என்.டி,எம்.சி அரங்கில் நடைபெற்ற விழா ஒன்றில் சரத்பவார் கலந்து கொண்டு திரும்பும் போது, எதிர்பாராத விதமாக, ஹர்விந்தர் சிங் என்ற அந்த இளைஞர், பவாரின் கன்னத்தில் அறைந்தார். இதனையடுத்து சரத்பவார் அருகே இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரைத் தாக்கிப் பின் கைது செய்தனர்.
மேலும் சரத்பவாரை கொல்லத்தான் நினைத்தேன் என்று கூறிய அந்த இளைஞர், விளம்பரத்துக்காக அவர் கன்னத்தில் அறையவில்லை என்று கூறித் தனது கையைக் கத்தியால் கிழித்துக் கொண்டார்.
இந்தச் சம்பவம் புதுடில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே இளைஞர் தான், ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மீது தாக்குதல் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment