவரை தலைவராக பெற லிபியா மக்கள் பெருமைப்பட வேண்டும். புரட்சியாளர்களுக்கு எதிராக அவர் போராடி வருகிறார். அவருக்கு எதிராக புரட்சி செய்த தலைவர்களை நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக பொங்கி எழுந்து நசுக்க வேண்டும். புதிதாக ஆட்சி அமைத்துள்ளவர்கள் தேச துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ளார். |
Sunday, 25 September 2011
கடாபி நலமுடன் இருக்கிறார்” மகள் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment