
சிம்புவுக்கென்றே டைட்டில்களை ஸ்பெஷலாக ரூம் போட்டு யோசிப்பார்கள் போலிருக்கிறது. கெட்டவன் என்று ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு ஊர் உலகத்தையை தன் பக்கம் திரும்ப வைத்தவர் சிம்பு. இப்போது அவரிடம் கால்ஷீட் கேட்கும் போதே மடையன் என்ற தலைப்பை சொல்லி அதிர வைத்திருக்கிறார் ஒரு இயக்குனர். இவருக்கும் சிம்புவுக்கும் நட்பு 'இப்ப்ப்ப்ப்ப்ப்படி' (இதை படிக்கும் போது பத்து விரல்களையும் இறுக கோர்த்து வைத்துக் கொண்டால் ஒரு எஃபெக்ட் கிடைக்கும்) என்பதால்தான் இந்த தைரியம் அவருக்கு வந்திருக்கிறது போலும்.
சிம்பு நடித்த சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் கணேஷ். அந்த நட்பின் காரணமாக சிம்பு நடிக்கும் வேறு படங்களில் கூட இவர் சிம்புவுடனேயே ஒட்டிக் கொண்டிருப்பார். எஸ்.டி.ஆரின் ரெகமன்டேஷனால் விண்ணை தாண்டி வருவாயா படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இதே கணேஷை இயக்குனராக்கி முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தயாரித்தார்.
சிம்புவின் நண்பராச்சே, சும்மாயிருக்க முடியுமா? படப்பிடிப்பில் சிம்புவை விடவும் பெரிய அட்டகாசமாம்! இந்தாங்க செட்டில்மென்ட் என்று கணேஷை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தானே படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார் எல்ரெட் குமார்.
சரி, பழங்கதை எதற்கு? இந்த கணேஷ் க்ளவுட் நைன் நிறுவனத்திற்கு ஒரு கதை சொன்னாராம். அவர்களுக்கும் பிடித்துவிட்டது. இதற்குதான் மடையன் என்று பெயர் வைத்திருக்கிறாராம் அவர். படத்தில் சிம்புவை நடிக்க வைக்கும் முயற்சி நடந்து வருகிறது. கணேஷுக்காக சிம்புவும் கால்ஷீட் கொடுக்க கூடும் என்பதுதான் இப்போதைய நிலவரம்.

No comments:
Post a Comment