Tuesday, 2 August 2011

மும்பையில் நயன்தாரா, பிரபுதேவா திருமணம்

அண்மையில் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்த பிரபுதேவா தற்போது தனது காதலியான நயன்தாராவை வெகுவிரைவில் திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

சென்னை அல்லது கேரளாவில் கல்யாணத்தை நடத்தினால் ரசிகர்களும் பத்திரிக்கைக்காரர்களும் 'தொல்லையாக' அமைவார்கள் என்று அஞ்சுவதால் கல்யாணத்தை மும்பையில் நடத்த தீர்மானித்துள்ளார்களாம்

மும்பைக்கு கல்யாணத்தை மாற்றலாம் என்று முக்கிய நடிகர் ஒருவர்தான் பிரபுதேவாவுக்கு புத்திமதி கூறியுள்ளாராம். அங்கு வைத்தால்தான் இந்த மீடியா தொல்லையைத் தவிர்க்கலாம் என்பது அவரது அறிவுரையாம். தற்போது நயனதாராவைக் கல்யாணம் செய்து கொள்ள படு வேகமாக ஏற்பாடுகளை செய்துவருகிறார்.

மிக மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் திருமணத்திற்கு அழைக்கப் போகிறார்களாம் இருவரும்

No comments: