![]() |
| சினிமா உலகைப் பொறுத்த வரையில் ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால், சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அதுமட்டுமின்றி சில நடிகர்கள் சம்பளத்துடன் சில ஏரியாக்களின் விநியோக உரிமையும் வாங்கிக் கொள்கிறார்கள். இதற்கு தமிழ் சினிமாவும் விதிவிலக்கல்ல. சரி உங்கள் அபிமான திரை நட்சத்திரங்களின் (ஒரு படத்திற்கான) சம்பள விவரங்களை பார்ப்போம். அஜித் - 15 கோடி ரூபாய் விஜய் - 15 கோடி ரூபாய் சூர்யா - 15 கோடி ரூபாய் + தெலுங்கு உரிமை விக்ரம் - 10 கோடி ரூபாய் கார்த்தி - 10 கோடி ரூபாய் + தெலுங்கு உரிமை தனுஷ் - 5 முதல் 7 கோடி ரூபாய் சிம்பு - 5 கோடி ரூபாய் + சென்னை விநியோக உரிமை விஷால் - 3 கோடி ரூபாய் ஆர்யா - 2 கோடி ரூபாய் ஜீவா - 1.50 கோடி ரூபாய் இனி சூப்பர் ஸ்டார், உலகநாயகன் ஆகியோரின் சம்பள விவரங்களை பார்ப்போம். ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் 'எந்திரன்' படத்தில் நடிப்பதற்கு 24 கோடி ரூபாயும், படத்தின் லாபத்தில் ஒரு பங்கும் சம்பளமாக பேசப்பட்டதாம். உலக நாயகனுக்கு எப்படியும் 20 கோடி ரூபாய் சம்பளமாக இருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம். 'பில்லா' வெற்றிக்குப் பிறகு 'ஏகன்', 'அசல்' என தொடர்ந்து இரு தோல்விப் படங்களைக் கொடுத்தவர் அஜீத். அதன் பிறகு வந்த வெற்றிப் படம் 'மங்காத்தா'. இந்த ஒரு படம் மூலம் இழந்த தன் மார்க்கெட் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ள அஜீத், தனது அடுத்த படத்துக்கு கேட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா ரூ 17 கோடி! இந்த சம்பளம் இப்போது அவர் நடிக்கும் 'பில்லா 2' படத்துக்கு கிடையாது ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கானது. ஒருவேளை 'பில்லா 2' ஜெயித்துவிட்டால், அஜீத்தின் கால்ஷீட் ரேட் இன்னும் எகிறிவிடும் என்பதால், இந்தத் தொகையை உடனடியாகத் தர சம்மதித்தாராம் ரத்னம். இதற்கிடையே முதல் கட்டப்படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள 'பில்லா 2' படத்தை ரூ. 40 கோடிக்கு வாங்கிக் கொள்ள இரு நிறுவனங்கள் பேரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் படத்தைத் தயாரித்துவரும் இந்துஜா குழுமமோ ரூ. 50 கோடிக்கு மேல் எதிர்ப்பார்க்கிறார்களாம். யாரும் எதிர்பாராமல், இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸே வாங்கி வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள். என் சாவு அஜித்குமார் யார் என்று நிச்சயமாக இந்த உலகிற்கு எடுத்துக்காட்டும் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் குறிப்பிடுகையில், 'அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன். அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். அப்போது என்னை அவரது சொந்த மகனைப்போல பாசம் காட்டினாங்க' என்று கூறியுள்ளார் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் அஜித்தின் பேச்சினால் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அஜித்தை மிரட்டியதாகக் கூறப்பட்டது இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் 'ஜனநாயகப் பண்புகளில் நம்பிக்கை உள்ளவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்போதும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனதில் தோன்றியதை விழாவில் பேசினேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா அவர்களும் நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்போதும் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்இ' என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'இப்போது எனக்கு 40-வயதாகின்றது. இன்னும் 20-வருடம் உயிரோடு இருப்பேனா என்று கூடத் தெரியாது. ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ்ந்தான் என்ற அடையாளம்இ அவன் சாவுக்குக் கூடுகின்ற கூட்டத்தில்தான் தெரியும் என்று சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜித்குமார் யார் என்று நிச்சயமாக இந்த உலகிற்கு எடுத்துக்காட்டும்' என்று தெரிவித்துள்ளார் |
Saturday, 24 September 2011
என் சாவு அஜித்குமார் யார் என்று நிச்சயமாக இந்த உலகிற்கு எடுத்துக்காட்டும்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment