![]() |
| நடிகர் எஸ்.பி.பி. சரண் தன்னிடம் தவறாகநடந்து கொண்டதாக கூறப்பட்ட வீடியோஆதாரத்தை நடிகை சோனா கொடுக்கவில்லை என்று காவல்துறை மறுத்துள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையரை நேரில்நடிகை சோனா நேற்று சந்தித்து புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், எஸ்.பி.பி. சரண் மீதுவிளம்பரத்துக்காகவோ பணத்துக்காகவோபாலியல் புகார் கூறவில்லை. தன்னிடம் எஸ்.பி.பி. சரண் தவறாக நடந்துகொண்டதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் அதை ஆணையரிடம் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார். ஆனால் நடிகை சோனா வீடியோ ஆதாரம் எதுவும் தரவில்லை என்று காவல்துறை தரப்பில்மறுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு சென்ற பின் வீடியோவை உதவியாளரிடம் கொடுத்து அனுப்புவதாக கூறிய சோனா, ஆனால் இதுவரை வீடியோ ஆதாரத்தைஅனுப்பி வைக்க வில்லை என்று காவல்துறை உயரதியாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் இது பற்றி கருத்து கேட்க நடிகை சோனா தொடர்பு கொண்டபோதுசெல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எஸ்.பி.பி. சரணை மிரட்டுவதற்காகவே சோனா இப்படி வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறியதாக தெரியவந்துள்ளது ![]() |
Saturday, 24 September 2011
சோனாவின் பலாத்கார வீடியோ தமக்கு கிடைக்கவில்லையாம் போலீசார் கவலை!
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment