Friday, 2 September 2011

காதலியை மணந்தார் யுவன் ஷங்கர் ராஜா! (படங்கள் இணைப்பு)


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் திருமணம் திருமலையில் நேற்று நடந்தது. இளையராஜாவின் மகனும், பிரபல இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜாவுக்கும் சுஜாயா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் முறைப்படி திருமணம் நடந்தது. அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜாவுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜாவுக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் மோகன் & மைதிலி தம்பதியின் மகள் ஷில்பாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து, சமீபத்தில் நிச்சயத்தார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் திருப்பதி திருமலையில் நேற்று காலை 9 மணிக்கு நடந்தது.

மணவிழாவில் இளையராஜா, அவருடைய மனைவி ஜீவா, மகள் பவதாரணி, மருமகன் சபரி, இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், தயாரிப்பாளர்கள் தியாகராஜன், விஷ்ணு வரதன், அனுவரதன், வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சுப்பு, கிருஷ்ணா, வாசுகி மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் அண்ணன் கார்த்திக் ராஜா, அவருடைய மனைவி ராஜி உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக இளையராஜா தனது குடும்பத்தினர் மற்றும் மணமக்களுடன் ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். இன்று மாலை சென்னையில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

No comments: