தாய்லாந்து நாட்டில் போக்குவரத்து விழிப்புணர்வூட்டல் பிரசாரத்தில் ஒரங்குட்டான் குரங்குகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
அந்நாட்டு அரசின் ஆதரவுடன் இப்பிரசாரம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வுப் பிரசாரத்துக்காக இவை வீதிகளில் சைக்கிள்களை ஓட்டிச் சென்றன.
தலைமைக் குரங்கின் பெயர் பம். வயது 08. இது வெள்ளையும் மஞ்சளும் கலந்த ரீசேட் அணிந்து இருந்தது. நீல நிற சைக்கிள் ஒன்றில் வீதி உலா வந்தது. இந்த நீல நிற சைக்கிள் மீது இதற்கு அலாதிப் பிரியம்.
பம்முடன் கூடவே இரு குரங்குகள் இப்பிரசாரத்தில் பங்கேற்று இருந்தன. ஆனால் பம்மின் பரிவாரங்களில் ஒன்று தலைக்கவசம் அணிந்து இருக்கவில்லை.
இவ்விழிப்புணர்வுப் பிரசாரம் பொதுமக்களை குறிப்பாக குழந்தைகளை பெரிதும் ஈர்த்து உள்ளது.
பம்மும் அதன் பரிவாரங்களும் பாங்கொக்கில் உள்ள டுசிட் மிருகக்காட்சிச்சாலையைச் சேர்ந்தவை


அந்நாட்டு அரசின் ஆதரவுடன் இப்பிரசாரம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வுப் பிரசாரத்துக்காக இவை வீதிகளில் சைக்கிள்களை ஓட்டிச் சென்றன.
தலைமைக் குரங்கின் பெயர் பம். வயது 08. இது வெள்ளையும் மஞ்சளும் கலந்த ரீசேட் அணிந்து இருந்தது. நீல நிற சைக்கிள் ஒன்றில் வீதி உலா வந்தது. இந்த நீல நிற சைக்கிள் மீது இதற்கு அலாதிப் பிரியம்.
பம்முடன் கூடவே இரு குரங்குகள் இப்பிரசாரத்தில் பங்கேற்று இருந்தன. ஆனால் பம்மின் பரிவாரங்களில் ஒன்று தலைக்கவசம் அணிந்து இருக்கவில்லை.
இவ்விழிப்புணர்வுப் பிரசாரம் பொதுமக்களை குறிப்பாக குழந்தைகளை பெரிதும் ஈர்த்து உள்ளது.
பம்மும் அதன் பரிவாரங்களும் பாங்கொக்கில் உள்ள டுசிட் மிருகக்காட்சிச்சாலையைச் சேர்ந்தவை



No comments:
Post a Comment